செம்மரக்கடத்தல்; சினிமா பாணியில் நடந்த சேஸிங்- தமிழகத்தை சேர்ந்த 44 பேரை கைதுசெய்த திருப்பதி போலீஸ்!

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து சென்னை நோக்கி, லாரிகளில் செம்மரக்கட்டைகள் கடத்திச்செல்லப்படுவதாக திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாகவும் ரகசிய தகவலை வெளியிட்ட மர்ம மனிதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, எஸ்.பி-யின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி குலசேகர் தலைமையிலான போலீஸ் படையினர், சென்னை நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ராஜஸ்தான் தாபா’ அருகில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அந்த சமயம், அவ்வழியாக முன்னால் ஒரு காரும் அதன் பின்னால் 2 லாரிகளும் வரிசைக்கட்டி வந்தன. … Read more

மனித உடல் பாகங்கள் இருந்த தடயமே இல்லை., வீட்டுக்கு பலமுறை சென்ற புது காதலி! ஷ்ரதா வழக்கில் புதிய வாக்குமூலம்

இந்தியாவை உலுக்கிய ஷ்ரதா வாக்கர் கொலை வழக்கில், பொலிஸ் விசாரணையில் அஃப்தப் பூனாவாலாவின் புது காதலி அதிர்ச்சியூட்டும் தகவல்களை வழங்கியுள்ளார். அஃப்தப் பூனாவாலா தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரதா வாக்கரை கொலை செய்த பிறகு டேட்டிங் செய்த பெண், அவரது கொடூரமான செயலை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். அப்பெண், கொலைக்குப் பிறகு இரண்டு முறை அஃப்தபின் வீட்டுக்கு சென்றதாகவும், ஆனால் ஒருபோதும் அவனது பிளாட்டுக்குள் மனித உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை என்று அவர் கூறினார். … Read more

கீழக்கரை திமுக கவுன்சிலர் கடத்த முயன்றது ‘கோகைன்’ போதைப்பொருள் அல்ல ‘உரம்’! கடலோர காவல்துறை விளக்கம்…

சென்னை: கீழக்கரை திமுக கவுன்சிலர்  இலங்கைக்கு கடத்த முயன்றது ‘கோகைன்’ போதைப்பொருள் அல்ல ‘உரம்’தான் என கடலோர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதளை சாலையில் நேற்று முன்தினம் (28ந்தேதி) இரவு கடற்படையைச் சேர்நேர்த கடற்கரை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை  மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரினுள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் வெள்ளை … Read more

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல: உச்சநீதிமன்றம்

டெல்லி: முறையாக பயிற்சிபெற்ற காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்த படுகிறது என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதை தடுக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை கிடுக்கி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் … Read more

வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி

ஆமதாபாத், குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது. குஜராத்தில் நாளை வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசினார். இந்த தேர்தலில் வெற்றி … Read more

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம்; திடீரென கதவை திறக்க முயன்ற பெண் கூறிய பகீர் காரணம்!

அமெரிக்காவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் செய்த செய்கையால், விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அந்தப் பயணியின் செயல் விமானத்தில் பயணித்தவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டிவிட்டது என்றுகூட கூறலாம். அதாவது கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸின் ஹூஸ்டனிலிருந்து கொலம்பஸ், ஓஹியோவுக்கு தென்மேற்கு விமானம் 192-ல் (Southwest Flight 192) சென்றுகொண்டிருந்தது. விமானம் அப்போது 37,000 அடி உயரத்தில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பயணித்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண் … Read more

ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டங்கள்: ஜேர்மன் அமைச்சர் அறிவிப்பு

ஜேர்மனியில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்த அந்நாடு திட்டமிட்டு வருகிறது. இன்று எடுக்கப்பட இருக்கும் முடிவுகள் வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்துவது தொடர்பாக, இன்று முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளன. அத்துடன், இளைஞர்கள் ஜேர்மனியில் கல்வி கற்பதை அல்லது தொழிற்பயிற்சி மேற்கொள்வதை எளிதாக்கவும் அரசு விரும்புகிறது. ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டம் இந்த விடயம் குறித்து பேசிய பொருளாதார அமைச்சரான Robert Habeck, … Read more

அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார்! தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் கிண்டல்…

மதுரை: அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜியை, தெர்மோகோல் புகழ் முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து எடப்பாடி ஆதரவு அதிமுக  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவு தினம் குறித்து … Read more

சிறை அலுவலர் பணிக்கு டிச.26ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது. டிச. 22ல் எழுத்து/ கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.