`உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல் பெண் சோப்தார்!' அவரின் பணி என்ன தெரியுமா?

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி, சேம்பரிலிருந்து நீதிமன்றக் கூடத்துக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் இடையூறு இல்லாமல் செல்வதற்காக, `சத்தம் போடாதீர்கள்!’ என்று சைகையில் சொல்லியபடி வெள்ளைச்சீருடை, தேசியச்சின்னம் பொறுத்தப்பட்ட … Read more

தவறாக பயன்படுத்தப்பட்ட இளம்பெண்ணின் பாஸ்போர்ட்: ஒரு எச்சரிக்கை செய்தி

தனது பாஸ்போர்ட்டுடன் விசாவை இணைப்பதற்காக இந்திய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க, அவருக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உயர் கல்விக்காக பிரித்தானியா செல்ல திட்டமிட்டுள்ள இளம்பெண் அந்த 29 வயதுடைய பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக நெதர்லாந்தில் தங்கி கல்வி பயின்று வருகிறார். அடுத்து உயர் கல்விக்காக பிரித்தானியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது விசாவை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்காக இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார் அவர். மின்னஞ்சலில் வந்த அதிர்ச்சி … Read more

ஆசிரியர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி தொடக்கம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சார்ந்த மாநில அளவில் 3-ம் பருவத்துக்கான மாநில மாவட்ட அளவிலான பயிற்சி ஆசிரியர்களுக்கு நடத்தப்படவுள்ளதாகவும்,  முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதப் படங்களுக்கு மாநில அளவிலான முதன்மை எழுத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் தொடங்கப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  மதுரை மாவட்டத்தில் டிசம்பர்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்கள் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறும் என்று … Read more

அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிச. 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முதலில் மாவட்டத்துக்குள்ளும், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில் சேர்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு தினம்: இறப்பை உறுதி செய்ய வேண்டியது ஆணையமா, மருத்துமனையா? – நீடிக்கும் குழப்பம்..!

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அப்போது அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இது தொடர்பான முழு அறிக்கையும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வரிடம்  நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்தார். இதை அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவையில் 608 பக்க ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கியமான பல … Read more

8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…

திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து தரிசித்தனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் சிறப்பு வாய்ந்தது. காத்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக  திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலை  அண்ணாமலை யார் கோவில் வளாகத்தில் … Read more

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

மதுரை: திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைகை ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் கல்லூரி வளாகத்துக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை மருத்துவக் கல்லூரியில் ஆன்லைனில் கல்வி கற்பித்தல் தொடரும் என கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

FIFA WorldCup Round Up 2022: மெஸ்ஸி கொடுத்த ஜெர்சி முதல் அப்செட்டான ரொனால்டோ வரை!

சாதித்த இளம் வீரர்: போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டியில் பிரேசிலின் பீலேவிற்கு பிறகு ஹாட்ரிக் கோல்கள் அடித்த இளம் வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார். Ramos அப்செட்டில் ரொனால்டோ: சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் நேற்றைய போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ … Read more

ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில்  அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் மெத்தனம் காட்டுவதால், அங்கு வசிக்கும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 25ந்தேதி அன்று  ராஜஸ்தானில் உள்ள சிறையில் உள்ள  தண்ணீரைக் குடித்ததால் 3 கைதிகள்  இறந்தனர், … Read more

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம் 647 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆணைகளை வழங்கினார்.