ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல: உச்சநீதிமன்றம்

டெல்லி: முறையாக பயிற்சிபெற்ற காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்த படுகிறது என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதை தடுக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை கிடுக்கி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் … Read more

வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி

ஆமதாபாத், குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது. குஜராத்தில் நாளை வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசினார். இந்த தேர்தலில் வெற்றி … Read more

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம்; திடீரென கதவை திறக்க முயன்ற பெண் கூறிய பகீர் காரணம்!

அமெரிக்காவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் செய்த செய்கையால், விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அந்தப் பயணியின் செயல் விமானத்தில் பயணித்தவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டிவிட்டது என்றுகூட கூறலாம். அதாவது கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸின் ஹூஸ்டனிலிருந்து கொலம்பஸ், ஓஹியோவுக்கு தென்மேற்கு விமானம் 192-ல் (Southwest Flight 192) சென்றுகொண்டிருந்தது. விமானம் அப்போது 37,000 அடி உயரத்தில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பயணித்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண் … Read more

ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டங்கள்: ஜேர்மன் அமைச்சர் அறிவிப்பு

ஜேர்மனியில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்த அந்நாடு திட்டமிட்டு வருகிறது. இன்று எடுக்கப்பட இருக்கும் முடிவுகள் வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்துவது தொடர்பாக, இன்று முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளன. அத்துடன், இளைஞர்கள் ஜேர்மனியில் கல்வி கற்பதை அல்லது தொழிற்பயிற்சி மேற்கொள்வதை எளிதாக்கவும் அரசு விரும்புகிறது. ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டம் இந்த விடயம் குறித்து பேசிய பொருளாதார அமைச்சரான Robert Habeck, … Read more

அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார்! தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் கிண்டல்…

மதுரை: அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜியை, தெர்மோகோல் புகழ் முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து எடப்பாடி ஆதரவு அதிமுக  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவு தினம் குறித்து … Read more

சிறை அலுவலர் பணிக்கு டிச.26ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது. டிச. 22ல் எழுத்து/ கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பங்குகளை அதானி வாங்கியதால் முடிவு| Dinamalar

புதுடில்லி: என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா பதவி விலகி உள்ளனர். என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.க்கு நிதியுதவி … Read more

ஷ்ரத்தா கொலை: அப்தாப் டேட்டிங் ஆப் மூலம் 20 பெண்களுடன் தொடர்பு…!

புதுடெல்லி தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் அப்தாப் பூனாவாலாவின் சமீபத்திய காதலி, அவரது கொடூரமான செயலைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். அவரது கொடூரமான செயலைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார், மேலும் ஆப்தாபின் சத்தர்பூர் இல்லத்தில் மனித … Read more

சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாம்பி வைரஸ் | சீனா – கத்தார் ஒப்பந்தம்- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சைபீரியாவில் பனியில் புதைந்த 48,500 ஆண்டுகள் பழைமையான ‘ஜாம்பி’ வைரஸை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டெடுத்திருக்கின்றனர். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பின் ரப்பானி கர் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சரை காபூலில் சந்தித்து அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா, முதல் உலகப் போர் பாணியில் அகழி அமைப்புகளை தோண்டுகிறது என முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ தலைவர் கூறியிருக்கிறார். தைவானின் புதிய ஜனாதிபதி சாய் இங்-வெனை பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கப் … Read more