டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த 5ஜி சேவை தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிவேக இன்டர்நெட் வசதியை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் மேலும் 3,805 பேருக்கு கோவிட்: 13 பேர் பலி

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,805 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,805 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,91,112 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,069 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,24,164 ஆனது. தற்போது 38,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 13 பேர் மரணமடைந்ததால், … Read more

நவராத்திரி 6-ம் நாள்: சண்டிகா தேவி அருள அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நாம் கடவுளிடம் போய் பிரார்த்தனை செய்கிறோம் என்றால் எதற்காக? நம் மனதில் இருக்கும் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் அந்த கடவுளிடம் சொல்லிவிட்டு நீ எனக்கு நல்லவழி காட்டு என்று கூறி மன நிம்மதி அடையத்தான். அப்படி இந்த நவராத்திரி நாள்களில் அம்மனிடம் பிரார்த்தனை செய்யும்போது மனதறிந்து நாம் செய்த பாவங்களை எல்லாம் தவறென்று ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிமிடத்தில் நாம் மனதார தவறை உணர்ந்து அம்மனுடைய பாதகமலங்களில் விழுகிறோமோ, அந்த நேரத்திலேயே அம்மன் நம்முடைய பாவ வினைகளை … Read more

சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே!| Dinamalar

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட, ‘அம்மா மினி கிளினிக்’குகள் தொடர்ந்து இயங்கியிருந்தால், தற்போது பரவலாக தொற்றும் சளி, இருமல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை பெற, மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.இப்போது, ஆட்சியாளர்களுக்கு மினி கிளினிக்குகளின் அருமை தெரிந்துஇருக்கும். இதன் பிறகாவது, மூடப்பட்ட மினி கிளினிக்குகளை மீண்டும் துவக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே! … Read more

2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய ஊழியர்கள்; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

லக்னோ, உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் … Read more

கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன்… காவல்துறையிடம் விளக்கம்… நடந்தது என்ன?!

கோவை யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் சமீப காலங்களாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவுடன் கோவை சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பயணித்தார். ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன் எச்சரித்தும் மாறாத டி.டி.எஃப் வாசன்… ஜி.பி.முத்துவுடன் அபாய பயணம்… பாய்ந்தது வழக்கு! இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால், கைது பயத்தில் வாசன் வீடியோ வெளியிடாமல் இருந்தார். இதையடுத்து போத்தனூரில் … Read more

சென்னையில் 15 நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

சென்னை: சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் திருமாவளவனின் எதிர் மனித சங்கிலி அறிவிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசு எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு  நவம்பர் 6ந்தேதிக்கு  … Read more

உலகக் கோப்பை தொடருக்கான அணியில் பும்ரா நீடிக்கிறார்: சௌரவ் கங்குலி தகவல்

மும்பை: காயம் காரணமாக அவதியுறும் பந்துவீச்சாளர் பும்ரா, 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் நீடிக்கிறார் என சௌரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். பும்ரா  உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா செல்வாரா என்பது 3 நாட்களில் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

புதுடெல்லி, சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் ‘ரெட்மி’ என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெமா சட்டப்படி, இந்த உத்தரவுக்கு உரிய உயர் … Read more