கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார். திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக … Read more

நிரம்பும் நிலையில் வீராணம் ஏரி: பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

கடலூர்: வீராணம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 47.5 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 45.5 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

ஜிம், பூங்காக்களில் பெண்களுக்கு தடை; கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் தாலிபான்!

தாலிபான்கள், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றனர். தாலிபான் அதாவது, பெண்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தடை விதித்ததோடு, பெரும்பாலான வேலைவாய்ப்புத் துறைகளிலும், பெண்கள் பணிபுரியத் தடை விதிக்கப்பட்டது.  இன்னும், தலை முதல் கால் வரையிலும் தங்களது உடலைப் பெண்கள் மூடி மறைத்து ஆடை அணிய வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டன.  இந்நிலையில் தற்போது, பெண்கள் ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்ல தடை … Read more

மகர ராசியில் நேர்கதியில் பயணித்து வரும் சனி! துன்பங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்…நாளைய ராசிப்பலன்

ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் மகர ராசியை அடைந்தார். பின்பு 2022 அக்டோபர் 23 ஆம் திகதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.   தற்போது மகர ராசியில் நேர்கதியில் பயணித்து வரும் சனியால் நாளைய நாள் துன்பங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.             உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த ஆதித்ய தாக்கரே

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65 வது நாளை எட்டியுள்ளது. ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணம் தொடர்ந்து வருகிறது. நான்டெட் பகுதியில் இன்று நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். ராகுலுடன் இனைந்து நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். தென் மாநிலங்களில் இந்திய ஒற்றுமை பயணம் மூலம் ராகுல் … Read more

திண்டுக்கல்லில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

மதுரை: திண்டுக்கல்லில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘வணக்கம் தமிழ்நாடு’ என குறிப்பிட்டு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

தமிழ் பாரம்பர்ய விவசாயம் செய்து விளைவித்த அரிசி; கோயில்களுக்கு அளித்த ஜப்பான் நடிகை!

ஜப்பானில் தமிழ் பாரம்பர்ய முறைப்படி விவசாயம் செய்து, அங்கிருந்து அந்த அரிசியைக் கொண்டு வந்து ஆலயங்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கினார் ஜப்பான் நடிகை, அவர் மயிலாடுதுறை ஆலயத்தில் நெஞ்சுருகத் தமிழ் பக்தி பாடல்களைப் பாடி வழிபாடு செய்துள்ளார். தமிழக ஆலயங்களில் ஜப்பான் நடிகை வழிபாடு ஜப்பானைச் சேர்ந்த பிரபல நடிகை மியா சாகி மசூமி, நடிகையாக இருந்து பணம் ,பெயர், புகழ் சம்பாதித்த அவர் மனநிம்மதியின்றி இருந்து வந்ததாகவும், தமிழ்மொழி மற்றும் சித்தர்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், தொடர்ந்து ஜப்பானில் உள்ள … Read more

நடிகர் ஆர்.கே. வீட்டில் 200 சவரன் கொள்ளை தொடர்புடைய குற்றவாளிகளின் படங்கள் வெளியானது…

நடிகர் ராதாகிருஷ்ணன் எனும் ஆர்.கே. வீட்டில் 200 சவரன் மற்றும் 2 லட்ச ரூபாய் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே. எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே. சென்னை ராமாபுரத்தை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் ஆபீஸர்ஸ் காலனி 12வது குறுக்கு தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று பகலில் நடிகர் ஆர்.கே. வெளியில் சென்ற நேரத்தில் ஆள் … Read more

பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்!

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இடைவிடாது கொட்டும் மழை; மண்சரிவு அபாயம்… தயார் நிலையில் மீட்புக்குழுவினர்! – நீலகிரி மழை நிலவரம்

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் இடைவிடாத தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மழையால் கடுமையான குளிர் நிலவி வருகிறது. சுற்றுலாத் தலங்களும் … Read more