அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க அரசு உறுதி: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ம.பி.,யில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமின் (பிஎம்ஏஓய்-ஜி ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் காஸ் இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். பயனாளிகளின் … Read more

நீலகிரி: காரில் கடத்தல்; ஆட்டோவில் சப்ளை – 1,000 பாக்கெட் குட்காவுடன் சிக்கிய நபர்! நடந்தது என்ன?!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நீலகிரி வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. நீலகிரியிலும் குட்கா புழக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆட்டோ மூலம் குட்கா பொருட்களை சப்ளை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு!

சென்னை: முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பாது, கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பொருளாதார … Read more

கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம்: டிஜிபி சைலேந்திரபாபு உறுதி!

சென்னை: வேலூர் சரகத்தில் 2 காவல் நிலையங்கள் கஞ்சா இல்லா காவல் நிலையங்களாக உள்ளது. 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா இல்லா தமிழகமாக மாற்றப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும், கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம் என டிஜிபி உறுதியளித்துள்ளார்.

ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா… புக்கிங் செய்யும் தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் கைது!

லாட்ஜ்களுக்கு செல்லும் தம்பதிகள் எப்போதும் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனாலும் சில லாட்ஜ்களில் பணிபுரிபவர்கள் சட்டவிரோதமாக கழிவறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அறைகளில் தங்குபவர்களை வீடியோ எடுக்கும் கொடும் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் உத்தரப்பிரதேச ஹோட்டலில் மர்ம நபர்கள் அறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராவை மறைத்து வைத்து தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் ஓயோ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. … Read more

ஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுத்த மேக்ரான்: பிரான்ஸ் ஜேர்மனி உறவில் விரிசல்

பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் ஆற்றல் முதல் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு வரை, பல விடயங்களில் உரசல் ஏற்பட்டுள்ளது. ஜேர்மனி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது அதற்கு நல்லதல்ல என மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த வாரத்தில் பிரான்சும் ஜேர்மனியும் இணைந்து நாடாளுமன்ற கூட்டம் ஒன்றை நடத்துவதாக திட்டமிட்டிருந்தன. ஆனால், அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிரான்சுக்கு வேறு முக்கிய கடமைகள் இருப்பதால் அந்த கூட்டம் திட்டமிட்டதுபோல் நடக்காது என்றும் ஜேர்மனி தரப்பு கூறுகிறது. ஆனால், தங்கள் தரப்பில் அந்த கூட்டத்தை … Read more

மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம்! அமைச்சர் தகவல்…

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை  அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான  7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என கூறினார். மேலும், , தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு … Read more

இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும்: ராஜ்நாத் சிங்குக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: கேரள மீனவர்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியதுபோல் இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இந்திய கடற்படை பொறுப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதார் கார்டை காட்டிய பிறகும் மீனவர்கள் சித்ரவதை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் | பிரிட்டன் பிரதமர் ரேசில் மீண்டும் பெண்| உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக முதல் நபராக பென்னி மோர்டான்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர் தனது வாயில் 150 எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தி கின்னஸ் சாதனை படைத்தார். உகாண்டாவில் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்லிக்ஸின் வெற்றித் தொடரான ‘தி கிரவன்’ தொடரில் பல சலசலப்புக்கு பின் ‘டிஸ்கிளைமர்’ போடப்பட்டுள்ளது. மங்கிபாக்ஸ் தொற்று இதுவரை 100 நாடுகளில் பரவி 73,000 நபருக்கு கண்டெடுக்கப்பட்டது துப்பாக்கி … Read more

ஒன்றரை ஆண்டில் 10லட்சம் பேருக்கு பணி: ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு  பணி வழங்கும்  திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு  திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியான இன்று நாடு முழுவதும் 75ஆயிரம் பேருக்கு பணி நிமயன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும் ரோஜ்கர் மேளா என்று பணி தொடர்பான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி … Read more