மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை: மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் புயலால் சேதமாகியுள்ளது. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள், இதரப் பொருட்கள் சேதமாகியுள்ளது. 

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

`ஜோம்பி வைரஸ்கள்’ சில திரைப்படங்களால் இந்த பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.. இந்த `ஜோம்பி வைரஸ்கள்’ பற்றி சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் ஆனது.. சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 13 வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ Zombie Virus என்று விஞ்ஞானிகள் அழைகின்றனர். உலகத்தரத்தில் “தேசிய தொல்லுயிர் படிம அருங்காட்சியகம்’’ தமிழகத்தில் அமைய வேண்டும்… ஏன்? காலநிலை மாற்றம் … Read more

உலகக்கோப்பையில் இனி விளையாடமாட்டேன்! தோல்விக்குப்பின் சூசகமாக கூறிய நெய்மர்

கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என ‘உத்தரவாதம் இல்லை’ என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார். கத்தாரில் வெள்ளிக்கிழமை இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை … Read more

போரினால் பாதிக்கப்படும் உக்ரேனியர்களின் துன்பங்கள் குறித்து பிரார்த்தனையின்போது போப் பிரான்சிஸ் கண்ணீர்…

மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போரினால், உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பிரார்த்தனை நிகழ்ச்சியில் வருத்தத்துடன் பேசிய போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்தோரிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இத்தாலியில் ஒரு தேசிய விடுமுறையின் போது, மாசற்ற கருத்தரிப்பு விழா மத்திய ரோமில் மடோனாவில் உள்ள  ஒரு சிலையின் அடிவாரத்தில்,  பாரம்பரிய பிரார்த்தனை நடந்தது.   இந்த பிரார்த்தனையின் போது உக்ரேனியர்களின் துன்பங்களைக் குறிப்பிட்ட போப் பிரான்சிஸ் உடைந்து … Read more

மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை வெளியேற்றி வரும் போலீசார்

சென்னை: மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். தடை விதித்தும் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை மீட்புப் பணிகளை தாண்டி மக்களை அப்புறப்படுத்தி வரும் காவல்துறையினர்.

மூணாறு அருகே மாட்டுபட்டியில் மீண்டும் கைவரிசை காட்டிய படையப்பா| Dinamalar

மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டியில் ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு படையப்பா மீண்டும் கைவரிசையை காட்டியது. இரண்டு கடைகள், வேன் ஆகியவற்றை சேதப்படுத்தியது. மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளில் பிரபலமான ஆண் காட்டு யானை படையப்பா தீவனத்தை தேடி ரோட்டோரக் கடைகளை குறிவைப்பது வாடிக்கை. மூணாறு அருகே முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் கடந்த மாதம் பட்டப்பகலில் ரோட்டோரக் கடைகளில் இருந்து மக்காச் சோளம், பழங்கள் ஆகியவற்றை தின்றது. ஒரு மாதம் … Read more

கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவரை திமுகவுக்கு இழுத்த செந்தில் பாலாஜி – வேலுமணி அதிர்ச்சி

கோவை திமுகவை பலப்படுத்தும் அஸைன்மென்ட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்பற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கோவையில் பிரமாண்ட வெற்றியை பெற்று கொடுத்தார். தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோரை திமுகவுக்குள் இழுக்கும் பணியை செய்து வருகிறார். செந்தில் பாலாஜி ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் போல் குறுக்குவழியில் வந்தவர் அல்ல ஸ்டாலின்! – ‘பலே’ கோவை செல்வராஜ் அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி நாகராஜன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். … Read more

அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இப்போதே ‘மொக்க’ என பெயர் வைத்த ஏமன்

டெல்லி: மாண்டஸ் புயல் தற்போதுதான் கரையை கடந்து மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு மொக்க என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயலானது அரபிக்கடலில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி வடதமிழ்நாட்டில், மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடத்திய மாஸ்டஸ் புயல் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி வருகிறது. இந்த புயலுக்க  ‘மாண்டஸ்’ என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்தது.  மாண்டஸ் என்பதற்கு ஐக்கிய … Read more

மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

சென்னை: மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பிக் பாஸ் 6, நாள் 61: `வாடா வாடா… என் ஏரியாவுக்கு வாடா!' மணிகண்டன் vs விக்ரமன்; சிறுபிள்ளை ஜனனி!

இதுவரை நடந்த வீக்லி டாஸ்களோடு ஒப்பிடும் போது ‘டிவிங்கிள் ஸ்டார்’ டாஸ்க் சற்றாவது சுவாரஸ்யமாக நடந்து முடிந்ததே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, திருஷ்டிப் பரிகாரம் போல மணிகண்டனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் ‘ஈகோ’ மோதல் கடுமையாக நடந்தது. ‘வாடா வாடா… என் ஏரியாவுக்கு வாடா’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, ஓரிடத்தில் நிற்காமல் வாக்குவாதம் செய்தார் மணிகண்டன். ஒரு விமர்சனத்தை ஏற்கும் முதிர்ச்சி இல்லாமல், அதை எவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக எதிர்கொள்வது என்கிற பாடத்தை கற்றுத் தந்தார் … Read more