பீர், நெட்பிளிக்சில் படம், உணவு ஆர்டர்…! ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாப்!

புதுடெல்லி அப்தாப் அமீன் – சாரதா இருவரும் டெல்லியில் மெஹ்ரவுளி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.இந்த நிலையில்தான் அமீனை திருமணம் செய்ய சாரதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் வந்த சண்டையில் அமீன் சாரதாவை கொலை செய்துள்ளார். அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து 18 நாட்களுக்கு தினமும் 2 பீஸ்களாக ஆட்டில் அப்புறப்படுத்தி உள்ளார். போலீசார் இவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

"சிறையில் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன், கண்பார்வையும்..!"- சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன்னுடைய சிறை அனுபம் குறித்து பேட்டியளித்த அவர், “என்னைக் கைதுசெய்து 15 நாள்கள் தனிமை சிறையில் அடைத்தனர். 15 நாள்களாக சூரியவெளிச்சத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. சிறைக்குள் இருந்த விளக்குகளால் என் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இப்போது என்னால் சரியாக படிக்கக்கூட முடியவில்லை. சரியாக் காதுகூட கேட்பதில்லை. ஞாபக சக்தியும் குறைந்து வருகிறது. நான் ஒரு போர்க்குற்றவாளி. … Read more

இளவரசர் ஹரி அப்படி செய்யாமல் இருந்திருந்தால்…மேகனின் விரலை அலங்கரித்திருக்கும் டயானாவின் மோதிரம்

இளவரசர் ஹரி மட்டும் சகோதரர் வில்லியமுக்கு இளவரசி டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் அது தற்போது இளவரசி மேகனின் கைகளில் இருந்து இருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளவரசி டயானாவின் மோதிரம் உலகில் உள்ள மிக உயர்ந்த ஆபரணங்கள் பெரும்பாலும் பிரித்தானிய அரச குடும்பத்திடமே உள்ளது, அதை அரச குடும்ப வாரிசுகள் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்தும் அனுபவித்தும் வருகின்றனர். அந்த வகையில் இளவரசி டயானா 1997ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது விலையுயர்ந்த உடமைகளை … Read more

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல என்னையும் விடுதலை செய்யுங்கள்! 80வயது கர்நாடக சாமியார் மனு…

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல், என்னையும் விடுதலை செய்யுங்கள் என கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த 90வயது கொலைகுற்றவாளியான சாமியார் ஒருவர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஷரத்தானந்தா. இவருக்கு தற்போது 80 வயதாகிறது. இவருடைய இயற்பெயர்  முரளி மனோகர் மிஸ்ரா. இவருக்கு 1986ல் திருமணம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மைசூரின் முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி ஷகரேக் நமாஸியை திருமணம் செய்திருந்தார் ஷரத்தானந்தா. இவருக்கும் … Read more

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நிறுத்தி வைக்க ஆணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள் நிறுத்தி வைக்க ஆணை பிறப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு தர அனுமதி உத்தரவு நடப்பாண்டுக்கு பொருந்துமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2023 மே மாதத்திற்கு ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி: பிரதமர் மோடியின் டிகிரி குறித்த வழக்கில் டில்லி பல்கலைக்கழகம் சார்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கை 2023ம் ஆண்டு மே மாதத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிரதமர் மோடி, டில்லி பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் 1978ம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றதாகவும், குஜராத் பல்கலையில் எம்.ஏ முழு அரசியல் அறிவியல் என்ற துறையில் பட்டம் பெற்றதாகவும் தேர்தலின்போது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது பட்டம் போலியானது என பலரும் விமர்சித்தனர். இது தொடர்பாக 1978ம் ஆண்டு … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்..!

சண்டிகார், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின. இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. … Read more

மின்கம்பி விபத்து: மின்சார வாரியம்தான் பொறுப்பு… நீதிமன்றம் உத்தரவு!

மழைக்காலங்களில் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், இவை அனைத்திற்கும் இயற்கையின் மீது பழியை போடுகிறோம். ஆனால், இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பாதுகாக்க, பராமரிக்க வேண்டிய மின்சார வாரியமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் “மத்தியஅரசு தொழிற்சங்க உரிமைகளை பறிக்கிறது!” – நாடு முழுவதும் நாளை வங்கி வேலை நிறுத்தம்… மதுரையை சேர்ந்த சூரியகாந்தி என்பவரின் கணவர் 2013-ல் … Read more

விளையாட்டாக மனதில் செய்த யோசனையால் தமிழருக்கு கோடிகளில் கொட்டிய பணம்! புகைப்படங்கள்

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் பெயர் நாகராஜ்! இந்த நிறுவனம் ரூ. 1000 கோடிக்கு மேல் வியாபாரம் பார்க்கிறது. சர்வதேச அளவுக்கு பிரபலமான நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் திகழ்கிறது. சிறிய கிராமத்தில் பிறந்த நாகராஜ் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைக்காட்டி புதூர் என்ற சிறிய கிராமம் தான் நாகராஜின் பூர்வீகம். இவர் படித்தது பத்தாம் வகுப்பு தான். ஒரு சமயத்தில் ஊருக்குள்ள ஒருவர் அம்பாசிடர் காரில், வேட்டி, சட்டையில் கம்பீரமாக போனார். அவர் யார் … Read more

வந்தே பாரத் ரயிலுடன்  மல்லுக்கட்டும் மாடுகள்! 4வது முறையாக விபத்து.

சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது முதல் இதுவரை 3 தடவை மாடுகள் மீது மோதி சேதமைடைந்த நிலையில், நேற்று இரவு, 4வது முறையாக, அரக்கோணம் அருகே சென்னை மைசூரு வந்தே பாரத் ரயில் மீது மாடு மீது மோதி சேதமடைந்தது. வந்தே பாரத் ரயிலுக்கும் மாடுகளுக்கும் ராசியில்லை என என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 5 வந்தே பாரத் அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், 4 … Read more