கனவு முடிவுக்கு வந்தது! உலகக் கோப்பை தோல்விக்கு பின் மெளனம் கலைத்த ரொனால்டோ

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி தோற்று வெளியேறிய நிலையில் அது குறித்து மெளனம் கலைத்துள்ளார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் தோல்வி கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மைதானத்தில் இருந்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மனதை வேதனையடைய செய்தது. இந்த நிலையில் போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவு … Read more

மாநில அரசின் 75சதவிகித மானியத்தில், பிரதமரின் பெயரில் (PMFBY) பயிர் காப்பீடு திட்டம்… சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு…

சென்னை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)  தற்போது 7வது ஆண்டில் உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான மானியத்தில் மத்தியஅரசு, மாநிலங்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆரம்ப காலத்தில் மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கிய நிலையில், தற்போது மாநில அரசு 75 சதவிகிதமும், மத்தியஅரசு 25 சதவிகிதம் … Read more

மாவட்ட நீதிமன்றங்களில் போதிய பாதுகாப்பு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு விளக்கம்

மதுரை; மாவட்ட நீதிமன்றங்களில் போதிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: டிச.,15க்கு ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிச.,15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி … Read more

முப்பத்து மூன்று சதவீதம்! |சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தன் பெரியம்மாவுடன் கவிதாவைப் பெண் பார்க்க வ‌ந்திருந்தான் கணேசன்.  பெரியம்மா என்றால் சொந்தப் பெரியம்மா அல்ல.  தூரத்து உறவில் பெரியம்மா முறை ஆக வேண்டும்.  அப்பா, அம்மாவை சிறு வயதிலேயே இழந்து பரிதாபமாய் ஒற்றையாய் நின்ற கணேசனை, கருணை அடிப்படையில் வளர்க்கும் பொறுப்பை … Read more

திருமண பரிசாக கழுதைக்குட்டி! மணமகளை வியப்பில் ஆழ்த்திய மணமகன்: காரணம் தெரியுமா?

பாகிஸ்தானில் மணமகன் ஒருவர், மணமகளான தனது மனைவிக்கு கழுதை ஒன்றை கல்யாண பரிசாக வழங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்யாண பரிசாக கழுதை காதல் திருமணமோ அல்லது வீட்டில் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமோ, தற்போது திருமணங்கள் எப்படி இருந்தாலும் சரி, கல்யாண நாள் அன்று மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பிரமிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். சிலர் தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது மூலமாகவோ, அல்லது … Read more

உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை படிப்படியாக நிறுத்த வேண்டும்! பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி

டெல்லி: உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி வலியுறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ராஜ்யசபாவில் பூஜ்ஜிய நேரத்தில் ரூபாய் குறித்து,  குறிப்பு மூலம் பிரச்சினையை எழுப்பிய அவர், நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டதாகவும், அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகள் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, பேசிய பாஜக எம்.பி. சுசில்குமார் மோடி, ‘2,000 ரூபாய் நோட்டுகள் … Read more

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்டும் நிலை உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக இன்று (டிச.,12) பதவியேற்றார். குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., சாதனை படைத்தது. 1995 முதல் 27 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து வந்துள்ளது. தற்போதைய வெற்றியின் வாயிலாக, ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியை … Read more

“2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும்" – நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த ஒருவாரமாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி என்பவர், 2,000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி ராஜ்ய சபாவில் இன்று ஜீரோ ஹவரில்(zero-hour) பேசிய பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி, “நாட்டிலிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டன. மேலும் அவை விரைவில் செல்லாது என்ற வதந்திகளும் வெளிவருகிறது. இது … Read more