தலைப்பு செய்திகள்
கத்தார் உலக கோப்பை! வேல்ஸ் அணியை கதறவிட்ட இங்கிலாந்து… விரக்தியடைந்த ரசிகர்கள்
கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் கோல் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் … Read more
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: 49 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பிளவு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை தோட்டம் … Read more
திருவண்ணாமலை காவல்துறை சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தீபத் திருவிழா எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்தேற திருவண்ணாமலை காவல்துறை சார்பில் வேண்டுதல் நடைபெற்றது.
ராகுல் பெரும் படைசூழ நாடு முழுக்க நடந்துட்டு இருக்காரே… அதுக்கான செலவுகளை யார் செய்றாங்க?| Dinamalar
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: நம் நாட்டில் ஏழு அரசியல் கட்சிகளின் நன்கொடை வருவாய், ௧,398 கோடி ரூபாய்; அதில், பா.ஜ.,வுக்கு மட்டும், ௧,௦38 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், 989 கோடி ரூபாய் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களின் நன்கொடையாக மட்டுமே பெறப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மொத்த நன்கொடையில், 73.5 சதவீதம் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை திரட்டுவதை, பா.ஜ., ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. உங்க … Read more
“எப்ப பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்ன்னு சொல்லாதீங்க..!” – திருச்சி மேயரிடம் கொதித்த கவுன்சிலர்கள்
திருச்சி மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய தினம் மதியம் சுமார் 12.30 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் – அரியலூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி வந்து விமானம் மூலமாக சென்னை செல்லும்படி திட்டமிடப்பட்டு இருந்தது. அதனால் முதல்வரை வழியனுப்ப மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் செல்ல வேண்டிய சூழல் … Read more
திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகப் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், … Read more
ஏரியில் மீன்பிடிக்க 9 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூனங்குப்பம் மக்கள் போராட்டம்
திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி பிரச்சனையால் 500க்கும் மேற்பட்டோர் மீன்பிடி வலைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். திருவள்ளூர் ஆட்சியர் அலுவகத்தில் ஆவணங்களை ஒப்படைக்க ஊரைவிட்டு வெளியேறி நடந்து செல்கின்றனர். பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க 9 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூனங்குப்பம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் அம்மா உணவகம்… “என்றாலும் தொடர்ந்து செயல்படும்" – மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பல உணவகங்களில் இருந்து மிகவும் குறைவான அளவில் மட்டுமே வருவாய் வருகிறது. இந்த நிலையில். நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கணக்கு குழு தலைவர் தனசேகரன்,” சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே, தினசரி 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் நிலையில் உள்ள, மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதியில் உள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும்” … Read more
லண்டனில் இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற இந்தியர்! அவரின் கொடிய முகம்… முழு தகவல்
லண்டனில் இலங்கை பெண்ணை சீரழித்து கொன்றதோடு மேலும் 3 பெண்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர் தொடர்பில் மூத்த அதிகாரி சில விடயங்களை தற்போது பேசியுள்ளார். லண்டனில் 2009ல் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் Aman Vyas (38) என்ற இந்தியர் கடந்த 2009ல் லண்டனையே அதிரவைத்திருந்தார். ஏனெனில் அந்த ஆண்டில் மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்ததோடு மற்றொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்திருந்தார். அதிகாலை அல்லது நள்ளிரவில் தனியாக இருக்கும் பெண்களை … Read more