ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்… சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சு…

அமலாக்கத்துறை மூலம் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். சீனா, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாத பாஜக அரசு சிவசேனா மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிவசேனா கட்சியை அழிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக அதற்காகவே கட்சியில் பிளவு ஏற்படுத்திய ஏக்நாத் ஷிண்டே-வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்கிறது. ஏக்நாத் ஷிண்டேவை தான் முதலமைச்சர் ஆக்கவேண்டும் … Read more

கொலிஜியத்தின் பரிந்துரைகள் மீது ஒன்றிய அரசு காலதாமதம் செய்வது ஏற்கக் கூடியது அல்ல: உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி : கொலிஜியத்தின் பரிந்துரைகள் மீது ஒன்றிய அரசு காலதாமதம் செய்வது ஏற்கக் கூடியது அல்ல உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. காலதாமதம் செய்வதால் நீதிமன்றங்களுக்கு உரிய நேரத்தில் நீதிபதிகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே,காலதாமதத்திற்கு பதிலளிக்குமாறு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் காலதாமதம் தொடர்பாக பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.

தினமலர்- பட்டம் இதழ் மாணவர்களிடம் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் புகழாரம்| Dinamalar

‘தினமலர் -பட்டம் இதழ்’, மாணவர்கள் மத்தியில் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசினார். ‘தினமலர்’ நாளிதழின், மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் நேற்று நடந்த ‘பதில் சொல் அமெரிக்கா செல்’ வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘தினமலர்’ பட்டம் நாளிதழ் பள்ளி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களின் உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் நல்ல செய்திகளை விதைத்துக் கொண்டுள்ளது. உலக … Read more

நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!

தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் பீடி தொழிலாளியின் மகள் ஹரிகா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கான இடத்தையும் பிடித்துள்ளார். தன்னுடைய ஆறரை வயதிலேயே தந்தையை இழந்தவர் ஹரிகா. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளார் இவரின் தாய். சிறு சிறு வேலைகளைப் பார்த்து, ஹரிகாவையும், அவரின் சகோதரரையும் படிக்கவைத்துள்ளார். Kavitha Kalvakuntla நிசாமாபாத் ஹோலி மேரி உயர்நிலைப் பள்ளியில் ஹரிகா படித்துக் கொண்டிருந்தபோது, அப்பள்ளியின் கரஸ்பான்டன்ட், இவர்களின் நிலை கண்டு கனிந்து குறைந்த கட்டணத்திலேயே … Read more

ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! புதிய நலத்திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

புதிய நலத்திட்டத்திற்கு ஜேர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மன் மக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை அனுபவித்து வருவதால், சமூக நலத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் அதிகரித்துள்ளது. நலத்திட்டத்தில் மாற்றம் இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றம் வியாழன் அன்று வேலையின்மை நலன்களுக்கான Bürgergeld சமூக நலத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய நலத்திட்டம் தற்போதைய Hartz IV நலத்திட்டத்தில் மாற்றங்களை செய்து கொண்டுவரப்பட்டது. … Read more

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழா! பிரதமரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதலமைச்சர்

சென்னை: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த  பிரதமரை  முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு விமானம் வருகை தந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வருகை தந்தார்.  திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது, பிரதமரிடம், பொன்னியின் செல்வன்” … Read more

எலும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் உள்ள ஆதிபொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் சுவாதீனம் பெறப்பட்டது

சென்னை: எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் அருள்மிகு ஆதிபொன்னியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 2064 சதுரடி இடம் வணிகத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த காரணத்தால் சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவுப்படி, காவல்துறை ஒத்துழைப்புடன் அந்த கட்டிடம் திருக்கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,12,80,000 ஆகும்.

டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் அட்வைஸ்| Dinamalar

‘அறிவு அனைவரையும் சமன்படுத்துகிறது’ என, டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் பேசினார். புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ‘தினமலர் – பட்டம்’ இதழ் சார்பில், மாணவர்களுக்கு மெகா வினாடி வினா போட்டி நடந்தது. இதில், டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் பேசியதாவது: இன்று, சிறிய விளக்கை போன்று உள்ள மாணவர்கள், நாளை சூரியன் போன்று பிரகாசமாக வாழ்வில் ஒளிர வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலம்; நம்பிக்கை எல்லாம் நீங்கள் தான். உங்களைப் பொறுத்தே நாளை நாடு இருக்கும். உலகில் … Read more

Yashoda Review: ஆக்‌ஷன் அவதாரத்தில் சமந்தா; வாடகைத்தாய் சர்ச்சை கதை – இந்த `யசோதா' ஈர்க்கிறாளா?

`Surrogacy’ என்று சமீபத்தில் ட்ரெண்டான வாடகைத்தாய் என்ற விஷயத்தை மையமாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் சென்டிமென்ட் மெடிக்கல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் – ஹரி சங்கர். தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் 3டி படம் `அம்புலி’யை எடுத்தவர்கள், நேரடி தெலுங்கு படமான `யசோதா’வை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். சமந்தா, வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா, உன்னி முகுந்தன், சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். … Read more