தமிழகம், புதுச்சேரியில் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணாமப்படும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குரங்குகள் தினம்: பரிணாமம், குறும்பு, சுறுசுறுப்பு – சுவாரஸ்ய தகவல்கள்! #VisualStory

குரங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 14-ம் தேதி `சர்வதேச குரங்குகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குரங்குகள் தினம் எவ்வாறு உருவாகியது என்பதைப் பற்றியும், குரங்குகள் குறித்த சில சுவாரஸ்ய தகவலையும்  தெரிந்துகொள்வோம்.    நண்பர்கள் 2000-ம் ஆண்டு மெக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும் படித்து வந்தனர்.   குரங்குகள் எது எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென எரிக் `இன்றைக்கு என்ன தினம்?’ எனக் கேட்டதற்கு, `இன்றைக்கு குரங்கு தினம்’ என நகைச்சுவையாகப் பதில் … Read more

கத்தார் உலகக்கோப்பை ஊழல்! ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் கைது

உலகக்கோப்பை போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஐரோப்பிய பாராளுமன்ற துணைத் தலைவர் ஈவா கைலி கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் கத்தார் முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்த லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கத்தார் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 14 துணைத் தலைவர்களில் ஒருவரான … Read more

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,488 கன அடியாக உயர்ந்ததால் 5,000 கனஅடி உபரிநீர் திறப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,488 கன  அடியாக உயர்ந்ததால் 5,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் 104.7 அடி வரை நீர்மட்டம் எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட் 2023-24: அடிப்படை வருமான வரம்பு ரூ.5 லட்சம் ஆகுமா? வரிச்சலுகை கிடைக்குமா…

தற்போது நிதிஆண்டில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரைக்கும் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.. மேலும், ஆண்டு ரூ.5 லட்சம் மொத்த வருமானம் உள்ளவர்களுக்கும் வருமானவரியில் ரூ.12,500 வரித் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ரூ. 5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரிக் கட்ட வேண்டியதில்லை. என்ற நிலை உள்ளது. இந்திய பாராளுமன்றம் ஓய்வுக்கால முதலீடுகளும் வருமான வரி சேமிப்பும்..!  மத்திய பட்ஜெட் 2023-24 2023 -ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி … Read more

கூகுள் நிறுவனத்திலும் ஆட் குறைப்பா? சுந்தர்பிச்சையின் தகவலால் கலக்கத்தில் ஊழியர்கள்…

நியூயார்க்: டிவிட்டரைத் தொடர்ந்து, அமேஷான் உள்பட பல பிரபல மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  கூகுளில் பணி நீக்கங்கள் குறித்து சுந்தர் பிச்சை, ‘எதிர்காலத்தை கணிப்பது கடினம்’ என கூறிய கருத்து, அங்கு பணியாற்றி வரும் பல லட்சக்கணக்கான ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. “எதிர்காலத்தை கணிப்பது மிகவும் கடினமானது, எனவே துரதிர்ஷ்டவசமாக, என்னால் நேர்மையாக இங்கு உட்கார்ந்து முன்னோக்கி நோக்கும் உறுதிமொழிகளை சொல்ல முடியாது” என்று கூகுள் ஊழியர்களிடம் பேசிய சுந்தர் … Read more

உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா! ஓய்வு பெறுவது குறித்து மெஸ்ஸி முக்கிய தகவல்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் விளையாடிய பின்னர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா வெற்றி நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் குரோஷியா – அர்ஜென்டினா மோதிய நிலையில் அர்ஜென்டினா அணி 3 – 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்ததையடுத்து இறுதியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. … Read more

சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் அப்துல்கலாம் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள அப்துல்லா கலாம் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். 2047-ல் புதிய இந்தியா உருவாக ஒவ்வொருவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி கூறியுள்ளார். 

கோவை: கார்டு ஸ்வைப் மெஷின் மூலம் மோசடி – அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (42). ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவரும் டாடாபாத் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (39) என்பவரும் நண்பர்கள். தேவராஜ் மனோகரன் கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவரை திமுக-வுக்கு இழுத்த செந்தில் பாலாஜி – வேலுமணி அதிர்ச்சி இதனிடையே இருவரும் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த கம்பெனி பெயரில் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு மூலம், … Read more

உதயநிதி அமைச்சரானதன் எதிரொலி: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் – சிலருக்கு கூடுதல் பொறுப்பு… முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,  தமிழ்நாடு அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் மற்றும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு … Read more