அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை:  தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள  நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக … Read more

1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: 1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரிய வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 1982ல் கன்னியாகுமரி மண்டைக்காடு மத கலவரத்தை போல் இனி நடக்காமல் இருக்க அரசாணை வெளியிடப்பட்டது.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா-வில் காரசார விவாதம்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொந்தளித்தது ஏன்?!

உலக அரங்கில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதையும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதையும் பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்தக் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னையை ‘பாகிஸ்தான் எழுப்பியது. அப்போது, ‘ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது’ என்று இந்தியா குற்றம்சாட்டியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பும் … Read more

மெட்ரோ ரயில் பணி: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, அதே பகுதியில்  15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதன்படி, கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை  அருகே மெட்ரோ ரயில் நிலையம், … Read more

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் 86 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் அஸ்வின் 58, ரிஷப் பண்ட் 46, குல்தீப் யாதவ் 40 ரன்களை எடுத்தனர்.

ஆன்லைன் ரம்மி: “15 நாள்களில் 5 பேர் பலி… ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்திக்கவேண்டும்!" – அன்புமணி

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமலிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்தித்திருந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாவை கூடிய விரைவில் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தவேண்டும் எனக் கூறியிருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுபற்றி அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், … Read more

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து..!!

சென்னை: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியை நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்வீர்கள் என நம்புவதாக இளையராஜா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பெண்ணையாறு நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் – கர்நாடகா இடையே நிலவி வரும் பிரச்னையை தீர்த்து வைக்க பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மூன்று மாதத்தில் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகம் வழியே சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆற்றுக்கு தென்பெண்ணை ஆறு என்று பெயர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தி ஆகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, … Read more

ஸ்ரீசூக்த ஹோமம்: வைகுண்ட ஏகாதசியில் திருமகளைப் போற்றும் மாபெரும் வேள்வி! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள் வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் கருணை கொண்டவள் திருமகள். இவளை சரண் அடைந்தவருக்கு துன்பமே இல்லை. செந்தாமரையில் அமர்ந்து சங்கு சக்கரம் ஏந்திய … Read more

கவலைப்படாதே சகோதரா, நீ வரலாறு படைத்திருக்கிறாய்! உலகக்கோப்பை தோல்வியால் கதறிய எதிரணி வீரருக்கு Kylian Mbappe-வின் ஆறுதல்

கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்த மொராக்கோ வீரருக்கு, பிரான்ஸ் நட்சத்திர வீரர் Kylian Mbappe ஆறுதல் கூறி ட்வீட் செய்துள்ளார். பிரான்ஸ் வெற்றி AL Bayt மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. சாம்பியன் அணிகளை தோற்கடித்துவிட்டு அரையிறுதிக்கு வந்த மொராக்கோ, கோல் ஏதும் அடிக்காமல் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் வீரர்கள் மனமுடைந்தனர். கதறி அழுத ஹகிமி குறிப்பாக, மொராக்கோவின் நட்சத்திர வீரர் … Read more