நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி கல்யாணி என்பவர் உயிரிழந்துள்ளர். வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற போது யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.உடலை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"அவரை பெண்களுக்கும் பிடிக்கும்!" – ஈரோட்டில் சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்!

சில்க் ஸ்மிதா… தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவர்ச்சி நடிகை. 1979-ல் முதன்முறையாக `வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகின் கவர்ச்சி ராணியாக வலம் வந்து அவருக்கென தனி இடத்தை வைத்திருந்தார். 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த அவர்தான் 1980, 90களில் பல ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக் கன்னி. அவரால் ஈர்க்கப்பட்ட பல ரசிகர்களும் இன்றும் அவரது நினைவைப் போற்றத் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணம்தான் ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள … Read more

ஜன்னலோரம் பயணித்த ரயில் பயணிக்கு நேர்ந்த பரிதாபம்! அலறிய பயணிகள்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த நபர், இரும்பு கம்பி பாய்ந்தது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜன்னலோரம் பயணித்த நபர் டெல்லியில் இருந்து சென்று கொண்டிருந்த நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹரிகேஷ் குமார் என்பவர் பயணித்தார். அவர் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்தார். உத்தர பிரதேசத்தின் பிரக்யாராஜ் அருகே 130 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு இரும்பு கம்பி ஒன்று நுழைந்தது. வேகமாக பாய்ந்த … Read more

ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு: சென்னையின் குடிநீர் தேவையை 8 மாதம் சமாளிக்கலாம் என அதிகாரிகள் தகவல்..

சென்னை: கிருஷ்ணா நீர், புழல் ஏரி, சோழவரம் உள்பட சென்னைகு குடிநீர் வழங்கும்  ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை 8 மாதம் சமாளிக்கலாம் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால்  புழல் ஏரிக்கு நீர்வரத்து 93 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து  46 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன் … Read more

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுசேரியில் இருந்து 180 பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் திருக்கோவிலூரிலிருந்து 115, கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்புபேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

லுாதியானா குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பிடிபட்டார்| Dinamalar

புதுடில்லி பஞ்சாப் மாநிலம் லுாதியானா கோர்ட் வளாகத்தில் கடந்தாண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, புதுடில்லி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் உள்ள விசாரணை நீதிமன்ற வளாகத்தில், கடந்தாண்டு டிச., 23ல் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரித்தனர். … Read more

என்.டி டிவி அதானி குழுமம் வசமானது… நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜினாமா!

முன்னணி ஊடகத்துறை சார்ந்த என்.டி டிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தமது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் கையகப்படுத்தி இருந்தது. பெரும்பாலான பங்குகள் தற்போது அதானி குழுமத்திடம் சென்றுள்ளதால் இந்த முடிவினை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை என்.டி டிவி நிறுவனத்தின் இயக்குநர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதானி குழுமம் தொலைத்தொடர்பு சேவை உரிமம் பெற்ற அதானி … Read more

IRMS 2023: இந்திய ரயில்வேக்கு தனித் தேர்வை UPSC 2023 முதல் நடத்தும் என அறிவிப்பு…

டெல்லி:  இந்திய ரயில்வேக்கான ஐஆர்எம்எஸ்  தனித் தேர்வை  யுபிஎஸ்சி அடுத்த ஆண்டு முதல் (2023)   நடத்த உள்ளது. யுஎஸ்சியால் நடத்தப்படும், ஐஆர்எம்எஸ் இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் – முதன்மைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே … Read more

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல்

சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியிருந்தார்கள். பேச்சுவார்த்தைகளின்போது, ஊழியர் பிரதிநிதிகள் பண வீக்கத்தை ஈடு செய்யும் அளவில் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்கள். ஆனால், ஏற்கனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை … Read more

அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். வரைப்பட அனுமதி இல்லாமல் எந்த கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார். கட்டிடடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.