செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஹலோ ஸ்டாலின்… ஹவ் ஆர் யூ" – கலகலத்த டெல்லி ஜி20 ஆலோசனைக் கூட்டம்!

ஜி 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது இந்தியா. அடுத்தாண்டு செப்டம்பரில் ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதுதொடர்பான முன்னேற்பாடுகள் இப்போதிருந்தே வேகமெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. உச்சி மாநாடுக்கு முன்பாக, பொருளாதாரம், சுகாதாரம், கலாசாரம், மொழி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் சுமார் 200 கூட்டங்களை நடத்தவும் ஏற்பாடாகிறது. ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதால், இந்தக் கூட்டங்களையும் உச்சி மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்திட தீர்மானித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக, நாடு … Read more

தினமும் சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க சப்பாத்தியை தினமும் சாப்பிட்டு வருகிறார்கள்.  சப்பாத்தி முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.  குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தியை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள்.   ஆனால் இப்படி சப்பாத்தியை தினமும் சாப்பிடுவது நல்லதா என்பதை பற்றி இங்கெ தெரிந்து கொள்வோம்.  image – goodto.com எப்படி உதவுகிறது? சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் நிரம்பியுள்ளது. எனவே இது … Read more

158 இடங்களில் முன்னிலை: குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக…

காந்திநகர்: குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.. இதன் காரணமாக குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைப்போல ஆட்சியை பிடிப்போம் என்று சவால் விட்ட ஆம்ஆத்மி பெருந்தோல்வி அடைந்துள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த சட்டமன்ற  தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும். … Read more

அரசு நிலங்களில் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றக்கோரி வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட்கிளை உத்தரவு

மதுரை: அரசு நிலங்களில் அனுமதியின்றி வைத்துள்ள அரசியல், சாதி  சங்கங்களின் கட்சி கொடி, பேனர்களை அகற்றக்கோரி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல மனு அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குஜராத்: 20 வருட காங்கிரஸ் கோட்டையான பெட்லாட் தொகுதியையும் கைப்பற்றிய பாஜக! – பின்னணி என்ன?!

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 182 இடங்களில் 154-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய குஜராத் மண்டலமான ஆனந்த் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதியான பெட்லாட் … Read more

தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்கிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

தென்காசி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில்,  ரூ.182 கோடியில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து  அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்கிறது வீரத்தின் விளை நிலம் தென்காசி மாவட்டம். வடக்கே உள்ள காசி போல தெற்கே உள்ள காசிதான் தென்காசி என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் … Read more

FIFA உலகக்கோப்பை நடக்கும் கத்தாரை தாக்கிய சூறாவளி, ஆலங்கட்டி மழை

2022 FIFA உலகக் கோப்பையை நடத்தும் வளைகுடா நாடான கத்தாரில் நேற்று மோசமான வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமையன்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே காலிறுதி ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், போது கத்தாரை ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி தாக்கியது . தலைநகர் தோஹாவிற்கு வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள ராஸ் லஃபான் தொழில் நகரத்தில் சூறாவளி காற்று வீசியது. பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் Al Khor-ன் Al Bayt மைதானத்திற்கு அருகில் கருமேகங்கள் … Read more

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு  முதல் கட்டமாக ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் காட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

டில்லியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு| Dinamalar

புதுடில்லி: டில்லியில் சில நாட்களில் கொலை செய்து, சடலங்களை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, காட்டு பகுதியில் துண்டுகளை வீசும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்கேஸ் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை இன்று (டிச.,08) போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நடந்தது. தொடர்ந்து, … Read more