அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. பணியிடைநீக்கம்

இராணிப்பேட்டை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. குமரவேல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தில் 2020ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக குமரவேல் பணியாற்றினார். ரூ.6 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்கிய புகாரை அடுத்து குமரேலை போலீஸ் நேற்று கைது செய்தது.   

மிருகவதை தடுப்பு சட்டத்தை திருத்த முடியாது ஜல்லிக்கட்டு வழக்கில் மனுதாரர் தரப்பு வாதம்| Dinamalar

புதுடில்லி : ‘விலங்குகளை கொடுமைப்படுத்துவதை சட்டம் தடை செய்யும் போது, கொடுமையை நிலைநிறுத்தும்படி சட்டத்தை திருத்த முடியாது’ என, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில் மனுதாரர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதங்களை முன்வைத்தது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து அவசர … Read more

திருவள்ளூர்: 13 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர்ப் பகுதிக்கு அருகில் வசிப்பவர் பிவின். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பிவினுக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிவின் மீது திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவில் ஒரு புகார் வந்தது. பாலியல் வன்கொடுமை பிவின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் 13 வயது சிறுமி ஒருவரை அவர் வீட்டு மாடிக்கு அழைத்துச் … Read more

மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது.

தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பள்ளி மாணவி கர்ப்பம்; 2 வாலிபர்கள் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

பள்ளி மாணவி கர்ப்பம் 2 வாலிபர்கள் கைது உத்தர கன்னடா : பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய இரண்டு வாலிபர்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். உத்தர கன்னடா, கும்டா அருகே உள்ள கோனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகில், 21, இவரது நண்பர், ஹள்ளி கொப்பாவை சேர்ந்த முக்ரி, 20. இருவரும் கும்டாவில் தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சில மாதங்களுக்கு முன், ஆட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு … Read more

“சட்டம் ஒழுங்கு கெடவில்லை; ஆனால், கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள்” – முதல்வர் ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பிக்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடை விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 36,691 … Read more

வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம் துவக்கப்பட்டுள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/11/f79vOLjziC9GrrDs.mp4 மைத்தில், உறவினர்களுடன் பேசும் போது, சிறை கம்பிகளுக்கு இருபக்கமும் பேசுவது ஒரே சத்தமாக இருப்பதால். தமிழகம் முழுவதும் தமிழக சிறைத்துறை சார்பில் இண்டர்காம் போன் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, திருப்பூர், தேனி,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

5 மாணவர்கள் போக்சோவில் கைது| Dinamalar

ஹைதராபாத் : தெலுங்கானாவில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர், சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ‘வீடியோ’ எடுத்த புகாரில், போலீசார் அவர்களை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தெலுங்கானா, ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் ஒரு மாணவி நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கு சென்ற மாணவர்கள், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தை வீடியோ … Read more