பெங்களூரில் 7,000 கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பெங்களூரு, : பெங்களூரில் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ‘பாதுகாப்பான நகரம்’ என்ற முழக்கத்திற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், மத்திய அரசு, ‘நிர்பயா நிதி திட்டத்தை’ அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை, கோல்ட்டா, ஹைதராபாத், ஆமதாபாத், லக்னோ நகரங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு … Read more

திடீரென சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் முளைத்த பச்சை நிற தூண்கள்: மர்மம் விலகியது

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென முளைத்த பச்சை நிற தூண்கள் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தின. நெடுஞ்சாலையில் திடீரென தோன்றிய பச்சை நிற தூண்கள் ஜெனீவாவிலிருந்து Nyon செல்லும் நெடுஞ்சாலையில், சாலையோரமாக திடீரென பச்சை நிற தூண்கள் நிறுத்தப்பட்டிருப்பதை வாகன ஓட்டிகள் கவனித்துள்ளார்கள். பலரும், திடீரென முளைத்த அந்த பச்சை நிற தூண்களால் குழப்பம் அடைந்தார்கள். image – marc mongenet  மர்மம் விலகியது இந்நிலையில், அந்த தூண்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெடரல் சாலைகள் துறையால் … Read more

உலக கோப்பை கால்பந்து போட்டி முதல் முறையாக நாளை பெண் ரெபிரீ ஸ்டெபானி ப்ராப்பர்ட் களமிறங்குகிறார் – ஃபிஃபா அறிவிப்பு

உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர் களமிறங்குகிறார். ஆண்களுக்கான இந்த ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி – கோஸ்டா ரிக்கா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் குரூப் E பிரிவின் கடைசி ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ப்ராப்பர்ட் ரெபிரீ-யாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நியூசா பாக் மற்றும் கரேன் டியாஸ் ஆகிய இருவர் துணை நடுவர்களாக செயல்படுவார்கள். முதல்முறையாக அனைத்து பெண் நடுவர்களை கொண்ட … Read more

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐ.பி.எஸ். நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐ.பி.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து சங்கர் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று (நவ.,30) அதிகாலை உயிரிழந்தது. நடைபயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானை பாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை லட்சுமியின் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என உடலை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 … Read more

“இறந்தது யானை; நான் நலமாக இருக்கேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்!" – நடிகை லட்சுமி

நடிகை லட்சுமி, இன்று காலை இறந்துவிட்டதாக செய்திகள் பரவின. கோடம்பாக்கதில் உள்ள பலரும் அதிர்ச்சியானார்கள். தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆரின் படங்களில் கதாநாயகியாக கோலோச்சியவர் லட்சுமி. பின்னர் குணசித்திர நடிகையாகவும் திகழ்கிறார். தெலுங்கில் நாகார்ஜூனா, நானி இவர்களின் படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ளார். இப்போதும் வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலை முதல் லட்சுமி உடல்நிலை பற்றி வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. விசாரித்ததில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானையின் பெயர் லட்சுமி. அந்த … Read more

இளவரசி டயானாவின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் நடந்த மாற்றம்! புகைப்படத்தை பார்த்து வியக்கும் மக்கள்

பிரித்தானிய இளவரசி டயானாவின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு புது தோற்றத்துடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை அவரின் சகோதரர் வெளியிட்டுள்ளார். இளவரசி டயானா மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து டயானாவின் உடல் அவர் சிறுவயதில் வளர்ந்த Althorp House பகுதியில் தான் புதைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது கல்லறை ஒரு பரந்த ஏரியின் நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் டயானாவின் சகோதரர் Earl Charles Spencer கடந்த திங்களன்று, … Read more

மீண்டும் மறுப்பு: சுவாதிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான இன்று சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் மீண்டும் மீண்டும், கோகுல்ராஜை தெரியாது என மறுத்து வந்த நிலை யில், அவர்மீது  குற்றவியல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.  மேலும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் … Read more

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்  டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என முதல்வர் கூறியுள்ளார். ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது