ஆவண எழுத்தர்கள் நல நிதியம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கான உறுப்பினர் அட்டையும் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் (ம) அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில், வணிகவரி அமைச்சர் மூர்த்தி, … Read more

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச பழனிசாமி தடைகோரியிருந்தார். டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்ட தரக்கோரி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அறப்போர் இயக்கத்தின் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது என்று பழனிசாமி கூறினார்.

மூன்று விமான நிலையங்களில் முக அங்கீகார தொழில்நுட்பம்| Dinamalar

புதுடில்லி, விமான நிலையத்திற்குள் பயணியரை அனுமதிக்கும் நடைமுறையை காகிதப் பயன்பாடு அற்றதாகவும், தடையின்றியும் செய்து முடிக்கும் முக அங்கீகார தொழில்நுட்பம், மூன்று விமான நிலையங்களில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. விமான பயணம் மேற்கொள்ளும் பயணியர், பல்வேறு சோதனைகளை கடந்து விமான நிலையத்திற்குள் செல்லும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதை தடையின்றியும், தொடர்பற்றதாகவும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, எப்.ஆர்.டி., எனப்படும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி … Read more

Fact Check: மோர்பி பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகைக்கு ரூ.30 கோடி செலவா? – உண்மை என்ன?!

குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாலம் மாலையில் இடிந்து விழுந்ததால் இரவு முழுக்க மீட்புப்பணி நடந்தது. விபத்து அக்டோபர் 30-ம் தேதி நடந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நவம்பர் ஒன்றாம் தேதி மோர்பிக்கு சென்றார். பிரதமரின் வருகைக்காக அங்கிருந்த மருத்துவமனை பெயின்ட் அடிக்கப்பட்டு புதிய படுக்கைகள் வெளியூரில் இருந்து கொண்டு வந்து போடப்பட்டது. வர்ணம் … Read more

கனடாவில் இளம் வயதில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்: கவலையில் இலட்சக்கணக்கானோர் …

கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த விடயம், அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி, இலட்சக்கணக்கான அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், அந்தப் பெண் ஒரு சமூக ஊடக பிரபலம் ஆவார். 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் இந்திய வம்சாவளியினரான மேகா தாக்கூர், 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் ஆவார். ஒருவர் தன்னுடைய தோற்றத்தைக் குறித்து கவலைப்படக்கூடாது, எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என பல்லாயிரம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்த மேகா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உறுதி கொள்வோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் … Read more

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியது..!!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. ஈசிஆர் சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சீர்காழி, நாகை, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழியே குமரியை இணைகிறது. இருபுறமும் 11 மீ. அகலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ரூ.2 கோடி இன்ஷூரன்ஸ் பெறுவதற்காக நாடகம் கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்தவர் கைது| Dinamalar

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில், 2 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை வைத்து காரை மோதி கொலை செய்து, விபத்து என கூறி நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி சாலு தேவி, 32. கடந்த நவ., 5ம் தேதி, ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் தன் உறவினருடன் சென்ற சாலு தேவி மீது, சொகுசு கார் மோதியது. இதில் சாலு தேவியும், அவரது உறவினரும் இறந்தனர். … Read more

பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கோல்டி பிரர் அமெரிக்காவில் கைது!

பஞ்சாப்பில் கடந்த மே மாதம் 29-ம் தேதி மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஸ்னோய் ஏற்கெனவே சிறையில்தான் இருக்கிறான். மற்றொரு முக்கியக் குற்றவாளியான கோல்டிபிரர் கனடாவில் பதுங்கியிருந்தான். கனடாவிலிருந்து கொண்டுதான் சித்துவைக் கொலைசெய்ய ஆட்களை ஏற்பாடு செய்து பண உதவி, ஆயுத உதவிகளைச் செய்து கொடுத்தான். இந்தக் கொலை நடக்கும்போது குற்றவாளிகளுக்கு … Read more

மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்! தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர்..

பட்டுக்கோட்டை: மெடல் வாங்கிட்டேன் ஆனால், தந்தையை இழந்துட்டேன் என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர் மல்க கூறினார். நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்க மெடல் வாங்கிய இளம் வலுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா, அந்த மெடலை சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையிடம் காட்ட இருந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்திதான் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து ஆக்லாண்டில் நடந்து வருகிறது. … Read more