திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 6-ம் தேதி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்து வந்தனர். நாளை காலை மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, மலை உச்சையில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

கிட்னிக்கு ரூ.3 கோடி தருவதாக மாணவியிடம் ரூ.16 லட்சம் மோசடி| Dinamalar

குண்டூர் : ஆந்திரா மாநிலம் குண்டூரில் கிட்னிக்கு ரூ.3 கோடி தருவதாக கல்லுாரி மாணவியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர். குண்டுரை சேர்ந்த மாணவி ஐதராபாதில் விடுதியில் தங்கி நர்சிங் கல்லுாரியில் படித்து வருகிறார். அவர் தந்தையின் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்து செலவு செய்தார். தந்தை கண்டுபிடிக்கும் முன் அந்த பணத்தை திருப்பி கட்ட எண்ணிய மாணவி, தன் ஒரு சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார். அதன்படி இணையத்தில் சிறுநீரகத்தை விற்க … Read more

உறைந்த ஏரியில் விழுந்து பலியான சிறுவர்கள் யார் யார்? புகைப்படத்துடன் வெளியான கலங்க வைக்கும் பின்னணி

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் உறைந்த ஏரியில் விழுந்து பலியான நான்கு சிறுவர்களும் ஒரே குடும்பத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சைப் பிசையும் சம்பவம் குறித்த சிறுவர்களின் புகைப்படம், பெயர் மற்றும் தகவல்களை வெளியிட்டு, குடும்பத்தினர் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 8 வயதான Finlay Butler, இவரது சகோதரரான 6 வயது சாமுவேல், இவர்களின் உறவினர் 11 வயது தாமஸ் ஸ்டீவர்ட் மற்றும் இவர்களின் நண்பன் 10 வயது ஜாக் ஜான்சன் ஆகியோரே அந்த சிறுவர்கள். @PA … Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டம்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். மழை பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளை அரசு செய்து வருவதால் பொங்கலுக்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு, 2022ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் இன்று முடித்து … Read more

இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயணத்தின் 100-வது நாளான இன்று இதுவரை 737 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு 9 மாநிலங்களை ராகுல்காந்தி கடந்துள்ளார்.

நட்சத்திரப் பலன்கள்: டிசம்பர் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

குர்ஆன் ஓத வேண்டாம்… மரண தனடனைக்கு முன்னர் ஈரானிய இளைஞரின் கடைசி ஆசை

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தமது கடைசி ஆசையாக தமது கல்லறையில் குர்ஆன் ஓதுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் ஈரானின் மஷாத் நகரில் திங்கட்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தூக்கிலிடப்பட்டார். நான்கு நாட்களுக்கு முன்னர் மொஹ்சென் சேகாரி என்ற 23 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் திங்களன்று மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. @twitter சர்வதேச எதிர்ப்பையும் … Read more

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு, இன்று துவங்குகிறது. முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் … Read more

டிசம்பர் 16: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

குருவிக்காரர்களின் கோரிக்கைக்கு ‛ஜே| Dinamalar

லோக்சபாவில் மதிய உணவு இடைவேளைக்குப்பின், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள குருவிக்காரர் சமூகத்தினருக்கு, பழங்குடியின அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. லோக்சபாவில் மதிய உணவு இடைவேளைக்குப்பின், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement