உறைந்த ஏரியில் கோர விபத்து: மூன்று பிரித்தானிய சிறுவர்கள் பலி! தொடரும் மீட்பு பணி

பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்த ஏரியில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறைந்த ஏரியில் தவறி விழுந்த சிறுவர்கள் பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு-க்கு மத்தியில், சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்து போன Babbs Mill ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 6 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென உறைந்து இருந்த ஏரிக்குள் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். West Mids … Read more

ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார்… சிரஞ்சீவி ட்வீட்…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார். இந்த விவரத்தை ராம்சரணின் தந்தை மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். pic.twitter.com/C4ps1jgcUD — Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022 ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு அந்த பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனை குழுவின் துணை தலைவராக உள்ள உபாசனா மற்றும் ராம்சரண் திருமணம் 2012 ம் ஆண்டு ஜூன் 14 ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

சென்னை, தர்மபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

11 -ம் வகுப்பு மாணவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்

மீரட் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சில மாணவிகளை நவம்பர் 23ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளார். இரவு தங்குவதற்காக ஓட்டலில் இரண்டு அறைகள் எடுத்து உள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்து உள்ளார்.மற்றொரு அறையில் அவரும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியும் தங்கியுள்ளனர். அவர் சிறுமிக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். சிறுமி அதை சாப்பிட்ட பி செய்து உள்ளார். … Read more

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சிலர் பொறாமை அடைந்திருக்கின்றனர்!" – நிர்மலா சீதாராமன் சாடல்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமை கொண்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83 எட்டியதை சுட்டிகாட்டிய காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி, “இந்திய ரூபாய் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதையும், முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 83 ரூபாயை எட்டியதையும் அரசாங்கம் கவனிக்கவில்லையா… ரூபாயின் சரிவைத் தடுக்க எடுக்கப்பட்ட … Read more

ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜெயிலர் படக்குழு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். Team Jailer wishes Superstar @Rajinikanth a Happy Birthday!💥 @Nelsondilpkumar @NimmaShivanna @meramyakrishnan @iYogiBabu #Vinayakan @iamvasanthravi #Jailer #SuperstarRajinikanth #HBDSuperstar #HBDSuperstarRajinikanth pic.twitter.com/9egZwkCXg7 — Sun Pictures (@sunpictures) December 12, 2022 ரஜினி அடுத்ததாக நடித்து வரும் ஜெயிலர் படத்தில் அவருடன் பணியாற்றும் … Read more

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ம் தேதி தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

400 பேர் பலியான சம்பவம்! வன்முறைக்கு காரணமானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்..ஜேர்மன் வெளியுறவு அமைச்சர்

ஈரான் மீதான புதிய ஐரோப்பிய ஒன்றிய தடைகள் நாட்டின் புரட்சிகர காவலர்களை குறிவைக்கும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். ஈரானில் போராட்டம் ஈரானின் தெஹ்ரான் நகரில் கடந்த மாஷா அமினி என்ற இளம்பெண் பொலிஸார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கிளர்த்தெழுந்த மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். @AFP via Getty Images மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை … Read more

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்! மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தகவல்

டெல்லி: இதுவரை 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை அரசு மீட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நல்லாட்சி சென்றடைவதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் தயாரித்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார். மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். மத்திய அரசின் திட்டங்களில் … Read more