பெரியகுளம் அருகே சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்தவர் கைது

தேனி: பெரியகுளம் அருகே அம்பாட்டியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 17-ம் தேதி சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக துறைப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

யார் பப்பு?: `தன் வீட்டின் கொல்லைப்புறத்தை பார்க்கவேண்டும்’ – மொய்த்ராவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே `பப்பு’ என்ற சொல்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தங்களுக்குள் ஒருவரையொருவர் அடிக்கடி விமர்சிப்பதற்காகப் பயன்படுத்திவருகின்றன. கடந்த காலங்களில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை அரசியலில் பப்பு என பா.ஜ.க விமர்சித்திருந்தது. திரிணாமுல் காங்கிரஸும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமித் ஷா தான் இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என விமர்சித்திருந்தது. இதுமாதிரியான சூழலில் பப்பு எனும் இந்த விமர்சன சொல், நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. … Read more

உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.63 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.01 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலவர பூமியான நகரம்… தெருக்களில் திரண்ட ரசிகர்களால் வெடித்த மோதல்

கத்தார் உலகக் கோப்பை அறையிறுதியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதையடுத்து திரளான ரசிகர்கள் தெருக்களில் திரண்ட நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளனர். வெற்றிவாய்ப்பை இழந்த மொராக்கோ உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் தெரிவாகியுள்ளது. இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணி வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. @twitter மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடு ஒன்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதே இது … Read more

டிசம்பர் 15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 208-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 208-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது. கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார். அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் … Read more

இந்திய – சீன வீரர்கள் மோதல் உலா வரும் பழைய வீடியோ

புதுடில்லி, :அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பழைய ‘வீடியோ’ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ௯ம் தேதி நடந்த இந்த சம்பவம், தற்போது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் சீன வீரர்களை … Read more

கணித்தது பலித்தது… உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதவிருக்கும் பிரான்ஸ்

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமி கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பில் கணித்தது தற்போது பலித்துள்ளது. அதோஸ் சலோமி ஆருடம் கத்தார் உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன்னர், இந்தமுறை இறுதிப் போட்டியில் மோதும் இரண்டு அணி தொடர்பில் பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமி தமது ஆருடத்தை பதிவு செய்திருந்தார். @getty அதில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஐந்து அணிகளுக்கு … Read more