பார்வையற்றோர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

டிஜிட்டல் மயமாகும்  மாருதி பிரீசா| Dinamalar

புதுடில்லி, ‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரீசா’ எஸ்.யு.வி., காரில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே’, ‘ஸ்மார்ட் இன்போடெயின்மென்ட்’ அமைப்பில் ‘ஆண்ட்ராய்டு ஆட்டோ’ இணைப்பு, மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ‘டர்ன் பை டர்ன் நேவிகேஷன்’ என பல முக்கியமான வசதிகளை புதிதாக கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மாடல் பிரீசா, கடந்த ஜூனில் வெளியிடப்பட்ட நிலையில், இது வரை 1.9 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,எலெக்ட்ரிக் சன்ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா … Read more

நீதிபதி தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு… மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முன்னதாக 2019-ம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தமிழக அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு, சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது, சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு … Read more

தினமும் உணவில் கொஞ்சம் கருப்பு மிளகு சேர்த்துகோங்க! உங்க உடம்பில் இந்த அதிசயங்கள் நடக்குமாம்

கருப்பு மிளகு அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் குறைந்த கலோரிகள், தாதுக்கள், விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு பல ஆரேக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அந்தவகையில் கருப்பு மிளகை தினமும் உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.     கருப்பு மிளகு செரிமானத்திற்கு உதவுகிறது, இது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வெளியிடுகிறது, இது புரதங்களை உடைக்கிறது. … Read more

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பயணம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் … Read more

தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும்: ஒன்றிய கால்நடைதுறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும் என ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கோமாரி நோயால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசியை விரைந்து வழங்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு| Dinamalar

புதுடில்லி: காங்., க்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ராகுல் பெரும் அவமானமாக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். காங்., எம்.பி ராகுல் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.,வை நிச்சயம் காங்கிரஸ் கட்சி வீழ்த்தும். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகவும் திட்டமிட்டு அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. கட்சி வலுவிழந்து போகிறது என்ற கருத்தை பா.ஜ.,வினரால் பரப்பப்படுகிறது. எல்லையில் சீனா போருக்கு தயாராகி வருகிறது; ஆனால் நமது அரசு … Read more

நடிகை குஷ்புவின் சகோதரர் மரணம்

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை குஷ்புவின் அண்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் தியாயியுலகில் 80 மற்றும் 90-களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவின் சகோதரர் அபுபக்கர் இன்று மரணமடைந்தார். தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள குஷ்பு, நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். குஷ்பு சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், … Read more

தமிழகம், புதுச்சேரியில் வரும் 20, 21-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னைவானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 20, 21-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழத்தில் வரும் 18-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.