ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மீண்டும் போட்டி,

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவதாக என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு … Read more

காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

சென்னை: காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு ஆளுநரும், முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்பட கண்காட்சியையும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

விருதுநகர்: 17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டுவெளியேறிய 33 வயது பெண்… போக்சோ வழக்கில் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் 17 வயது சிறுவன் ஒருவன் மாயமானார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் விசாரணையில், மாயமான சிறுவன் கன்னியாகுமரியில் இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச்சென்ற போலீஸார், சிறுவனை மீட்டு அவனோடு தங்கியிருந்த 33 வயதான பெண்ணையும் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும்படி பல தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், “படிப்பை பாதியில் … Read more

தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலப்பு – தீவிபத்து ஏற்படும் அபாயம் – பொதுமக்கள் பீதி…

சென்னை: வடசென்னை தண்டையார் பேட்டை அருகே கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில்  தொற்றுநோய் மற்றும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனே கச்சா எண்ணை வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து சரி … Read more

திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவின் 9வது நாளான இன்று வைர தேரோட்டம் தொடங்கியது

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவின் 9வது நாளான இன்று வைர தேரோட்டம் தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் வைர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 1¼ லட்சம் வழக்குகள் பதிவு

பெங்களூரு:- 1¼ லட்சம் வழக்குகள் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சாலை விதிகளை மீறிவருவதால் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாகனங்கள் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 1¼ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து … Read more

`லவ் ஜிகாத் தடுப்பு சட்டம் வேண்டும்’ – மும்பையில் இந்து அமைப்புகள் பேரணி

மும்பையில் லவ் ஜிகாத் திற்கு எதிராக சகால் இந்து சமாஜ் சார்பாக இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி நடத்தப்பட்டது. தாதரில் தொடங்கிய, இதில் ஆயிரக்கணக்கானோர் காவி உடைகளுடன் கலந்து கொண்டனர். பேரணி பிரபாதேவி காம்கார் மைதானத்தில் சென்று முடிந்தது. அங்கு பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். தெலங்கானாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய பேச்சாளர் ராஜா சிங் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றினார். … Read more

‘ஜி-20’ கருத்தரங்கம் சென்னையில் நாளை துவக்கம்

சென்னை: ஜி – 20′ அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை துவங்க உள்ளது. உலக பொருளாதாரத்தில் உள்ள முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின், 2022 – 23ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து, … Read more

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். வீரர்களின் தியாகங்கள் ஒருபோது மறக்கப்படாது. மேலும் உழைக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தும்’ பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஜனாதிபதி உரையுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். பிரதமர் ஆலோசனை பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் கொள்கை முயற்சிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி உரை இரு அவைகளின் கூட்டு … Read more