2022ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் 25ம் தேதி  நிகழ்கிறது! வெறும் கண்ணால் பார்க்ககூடாது என எச்சரிக்கை…

டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி ‘பகுதி சூரிய கிரகணம்’ நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்  இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் ஒருமணி நேரம் பார்க்க முடியும். ஆனால், வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. அதன்படி நடப்பாண்டு,  வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய … Read more

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குட்டி யானை கொல்லப்பட்ட ஆத்திரத்தில் ஒருவரை மிதித்து கொன்ற யானைக்கூட்டம்| Dinamalar

சத்தீஸ்கரில் குட்டி யானை கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த யானைக் கூட்டம் கிராமத்துக்குள் புகுந்து நேற்று ஒருவரை மிதித்துக் கொன்றது.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோர்பா மாவட்டத்தில் உள்ள பனியா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சமீபத்தில் யானைக் குட்டி ஒன்றை கொன்று வயலில் புதைத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ௪௪ யானைகள் உள்ள கூட்டம், மூன்று கிராமங்களுக்குள் புகுந்து ௨௨ ஏக்கரில் இருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தின. நேற்று தேவ்மத்தி என்ற கிராமத்துக்குள் புகுந்த … Read more

`ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம்' -முகநூலில் வந்த விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை இழந்த பெண்

இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சோசியல் மீடியா மூலம் நடக்கும் மோசடிகள் தான் அதிக அளவில் நடக்கிறது. சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி பணம் அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். மும்பையில் ஃபேஸ்புக் விளம்பரத்தை பார்த்த ஒரு பெண் ரூ.8 லட்சத்தை இழந்துள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியை சேர்ந்த நித்யா(54) என்ற பெண் அடிக்கடி ஃபேஸ்புக் பக்கங்களை பார்ப்பது வழக்கம். அப்படி பார்த்த போது ஒரு சாப்பாடு … Read more

சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

 நாம் அனைவரும் சாப்பிடும் ஒரு பழங்களுள் வாழைப்பழம் முதன்மையானது. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதனை தினம் சாப்பிடவுடன் எடுத்து கொள்வது நன்மையே தரும். அந்தவகையில் வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். வாழைப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால் இதனை உண்டதும் உங்களுக்கு நிறைவான உணர்வு ஏற்படும். அதிலும் பழுக்காத வாழைப்பழங்களில் நோயெதிர்ப்பு … Read more

25ந்தேதி விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய தகவல்…

திருச்சி: தீபாவளிக்கு மறுதினம் வரும் 25ந்தேதி விடுமுறை விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி 24ந்தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை. ஆனால், தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள், அடுத்த நாளான 25ந்தேதி பணிக்கு வருவது கடினம். அதனால், தீபாவளிக்கு மறுநாளான 25ந்தேதி  அரசு பொதுவிடுமுறை  நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், … Read more

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை: எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 27ல் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: பலி 15 ஆக உயர்வு; யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவிப்பு

ரேவா, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச … Read more

சேலம்: ரயில் தண்டவாளத்தில் தலை துண்டாக கிடந்த இளைஞரின் சடலம் – கொலையா, தற்கொலையா?!

சேலம், அரியானுர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கல்யாண புரோக்கராக இருந்து வருகிறார். இவரின் உறவினரான வெங்கடாசலம் என்பவர் வீட்டில் சுமார் 6 மாதக்காலமாக தங்கி வந்துள்ளார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 8 -ம் தேதி வெங்கடாசலத்தை திடீரென அரியானூர் அருகே டீ கடையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். மறுநாள் காலையில் மகுடஞ்சாவடி டு வீரபாண்டி ரயில் தண்டவாளத்தில் … Read more

சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் 26.10.2022 அன்று தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். … Read more