பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 நேரடியாக ரொக்கமாகவே வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 நேரடியாக ரொக்கமாகவே வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பைகளை கொண்டு வர வேண்டும், இலவச பை வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறினார்.

கடுங்குளிரில் நடுங்கும் காஷ்மீர்; உறைநிலைக்கு கீழ் பதிவாகும் வெப்பநிலை

ஸ்ரீநகர், இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிக்காலம் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு பதிவானதிலேயே மிகக் குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் தற்போது காணப்படுகிறது. காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அதிக குளிர் காரணமாக தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்து காணப்படுகிறது. இதே போல் காஷ்மீரில் உள்ள குல்மார்க், பராமுல்லா, … Read more

“பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருடன் நிற்பது என் கடமை!" – ராகுலுடன் யாத்திரையில் இணையும் முஃப்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களை நேரில் சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உட்பட ஒன்பது மாநிலங்களை ராகுல் காந்தி கடந்துவிட்டார். அடுத்தகட்டமாக ராகுல் காந்தி ஜனவரி 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் யாத்திரையைத் தொடங்கவிருக்கிறார். பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் இதில் கலந்துகொள்ளுமாறு உத்திரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டவர்களுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. … Read more

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிரிழப்பு

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

மகளின் ஆபாச வீடியோவை பரப்பியவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் படுகொலை: 7 பேர் கைது| Army soldier killed for beating those who spread his daughters pornographic video: 7 arrested

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அகமதாபாத்: குஜராத்தில் தன் மகளின் ஆபாச ‘வீடியோ’வை இணையத்தில் வெளியிட்டதை தட்டிக்கேட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரரை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் நடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், விடுமுறையில் தன் குடும்பத்தை காண வந்து உள்ளார். அப்போது, தன் மகளின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதை கண்டு அதிர்ச்சி … Read more

1,000 பெண்கள் பங்கேற்ற `வள்ளி கும்மியாட்டம்’; பெருந்துறையில் உலக சாதனை முயற்சி!

கொங்கு மண்டலத்தில் பண்டைய காலத்தில் இருந்தே வள்ளி கும்மியாட்டம் இருந்து வந்துள்ளது. தமிழ்க் கடவுளான முருகனை, நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி திருமணம் செய்த கதையை பாரம்பர்ய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவதே வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது. முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களில் விடிய, விடிய வள்ளி கும்மியாட்டம் நடத்தப்பட்டது. காலப்போக்கில் இந்த பாரம்பர்ய வள்ளி கும்மியாட்டக்கலை அழியத் தொடங்கியது. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம். ‘கும்மி டான்ஸ் பிடிச்சிருக்கு!’ வெளிநாட்டு … Read more

கட்டுப்பாடுகள் தளர்வு… வெளிநாடுகளுக்கு படையெடுக்க தயாராகும் சீன மக்கள்

கொரோனா தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல தயாராவதாக சீன மக்கள் குதூகலத்துடன் தெரிவித்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 8ம் திகதி முதல் நாட்டுக்குள் வரும் பயணிகள் எவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக மாட்டார்கள் என சீன நிர்வாகம் அறிவித்துள்ளது. @afp மட்டுமின்றி, நாடுதழுவிய மக்கள் போராட்டத்தின் பயனாக, கடும்போக்கு விதிகளும் … Read more

சீர்காழியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

மயிலாடுதுறை : சீர்காழியில் ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 25-ம் தேதி காரில் சென்ற ரவுடி தினேஷை வழிமறித்து ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

செயற்கை கருவறை, சூரிய புயல்… 2023-க்கான பாபா வங்காவின் கணிப்புகள்!

வெற்றிகரமாக 2022-ம் ஆண்டை நிறைவு செய்து, 2023-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். எதிர்வரும் 2023-ம் ஆண்டு நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராகி வருகிறோம். அதேநேரம், வரும் ஆண்டில் உலகம் எதிர்கொள்ள போகும் சாதனைகள், சறுக்கல்கள், பிரச்னைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து, உளவியலாளர்கள், ஜோதிடர்கள் பல கணிப்புகளை கணித்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டுக்கான கணிப்புகளையும் வழங்கியுள்ள மிகப் பிரபல உளவியலாளரான பல்கேரிய ஆன்மிகவாதி பாபா வங்காவின் கணிப்புகள், இப்போது பேசுபொருளாகி … Read more