பாட்னா: 25 பேர்; 3 நாள்கள்… கம்பெனி அதிகாரிகள் என்று கூறி செல்போன் டவரையே திருடிய கும்பல்!

பீகாரில் இதற்கு முன்பு இரும்பு பாலத்தை அரசு ஊழியர்கள் என்று சொல்லி கேஸ்கட்டர் வைத்து வெட்டி எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதே போன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து ரயில் எஞ்சினையே திருடிச்சென்றனர். தற்போது செல்போன் கம்பெனி அதிகாரிகள் என்று கூறி செல்போன் டவரையே திருடிச்சென்றுவிட்டனர். பாட்னாவில் உள்ள ராஜ்புதன காலனியில் வசிக்கும் லாலன் சிங் என்பவரின் வீட்டில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. லாலன் சிங் வீட்டிற்கு சிலர் வந்து, நாங்கள் … Read more

பிரித்தானியா-சீனா உறவின் பொற்காலம் முடிந்தது: பொங்கியெழுந்த பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியா-சீனா இடையிலான உறவுகளின் “பொற்காலம்” என்பது தற்போது முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். பிரித்தானியா-சீனா உறவின் பெற்காலம் பிரித்தானியா மற்றும் சீனா இடையிலான பொற்காலம் என்ற சொற்றொடர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சொற்றொடர்  சீனாவுடனான முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் நெருங்கிய பொருளாதார உறவுகளுடன் தொடர்புடையது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டத்தில் லண்டனுக்கும் பெய்ஜிங்க்கும் இடையிலான உறவுகள் மோசமடைய தொடங்கின. Britain Flag & China National … Read more

சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சேலம்-உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலையாக இருந்தது. இதை 4 வழிச்சாலையாக மாற்ற மத்தியஅரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளித்தது. அதன்படி சேலம் சீலநாயக்கன் பட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோமீட்டர் … Read more

நவ-29: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 -க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பள்ளிகளில் இலவச நாப்கின் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி :அரசு பள்ளி மாணவியருக்கு ‘சானிட்டரி நாப்கின்’ இலவசமாக வழங்க வேண்டும் என்ற பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு, அரசு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த … Read more

இந்த வார ராசிபலன் – நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் … Read more

  ரூ.5 கோடி தங்கம் கொள்ளை பீஹாரை சேர்ந்த இருவர் கைது| Dinamalar

போபால் :மத்திய பிரதேசத்தில் உள்ள வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்; மீதி நால்வரை தேடி வருகின்றனர்.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்னி மாவட்டத்தின் பர்கவான் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர், துப்பாக்கி முனையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும், 3.50 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, … Read more

மனைவியின் அனுமதியுடன் உக்ரைனிய பெண்களை சீண்டும் ரஷ்ய வீரர்கள்: இதுவே எதிரிகளின் மற்றொரு ஆயுதம்

உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய படைகளின் மற்றொரு ஆயுதம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இத்தகைய போர் சூழலில் பாலியல் அத்துமீறல்களை சமாளிப்பதற்காக லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் உக்ரைனின் முதல் … Read more

பெண்கள் குறித்து அவதூறு கமென்ட் மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்| Dinamalar

மும்பை :மஹாரஷ்டிராவில் நடந்த யோகா முகாமில் பேசும்போது, பெண்கள் குறித்து அவதுாறான கருத்து தெரிவித்ததற்காக, யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் யோகாசன முகாம் நேற்று முன்தினம் நடந்தது. அவர், இந்நிகழ்ச்சியில் பேசும்போது, ‘பெண்கள் சேலையிலும், சல்வாரிலும் அழகாக இருப்பர்; ஆடை அணியாவிட்டாலும் அழகு தான்’ என,தெரிவித்தார்.இந்த கருத்துக்கு, … Read more