முதல்வர் பசவராஜ் டில்லியில் முகாம் | Dinamalar

டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கலபுரகி, துமகூரு, விஜயபுரா ஆகிய மூன்று மாவட்டங்களில் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்கா அமைக்கும்படியும்; 2 லட்சம் டன் அரிசி வழங்கும்படியும் வலியுறுத்தினார். பின், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்து, பல்லாரியின் குடேகோட்டை கரடி சரணாலயம், பெலகாவியின் பீம்காட் வன விலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக … Read more

“15 வருஷமா துயரத்தை அனுபவிச்சிட்டு இருக்குறோம்!" – நிலம், பட்டாவுக்கு எங்கும் பழங்குடியின மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில், செம்பனார் கோயில் காவல் நிலையம் எதிரே 12 பழங்குடியின குடும்பங்கள் சுமார் 15 வருடங்களாக வசித்து வருகின்றன. அவர்களுள் சிலருக்கு மட்டுமே அடையாள அட்டை, குடும்ப அட்டை இருக்கின்றன. ஒருவருக்குக்கூட ஓட்டுரிமை இல்லை. நிரந்தரமாக தங்க இடம்கூட இல்லாமல் இந்த மக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய கலியமூர்த்தி என்பவர், “நாங்க 15 வருஷமா இங்கதான் தங்கி இருக்கோம். கிட்டத்தட்ட 15 … Read more

பணியின்போது ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள்: 23 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

பிரித்தானியாவில், கோவிட் பரிசோதனை செய்யும் ஆய்வகத்தில், பணி நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆய்வகப் பணியாளர்களால் 23 பேர் பலியானதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 39,000 பேருக்கு தவறான கோவிட் பரிசோதனை முடிவுகள் ஆய்வகப் பணியாளர்களின் கவனக்குறைவால், கோவிட் பரிசோதனை செய்யும் தானியங்கி இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சினை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவிட் நோயாளிகளுக்கு, கொரோனா தொற்று இல்லை என தவறான பரிசோதனை முடிவுகளைக் கொடுக்க காரணமாக அமைந்துள்ளது. மிகச்சரியாகக் கூறினால், 39,000 கோவிட் நோயாளிகளுக்கு, உண்மையில் … Read more

வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்! எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சேலம்: நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மற்றும் திமுகஅரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசியுள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்அமைச்சர், திறமையற்ற முதல்அமைச்சர்  என கடுமையாக விமர்சனம் செய்தார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  இன்று எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு … Read more

 புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது  மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. யானை மறைவால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. யானை லட்சுமியின் மறைவை தாளாமல் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

குஜராத் தேர்தல்: "ஆம் ஆத்மி பெயர் வெற்றி வேட்பாளர்களின் பட்டியலில், இல்லாமல்கூட போகலாம்!" – அமித் ஷா

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் கோட்டையை அங்கு தகர்க்க வேண்டுமென்ற இலக்குடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாகப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர்கள் சூராவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்றைய தினத்துடன் அங்கு முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நேற்று அங்கு பிரசாரம் … Read more

இதுவரை கண்டிராத மிக மோசமான பறவைக் காய்ச்சல் வெடிப்பு! பிரித்தானிய தலைமை நிர்வாகி அச்சம்

பிரித்தானியாவில் 1.3 மில்லியன் வான்கோழிகளில் பாதியளவு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி வளர்ப்பு தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். வான்கோழி தட்டுப்பாடு பிரித்தானியா மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சலால் கிறிஸ்துமஸ் சமயத்தில் வான்கோழிக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் Commons உணவு மற்றும் விவசாயக் குழுவான Efra-வின் விசாரணையில் நெருக்கடியின் விவரங்கள் வெளிப்பட்டன. சமீபத்தில் பிரித்தானியாவில் உள்ள அனைத்து கோழி மற்றும் … Read more

அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 100% சுக‌ப்பிரசவம் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இன்று சென்னை தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை திறந்துவைத்தார். தொடர்ந்து, அவசரகால ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பெங்களூரில் 7,000 கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பெங்களூரு, : பெங்களூரில் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ‘பாதுகாப்பான நகரம்’ என்ற முழக்கத்திற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், மத்திய அரசு, ‘நிர்பயா நிதி திட்டத்தை’ அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை, கோல்ட்டா, ஹைதராபாத், ஆமதாபாத், லக்னோ நகரங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு … Read more