கத்தார் உலக கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி! சட்டையை கழற்றி நடனமாடி வீரர்கள் கொண்டாடிய வீடியோ

கத்தார் உலக கோப்பை லீக் போட்டியில் மெக்சிகோ அணியை வீழ்த்திய உற்சாகத்தை அர்ஜெண்டினா அணி வீரர்கள் ஓய்வறையில் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அஜெண்டினா அணி வெற்றி லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது வெற்றி கனியை பறித்துள்ளது. The celebrations in the … Read more

சீர்காழியில் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் : அமைச்சர் பன்னீர் செல்வம்

மயிலாடுதுறை: சீர்காழியில் விவசாயிகளுக்கு நிவாரணத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும்பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் காரைக்காலில் பேட்டி அளித்தார். மடுலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 87% பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா? மூலிகை சூப் தேவையானவை: எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன் அரைக்க: தூதுவளைக் கீரை – அரை கப் அப்பக் கோவை இலை – அரை கப் முசுமுசுக்கு இலை – 6 துளசி இலைகள் – 4 வெல்லம் – ஒரு சிட்டிகை கற்பூரவல்லி இலை – ஒன்று … Read more

சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் அடையாளம் கண்டுபிடித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னையில், 16 தொகுதிகளில் மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அதிகபட்சமாக வேளச்சேரி – 24,414, விருகம்பாக்கம் – 23,073, சைதாப்பேட்டை – 19,883, அண்ணா நகர் – 19,506 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய நெல் நாற்றுகளால் மூவேந்தர்களின் கொடிகள்: இயற்கை விவசாயி அசத்தல்| Dinamalar

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே, விவசாயி ஒருவர் தனது வயலில் மூவேந்தர்களின் கொடிகள், தமிழக அரசின் சின்னம் ஆகியவற்றை வயல்களுக்கு நடுவில் கருப்புக் கவுனி நெல் நாற்றுகளால் வடிவமைத்துள்ளார். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர், விவசாயி செல்வம். இவர் ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் ரகம் ஒன்றைப் பயிரிட்டு, அதன் விதைநெல்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். 15 ஆண்டுகளாக இச் சேவையை செய்து வருகிறார்.கருப்புக்கவுனி, பூங்காறு, சொர்ணமுகி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பயிரிட்டு, … Read more

ஈரோடு: கழிவுநீரால் செந்நிறமாக மாறிய குளம்; அமைச்சர் ஆய்வு… மூடப்பட்ட இரும்பு உருக்காலை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலுள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுக்காட்டுவலசு, கடப்பமடை, காசிபில்லாம்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைக்காட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்த விவசாய நிலங்களில் 2,800 ஏக்கர் நிலங்கள் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1994-ம் ஆண்டில் கையகப்படுத்தபட்டது. இதைத் தொடர்ந்து சிப்காட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று … Read more

டென்மார்க்கை வீழ்த்தி 16வது சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்

தோஹா: டி பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி 16வது சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரான்ஸ்-டென்மார்க் அணிகள் இடையேயான ஆட்டம் ஸ்டேடியம் 974-ல் நடைபெற்றது. பிரான்ஸ் அணி, தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை விளையாடியது. முதல் பாதி கோலின்றி முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் தியோ ஹொர்னான்ட்ஸ் அனுப்பிய பால் முதல் மூலம் முதல் கோல் அடித்தார் மாபபே. 68-வது நிமிடத்தில் டென்மார் தரப்பில் கிறிஸ்டென்சன் … Read more

சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தரமணி இணைப்பு சாலையில் வேன் மோதியதில் பைக்கில் சென்ற தனியார் கல்லூரி மாணவர் பிராவின் (19) உயிரிழந்துள்ளார். பாலவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தங்கம், வைர நகைகள் கொள்ளை 2 மணி நேரத்தில் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தாம்பரம், : தாம்பரம் அருகே செம்பாக்கம் நகைக்கடையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த மூன்று சிறுவர்களை, இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை கவுரிவாக்கத்தில், ‘ப்ளூ ஸ்டோன்’ நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள், கடையை பூட்டிச் சென்றனர். எச்சரிக்கை ஒலி நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் மொபைல் போனில் எச்சரிக்கை ஒலி … Read more

“தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்னைகள்; முதல்வருக்கோ, மகனின் `கலகத் தலைவன்' பற்றி கவலை!"- பாஜக இப்ராஹிம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-மீது வைப்பது இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளைத்தான். ஒன்று… பா.ஜ.க வட மாநில கட்சி, இந்திக்கு ஆதரவளிக்கும் கட்சி, தமிழர் விரோத கட்சி என்ற இனவாத மொழிவாத விஷயங்களை இங்கிருக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ … Read more