“எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்!” – நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணியால் கலங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஊர்கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், “இந்தப் பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் உள்ளிட்ட … Read more