மதுரை அருகே போலி பெண் மருத்துவர் கைது

மதுரை: மதுரை ஸ்ரீராம்நகர் பகுதியில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த யோகசரஸ்வதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் அளித்த புகாரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2022-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு 'பிரியாணி' – ஸ்விகி வெளியிட்ட தகவல்

புதுடெல்லி, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. … Read more

குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகன்; கடைசி நேரத்தில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், கான்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞனும் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். அப்போது மணமேடையில் மணப்பெண் நின்றுகொண்டிருக்க, மணமகனோ போதையில் தள்ளாடிய நிலையில் வந்திருக்கிறார். இதன்மூலம் மணமகன் மது அருந்தியிருப்பதை உணர்ந்த மணமகள், மாலைகளை இருவரும் மாற்றிக்கொள்வதற்கு முன்பாக தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என துணிச்சலாக மேடையிலிருந்து இறங்கிவிட்டார். திருமணம் இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், “தன்னுடைய சொந்த திருமண நாளிலேயே … Read more

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. கடல் அருகே உள்ள பார்வையிடும் தளம் மட்டும் மழைக்காலம் முடிந்த பிறகு சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என மாநகராட்சி தகவல்

"அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது"- புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் … Read more

ஈரோடு: கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு!- காட்டு யானைகளை விரட்ட 2 கும்கிகள் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஆசனூர், ஓங்கல்வாடி, அரேப்பாளையம் கிராமப் பகுதிகளில் அண்மைக் காலமாக ஒற்றைக் காட்டுயானை புகுந்து சேட்டை செய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியையொட்டியுள்ள அரேப்பாளையம், ஓங்கல்வாடி கிராமங்களுக்குள் பகல் நேரத்திலேயே அந்த காட்டுயானை வலம் வருவதால் கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர். சில நேரங்களில் அந்த காட்டுயானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பது, ஊருக்குள் நிறுத்தியுள்ள வாகனங்களின் கண்ணாடியை உடைப்பது,  அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது … Read more

22 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் ஜெகதீசன் அசத்தல்… அதிரடியையும் தாண்டி ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி டிரா

தமிழக வீரர்களின் அதிரடியையும் தாண்டி ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஹைதராபாத்-தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஹைதராபாத் – தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற்றது. 13 ம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 395 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணி துவக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் … Read more

தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் போக்சோ மற்றும் சிறார் சம்மந்தப்பட்ட வழக்குகள் குறைந்துள்ளன. தமிழகம் முழுவதும் அமல்படுத்தலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வாரணாசியில் நடைபெற்ற 'காசி தமிழ் சங்கமம்' நிறைவு

வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ந் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ந் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் (டிசம்பர் … Read more