விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: விரைவில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவிக்கையில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கபடும். சிறப்பு ஊக்கத்தொகையான ரூ. 195 உடன் சேர்த்து டன்னுக்கு ரூ. 2,950 வழங்கப்படும் என்று கூறினார்.

நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு தான் இருக்கிறது என்று முதலவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சி அமைக்க முடியாது: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்க முடியாது என நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். ஆறாவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பிரதமர் மோடி இன்று( டிச.,11) கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து டிக்கெட் எடுத்து அந்த ரயிலில் பயணித்த மோடி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மும்பையிலிருந்து நாக்பூர் வரை 701 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.55,000 கோடி செலவில் 10 … Read more

`அப்போ இப்போ – 10: பாலச்சந்தர் சாருடன் இருந்ததால மட்டும்தான் என்னை மதிச்சாங்க!' – கவிதாலயா கிருஷ்ணன்

` ஓர் பழமையான பழைய வீடு எப்படி இருக்கும்? சுவர்களை பெயர்த்துக் கொண்டு ஒழுகும் நீர் கூட அந்த வீட்டின் முந்தைய காலத்தை சட்டென கண் முன் நிறுத்திவிடும். அப்படித்தான் 100 ஆண்டுகள் பழமையான வீட்டிற்குள் நுழைந்தேன். அந்த வீடு பல கலைஞர்களை பார்த்திருக்கிறது. அந்த வீட்டினுள் நாடகம் கூட போட்டிருக்கிறார்கள். அந்த காலத்து பொருட்கள் அருங்காட்சியகத்தில் இருப்பது போல வீட்டின் முற்றத்தில் இரும்பினாலான பணப்பெட்டி ஒன்று பொக்கிஷமாய் பழைய நினைவுகளை சுமந்து நின்றது. அந்த வீட்டினைச் சுற்றியும் அவரும், அவருக்குப் பிடித்தமானவர்களுடன் … Read more

இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தெலுங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ., ‛ சல்லடை

புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வரின் மகள் கவிதா, மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் … Read more

“சத்துணவு முட்டையில் ஊழலா? அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது!" – அமைச்சர் கீதா ஜீவன்

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் சார்பில் ‘மாற்றத்திற்கான மாநாடு’ நேற்று (10-ம் தேதி மாலையில்) … Read more

நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

நாக்பூர்: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில், 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வந்த சூழலில், 6 வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிளாஸ்பூர் இடையே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி … Read more

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை: மீன்வளத்துறை அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடந்த 6-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.