ராஜாஜிநகர்-யஷ்வந்தபுரம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை

ராஜாஜிநகர்: பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் இருந்து யஷ்வந்தபுரம் செல்லும் சாலையில் எப்.டி.ஐ. சர்க்கிள் அருகே கடந்த சில வாரங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து, சர்க்கிள் பகுதியை கடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலை ஸ்தம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவது என கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார், அந்த … Read more

அஸ்ஸாம்: திடீரென வெடித்துச் சிதறிய காஸ் சிலிண்டர்கள்… 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் தீக்கிரை

அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லையையொட்டிய, அஸ்ஸாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போகாஜன் அருகே லஹோரிஜான் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாகவும், வீடுகள், கடைகள் உட்பட ஒரு நான்கு சக்கர வாகனம், மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. அஸ்ஸாம் தீ விபத்து உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படும் அதேவேளையில், இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியாகக் … Read more

FIFA உலகக்கோப்பை கால்பந்து: 12 போட்டிகளில் முதல் முறையாக கோல் போடாத குரோஷியா..டிராவில் முடிந்த ஆட்டம்

அல் பாய்ட் மைதானத்தில் இன்று நடந்த குரோஷியா, மொராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. ப்ரீ கிக் வாய்ப்புகள் வீண் குரூப் F-யில் உள்ள குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் அல் பாய்ட் மைதானத்தில் இன்று மோதின. பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியின் 20வது நிமிடத்தில், மொராக்கோ அணி வீரர் ஹக்கீம் அடித்த பிரீ கிக் ஷாட்டை குரோஷியா வீரர்கள் தடுத்தனர். @Getty Images அதன் பின்னர் இரு அணி வீரர்களின் கோல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், … Read more

காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுப்பு – அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது! அண்ணாமலை விளக்கம்

சென்னை:  காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான பாஜக கூட்டணி தொடர்கிறது என்று விளக்கம் அளித்தார். சமீபகாலமாக மாநில பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது. மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக அண்ணாமலை மீது புகார் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் பாஜவில் நிர்வாகிகளிடையே நடைபெற்ற மோதல் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா … Read more

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை முன்னாள் காவல் ஆணையர்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

38 பேர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங், சீனாவில், ஒரு தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௩௮ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவின், ஹெனான் மாகாணம், வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங்கில் ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ௬௩ தீயணைக்கும் வாகனங்களுடன் வந்த ௨௪௦ வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தும் இந்த விபத்தில் ௩௮ பேர் பலியாகினர்; … Read more

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் சடலமாக கண்டெடுப்பு..!

தண்டேவாடா, சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் புசரஸ் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஜியாகோர்டா வனப்பகுதியில் ரூ.8 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த நக்சல் கமாண்டர் தேவா என்ற திர்ரி மட்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் ஆயுதங்களுடன் குவாகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் நேற்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தர்பா பிரிவின் சிபிஐ மாவோயிஸ்ட்டின் கட்டேகல்யான் பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்த தேவா … Read more

“முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி… அமைச்சர்கள் சண்டைதான் அதற்கு உதாரணம்!" – டிடிவி.தினகரன்

“தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால், அமைச்சர்களிடையே வெளிப்படையாக சண்டை ஏற்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இதுதான் உதாரணம். அ.தி.மு.க என்ற கட்சியே செயல்படாமல் உள்ள நிலைமைக்கு எடப்பாடிதான் காரணம்” என  டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நட்சத்திரரீதியாக தனது 59-வது வயது நிறைவடைந்து 60-வது வயது துவங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில்  உக்கிர ரத சாந்தி … Read more

நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதி சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 20,990 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புர உள்ளாட்சிப்  பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி  வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர்,  சட்டமன்றப் … Read more

அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம்

சென்னை: அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. மாநகர பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.