பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. ஜனவரி 14 சனிக்கிழமை போகி பண்டிகை, 15 பெரும் பொங்கல், 16 மாட்டுப் பொங்கல், 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 12 ம் தேதியே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாக இருப்பதால் ஜனவரி 12, 13 … Read more

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். அத்திபாளையம் பேருந்துநிலையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

"நாட்டில் உள்ள அணு உலைகள் கதிர்வீச்சு, சுனாமி அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன" – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் விளக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயங்களில் இருந்தும் நம் நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அணுக்கழிவு வெளியேற்றுதலில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக … Read more

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்;என் மகன் என்னைக் கொலைசெய்யவில்லை!" – நடிகை வீணா கபூர் விளக்கம்

மும்பையில் வீணா கபூர் என்ற 74 வயது பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் மகனால் படுகொலைசெய்யப்பட்டார். வீணாவின் உடல் மாதேரன் மலைப்பகுதியில் வீசப்பட்டது. போலீஸார் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டை நடத்தி வீணா கபூர் உடலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அவரின் மகன் சச்சின் கைதுசெய்யப்பட்டார். சொத்துப் பிரச்னையில் இப்படுகொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. வீணாவின் மற்றொரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் தன தாயாருக்கு போன் செய்து பார்த்த போது போன் … Read more

மாதவிடாய் என கெஞ்சியும் மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர்: வெளியான பரபரப்பு ஆடியோ

தமிழகத்தில் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாவட்டத் தலைவரின் நர்சிங் கல்லூரி தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த நர்சிங் கல்லூரியில், நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் உடற்கூறியல் … Read more

அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெறும் 28வது சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோளை வைத்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அமிதாப்பச்சனுக்கு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு சார்பாக இல்லாமல் மேற்கு வங்க மக்கள் சார்பாக … Read more

2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிளிப்கார்ட் வாயிலாக ஆசிட் வாங்கியது அம்பலம்| Dinamalar

புதுடில்லி,:புதுடில்லியில், பள்ளி மாணவியின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ‘ஆன்லைன்’ வர்த்தக செயலியான, ‘பிளிப்கார்ட்’ வாயிலாக வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்மேற்கு டில்லியின் துவாரகா பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி முகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். வலியால் துடித்த அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீசிய முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா, 20, அவருக்கு உதவிய இரு நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால், 19, வீரேந்தர் … Read more

"திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும்" – மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. தனுஷ்குமார் கோரிக்கை

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின் போது பேசிய தென்காசி தொகுதி தி.மு.க. எம்.பி. தனுஷ்குமார், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை சுங்க கட்டணம் இன்றி பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுமார் 4 கி.மீ. தூர பாதையை பயன்படுத்த தனது தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதி மக்கள் முழு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதாகவும், அந்த கட்டணத்தை நீக்கி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த மத்திய … Read more

செங்கோட்டை: அதிமுக நகராட்சித் தலைவருக்கு எதிர்ப்பு! – தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் – நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றக் கூட்டம், தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, செங்கோட்டை நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டுதல், புதிதாக ஜெனரேட்டர் வாங்குவது, சிறப்புச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டை நகராட்சி அலுவலகம் தீர்மானங்கள் குறித்த விவாதம் நடைபெறும் என கவுன்சிலர்கள் காத்திருந்தனர். சுயேச்சையாக வெற்றிபெற்று, அ.தி.மு.க-வில் … Read more