எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கம் சீன ஹேக்கர்கள் காரணம்| Dinamalar

புதுடில்லி :சீன ‘கம்ப்யூட்டர் ஹேக்கர்’களால் முடக்கப்பட்ட புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ‘சர்வர்’கள் தற்போது மீட்கப்பட்டு, தகவல்கள் பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் உட்பட ஆண்டுக்கு 38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், ‘அப்பாயின்ட்மென்ட்’ ரசீது வழங்குவது, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பரிசோதனை முடிவுகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அனைத்தும், ‘ஆன்லைன்’ வாயிலாக … Read more

மூச்சுத் திணறி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி| Dinamalar

பால்கர்:மஹாராஷ்டிராவில், பால்கர் மாவட்டத்தில், வடா தொழிற்பேட்டை பகுதியில் ரசாயனப்பொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இதில், நேற்று முன் தினம் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களில் ஒருவர், பராமரிப்புப் பணிக்காக ரசாயன கலவைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு விஷவாயு கிளம்பிய நிலையில், அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்கச் சென்ற மற்றொரு தொழிலாளியும் மயங்கி விழுந்துள்ளார். உடனே, மற்ற தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். … Read more

உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்… ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு

கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதும் நிலையில், பாரிஸ் நகரில் இரு அணி ரசிகர்களிடையே உள்நாட்டுக் கலகம் வெடிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் புதன்கிழமை இரவு பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருக்கிறது. இதனையடுத்து பாரிஸ் தெருக்களில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். Shutterstock பாரிஸ் நகரத்தை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மொராக்கோ மக்கள் வசித்து … Read more

ஒரே சார்ஜில் 1,000 கி.மீ., பயணம் அசத்தலான பென்ஸ் மின்சார கார் அறிமுகம்| Dinamalar

பெங்களூரு :’மெர்சிடிஸ் பென்ஸ்’ நிறுவனம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, அதன் 3வது ‘சேப் ரோட்ஸ் இந்தியா’ மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த மாநாட்டில், ‘விஷன் ஜீரோ’ என்ற முன்னெடுப்பின் வாயிலாக, 2050ம் ஆண்டுக்குள், இந்தியாவில் சாலை விபத்துகளை 50 சதவீதம் அளவிற்கு குறைப்பதற்கான, தெளிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, பென்ஸ் நிறுவனத்தின் பிரேத்யேக, 50 ஆண்டுகள் அனுபவம் மிக்க, விபத்துகள் ஆராய்ச்சி அமைப்பை இந்தியாவில் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பென்ஸின் அதிநவீன … Read more

கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் வெளியிட்ட கிறிஸ்துமஸ் அட்டை: மகிழ்ச்சியில் லைக் போட்ட மன்னர் சார்லஸ்!

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டைக்கு மன்னர் சார்லஸ் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். கிறிஸ்துமஸ் அட்டைப் படம் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதி தங்களின் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டையை செவ்வாயன்று இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரே நேரத்தில் வெளியிட்டனர். அதில் “இந்த வருட கிறிஸ்துமஸ் அட்டைக்காக குடும்பத்தின் புதிய படத்தைப் பகிர்கிறேன்!” என்று எழுதினர். Twitter @KensingtonRoyal மன்னர் மூன்றாம் சார்லஸ் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் மற்றும் … Read more

கிராஷ் டெஸ்ட் சோதனை மகிந்திரா அசத்தல்; மாருதி பரிதாபம்| Dinamalar

மும்பை, ‘மகிந்திரா’ நிறுவனத்தின் ‘ஸ்கார்பியோ’ எஸ்.யு.வி., கார், ‘குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்’ல் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான ‘மாருதி சுசூகி’யின் கார்கள், இந்த சோதனையில் வெறும் 1 ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளன. இதில், மாருதியின் ‘எஸ் – பிரஸ்ஸோ, ஸ்விப்ட், இக்னிஸ்’ ஆகிய கார்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஸ்கார்பியோ கார், பெரியவர்கள் பாதுகாப்பில் 39 புள்ளிகளுக்கு 29.25 புள்ளிகளை பெற்று, 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 … Read more

மாயமான மலேசிய விமானம்: 8 ஆண்டுகள் கழித்து கிடைத்த தடயம்., உடையும் மர்மங்கள்

எட்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய சில புதிய தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது விமானிகள் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை காட்டுகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 MH370 எனும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8 2014-ஆம் ஆண்டு தலைநகர் கோலாலம்பூறில் இருந்து சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்தபோது மாயமானது. இந்த விமானம் காணாமல் போனதில் 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 … Read more

துப்புரவு பணியாளரை அலைக்கழித்த தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்| Dinamalar

புதுடில்லி:துப்புரவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடித்த தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் லட்சுமணன். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் துப்புரவுப் பணியாளராக மாதம் 105 ரூபாய் தொகுப்பூதியத்தில் 1992ல் பணியில் சேர்ந்தார். கடந்த 2002 டிச., 2ல் இவரது பணி முறைப்படுத்தப்பட்டது. கடந்த 2012 ஜூன் 30ல் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2002ல் இருந்து இவரது சம்பளம் கணக்கிடப்பட்டு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. … Read more

15.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 15 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

Daily Astro predictions for Mesham to Meenam by Srirangam Karthikeyan. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் சிக்கிய இன்னொரு சிறுவனும்… நெஞ்சைப் பிசையும் தகவல்

பர்மிங்ஹாமில் உள்ள உறைந்து போயிருந்த ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த நான்காவது சிறுவனும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்காவது சிறுவனும் மரணம் குறித்த விபத்தில் சிக்கிய மூன்று சிறுவர்கள் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது 6 வயதுடைய நான்காவது சிறுவனும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. @PA கடந்த ஞாயிறன்று நடந்த இச்சம்பவத்தை அடுத்து, தொடர்புடைய சிறுவன் பர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தான். இந்த … Read more