பாடசாலை மாணவர்களின் பைகளில் இருந்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை மாணவர்களின் பைகளில் ஆணுறை, மது போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்போன் சோதனை கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நகரின் 80 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் திடீர் சோதனையை நடத்தினர். ஆனால், எதிர்பாராத விதமாக ஆசிரியர்களுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது. சோதனையின் போது செல்போன்கள் தவிர 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் … Read more

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது

திருமலை: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 2 கோடி மதிப்புள்ள 81 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக திருப்பதி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 49 வினாடிகளில் முடித்து சாதனை படைத்த 80 வயது பாட்டி…!

லக்னோ, விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டியிட்டு சாதித்து வருவதை பார்க்க முடியும். அந்தவகையில் இளம் பெண்களே பெரும்பாலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிவார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தின் மீரட்டில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அதன்படி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் அந்த பாட்டி. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

`போலீஸ் வேலை எனக்கு பொக்கிஷம்!’ – விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்

அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வரும் நிலையில் தன் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக நெகிழ்ந்துள்ளார் அவர். அமலாவை பாராட்டும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. கயல்விழி தஞ்சாவூரை சேர்ந்தவர் அமலா (28). இவர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் விரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். டெல்லியில் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு…

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர்  மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்குகிறது. 182 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1ந்தேதி 89 தொகுதிகளிலும்,  2வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் டிசம்பர் 5ந்தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது. குஜராத்தில் … Read more

கடுமையான பனிப்பொழிவு… 30,000 பேர் இருளில் தவிக்கும் கனேடிய மாகாணம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 30,000 பேர் இருளில் தவிப்பு பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Coast பகுதியில் பனிப்பொழிவு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் 30,000க்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்துவருகிறார்கள். கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், நேற்றிரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex Fraser பாலம் மூடப்பட்டது. Shane MacKichan வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரிக்கை இன்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள … Read more

2022 ஜூலை – செப். காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 %: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2022 ஜூலை – செப். காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 % ஆக உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ரூபாய் கணக்கில் 2021 ஜூலை – செப் காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் (2022 ஜூலை -செப்.) ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.38.17 கோடியாக உள்ளது.

வரலாற்றுச் சிறப்புடையது திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலய பலிபீடம் – ஏன் தெரியுமா?

திருக்கோயில்கள் அனைத்திலும் முக்கியமான இடத்தைப் பெறுவது `பலிபீடம்’. பொதுவாக ஆலயங்களில் பாதுகாவல் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் உணவான `ஸ்ரீபலி’ எனப்படும் அன்ன உருண்டையானது இந்தப் பலிபீடத்தின் மீது தினமும் வைக்கப்பெறுவது மரபு. மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்து மஹாநந்தியின் பின்புறமுள்ள மிகப்பெரிய ‘பலிபீடம்’ புகழ்மிக்க வரலாற்றுச் சிறப்புடையது. சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பு, சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது, அவரது தந்தையார் சிவபாதகிருதயர் தமது வேள்விக்காகப் பொருள் தேவைப்படும் நிலையை உரைத்தாராம். இதனைச் செவியுறும் சம்பந்தர் ‘ஈசனின் திருவடிகளே அந்தமில்லா அரிய பொருள்’ என்று சிந்தித்து, … Read more

FIFA உலகக்கோப்பையில் மோசமாக தோற்ற முக்கிய அணி! அதை கொண்டாடிய அந்நாட்டு மக்கள் வீடியோ

கத்தார் உலக கோப்பை போட்டியில் அமெரிக்க அணியிடம் ஈரான் அணி தோற்றதை அந்நாட்டு மக்களே ஆரவாரமாக கொண்டாடி தீர்த்துள்ளனர். ஈரானில் தொடர் போராட்டம் பெண்கள் ஆடை சுதந்திரத்திற்கு எதிரான கட்டுபாடுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிலும் மிக முக்கியமாக, ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் Mahsa Amini என்ற பெண் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்தபோதே அவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி அரசுக்கெதிராக … Read more

மழைநீர் வடிகால் கால்வாய் பணி: சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக, இரண்டு வாரம் (14 நாட்கள்) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக … Read more