முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர், மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு … Read more

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளார். குவெட்டா நகரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. பலுசிஸ்தானில் லாஸ்பெலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது பாலத்தின் தூண் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

‛என்னை ஹிந்து என்று அழைக்க விருப்பம்: கேரள கவர்னர் ஆரிப் கான் பேச்சு| ‛Want to call me a Hindu: Kerala Governor Arif Khans speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தப்புரம்: என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறியுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு, கேரள கவர்னர் ஆரிப் கான் கூறுகையில், என்னை ஹிந்து என்று அழைக்க விரும்புகிறேன். காலனித்துவ காலத்தில் ஹிந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர் போன்ற சொற்களை பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது, ஏனென்றால் குடிமக்களின் சாதாரண உரிமைகளை கூட தீர்மானிக்க ஆங்கிலேயர்கள் … Read more

நடிகை உர்ஃபி ஜாவேத்; உடலை மறைக்க ஆடை கொடுக்க முன்வந்த இளம்பெண்! – என்ன நடந்தது

மாடல் மற்றும் டி.வி நடிகையான உர்ஃபி ஜாவேத் அணியும் ஆடைகள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் விதமாகவே இருக்கும். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக வெளியில் வந்தார். இதனால் அவர்மீது பா.ஜ.க பெண் பிரமுகர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து மும்பை போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். உர்ஃபி ஜாவேத்தும் போலீஸார் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். தன்னுடைய தொழிலுக்கு இது போன்ற ஆடை அவசியமாக இருக்கிறது என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். உர்ஃபி ஜாவேத் இந்தப் பிரச்னை முடியும் முன்பு, … Read more

சுவிஸில் சமீபத்தில் குடியேறிய தந்தை – மகனான 2 இலங்கை தமிழர்கள் மரணம்! வெளியான முதல் புகைப்படம்

சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 2 இலங்கை தமிழர்கள் உயிரிழப்பு இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் Thanapalasingham Kannan (69) மற்றும் Kannan Suresh (34). இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள். Thanapalasinghamமும், Kannan-ம் சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்கள். இந்த நிலையில் சென்.கேலன் (St.Gallen) நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். புகைப்படம் காரை Kannan ஓட்டிய நிலையில் … Read more

குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விருதுநகர்: குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில், விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்

திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 229 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 22 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை! – பழிக்குப் பழியாக நடந்ததா?

தூத்துக்குடி, கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கருப்பு என்ற கருப்பசாமி. லாரி டிரைவரான இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்று இரவு தன்னுடைய மாமியார் வீடு இருக்கும் தெற்கு சங்கரப்பேரிக்கு தன்னுடைய மனைவியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது இவரை 8 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்ட கருப்பசாமி மாமியாரின் … Read more

எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின்

போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உக்ரைனில் குவியும் படைகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், லுஹான்ஸ்க் முதல் டொனெட்ஸ்க் வரையிலும், சபோரிஜியா மற்றும் கெர்சன் முழுவதும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Getty Images உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் … Read more

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது – ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும். நாட்டின் ஒவ்வொரு கிராமம், தொகுதி, மற்றும் நகரங்களிலும் … Read more