ரோஸி ஸ்டார்லிங், ஆஸ்பிரே, சிவப்பு ஷாங்க்… கன்னியாகுமரிக்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மழை அதிகமாக பெய்வதால் நன்னீர் பரப்பு அதிகமாக காணப்படுகிறது. இயற்கையாகவே சீதோஷ்ண நிலை சீராக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளுக்கான புகலிடமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும்போது சில பறவை இனங்கள் கூட்டமாக கடல் கடந்து, கண்டங்களை கடந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்துக்காக வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் … Read more

பிரான்சின் பல பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சிமையம் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்சின் 12 பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனி தொடர்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த பகுதிக்கு அதிக பாதிப்பு? குறிப்பாக வடமேற்கு மற்றும் முழு கிழக்கு பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், திங்கட்கிழமை இரவே கிழக்கு பிரான்சின் பல பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. Savoie, Haute-Savoie, Ain, Rhône மற்றும் Loire பகுதிகள் பனிப்பொழிவை சந்தித்துவருகின்றன. அதுபோக, Côtes-d’Armor, Morbihan, Ille-et-Vilaine, Mayenne, Orne, Manche மற்றும் Sarthe ஆகிய பகுதிகளில் உறையவைக்கும் மழை, 6.00 மணி … Read more

உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில்…

சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அவருக்கு இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களது சக்திக்கு  மீறி, வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம்,  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து … Read more

ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரியையும், ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை: ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல்: அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு … Read more

சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது!

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் மின்சார வாகனங்களுக்கு 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல் – விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி, நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு … Read more

“ `வாரிசு’ படத்தை வெளியிடாமல் செய்த `வாரிசு'க்குத்தான் பட்டாபிஷேகம் செய்கிறார்கள்!"- கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் நகர அ.தி.மு.க சார்பில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும்  நாடாளுமன்றத் … Read more