தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மகனின் கழுத்தை நெரித்து கொலை; தந்தை கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

மகனின் கழுத்தை நெரித்து கொலை ம.பி.,யில் கொடூர தந்தை கைது தேவஸ் ; மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மகன் பார்த்துவிட்டதால், சிறுவனின் கையை துண்டாக வெட்டியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தேவஸ் மாவட்டத்தில் உள்ள பங்கார்டா கிராமத்தைச் சேர்ந்த ௪௫ வயது நபர், ௩௫ வயது பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக … Read more

கோழிக்கோட்டிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் பாம்பு; 7 மணி நேரம் அச்சத்துடன் காத்துக்கிடந்த பயணிகள்

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றது. விமானம் துபாய் சென்றவுடன் ஊழியர்கள் சரக்கு இருந்த பகுதியை திறந்தபோது அதில் ஒரு பாம்பு இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்து மிகவும் பத்திரமாக பயணிகள் இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்களின் துணையோடு பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால் பயணிகளின் உடைமைகள் அவர்களுக்கு கிடைப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. பயணிகள் 7 மணி நேரத்திற்கும் … Read more

ராஜஸ்தான் மாநிலம் பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

பல்தேவ்புரா: ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் உள்ள பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் … Read more

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். நாமக்கல் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. சிகிச்சைக்காக அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"உதயநிதியை அமைச்சராக்குங்கள்; அவர் நடித்த படங்களை பார்க்கச் சொல்லாதீர்கள்!"– அண்ணாமலை தாக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் பிரிவுகள் சார்பில் ’மாற்றத்திற்கான மாநாடு’ நடந்தது.  இந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர்  பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்  பேசிய அண்ணாமலை, “தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. ’டார்க்கெட்’ வைத்து கல்லா கட்டும் அமைச்சர்கள், தமிழகத்தை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர். மாநாட்டில் … Read more

ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை

ராஜஸ்தான்: ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சார்ப்பில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் ஜலாவரில் உள்ள மகராஜ்புரா கிராம பள்ளியில் இந்த இந்த யாத்திரை எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில், பள்ளி மாணவர்களை பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று எம்.எல்.ஏ. உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதாராம் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்ற 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பலி

சென்னை: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்ற 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்ட தேடலில் புதுச்சேரி முதலிடம்!| Dinamalar

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் தேடல் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இந்தியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது.இந்திய சுற்றுலா பயணிகள் தாங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்கான சமீபத்திய தேடல் தரவுகள் குறித்த தகவல்களை, தனியார் பயண ஏற்பாட்டாளர் இணையதளம் (Booking.com) வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, உள்நாட்டு பயணிகள் பதிவு செய்த முன்பதிவுகள் மற்றும் தேர்வு … Read more

பெங்களூரில் ‘Bee Hotels’ – தேனீக்களை காக்க புது முயற்சி; இயற்கை மீது பேரன்பு!

நமது காதருகே ‘குய்ய்ய்…’ என, தனது குட்டி இறக்கைகளால் ‘ஹை ஸ்பீடில்’ பறந்து செல்லும், தேனி, குளவி, வண்டுகளை நாம் இன்றும் கிராமங்களில் காண்கிறோம், அந்த சப்தத்தை கேட்கிறோம். என்றாலும், வானுயர்ந்த கட்டடங்கள், திரும்பிய திசையெல்லாம் ‘டிராபிக் ஜாம்’ என, பெங்களூரு, சென்னை போன்ற வளர்ந்த நகரப்பகுதிகளில், ஹாரன் சப்தத்தை தவிர, தேனீக்கள் போன்ற சிற்றுயிர்களின் சப்தத்தையும், அவற்றை கண்ணில் பார்ப்பதும் அரிதான ஒன்றாகி வருகிறது. அயல் மகரந்த சேர்க்கை. ஆண்டுக்கு ரூ.11 லட்சம்… இனிப்பான லாபம் … Read more