வேல்ஸ் அணியை மிரட்டிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட்: வெற்றியுடன் சூப்பர் 16 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேற்றம்

 உலக கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூப்பர் 16 சுற்றில் செனகல் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து  கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பிரித்தானிய நாடுகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் … Read more

உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.38 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.52 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-30: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க “உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன… செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை … Read more

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது. இடது கையில் கதாயுதம். மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது. மேற்கு நோக்கிய முகம். மனிதன் நோய் … Read more

முழு நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட இங்கிலாந்து ரசிகர்: உலக கோப்பையில் எல்லை மீறும் கத்தார் அதிகாரிகள்

இங்கிலாந்து கால்பந்து ரசிகர் ஒருவரை கத்தார் அதிகாரிகள் முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்து இருப்பது உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. LGBTQ+ சின்னங்கள்   உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வரும் வளைகுடா நாடான கத்தார், மைதானத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னங்கள் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது. ஆனால் கத்தாரின் இந்த திடீர் விதிகளுக்கு உலக நாடுகள் மற்றும் உலக கால்பந்து ரசிகர்கள் முழுமையான எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, Fifa கால்பந்து அமைப்பு உடனடியாக … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,638,467 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,638,467 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 646,871,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 625,218,888 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,409 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை! கர்நாடகா எல்லை பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் இன்று… டில்லியில் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை| Dinamalar

கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் சட்ட நிபுணர்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவிக்கு இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடுகின்றன. பெலகாவி, தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும், அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது. சமீபத்தில், மஹாராஷ்டிராவுக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் மீது, … Read more

மாமனார் வாங்கிய கடனுக்கு மருமகனை கடத்திய கும்பல்| Dinamalar

பொம்மனஹள்ளி : மாமனார் வாங்கிய பணத்துக்காக, கடன் கொடுத்தவர்கள் மருமகனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமண் ரெட்டி, 60. இவர் ஸ்வரூப், 40 என்பவரிடம் சில மாதங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதில், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டார். மீதம் 3 லட்சம் ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், லட்சுமண் ரெட்டியின் மருமகன் ராஜசேகர், 30 … Read more

20,000 மெட்ரிக் டன் ரஷ்ய உரங்கள் ஏற்றுமதி: எங்கு கொண்டு செல்லப்படுகிறது? ஐ நா முக்கிய தகவல்

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தின் முதல் தொகுப்பு ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய நாட்டு சபையின் ஒப்பந்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதை அடுத்து உக்ரைனிய துறைமுகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு கடல் ஏற்றுமதி போக்குவரத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏழை நாடுகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் விவசாய உரங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. ukraine grain- உக்ரைன் தானியம் (EPA) இதையடுத்து … Read more