ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சரண் அடைபவரை சடுதியில் காக்க வரும் சக்கரத்தாழ்வார்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

ஸ்ரீசுதர்சன மஹாஹோமத்தை விகடன் வாசகர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நலனுக்காக இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்த உள்ளோம். மகா சுதர்சனர் கால் நடையாகத் திரிந்த மனிதன் சக்கரத்தைக் கண்டு பிடித்ததும் தான் பல வாகனங்களை உருவாக்கி தனது பயணங்களை வேகமாக்கினான். மனிதன் கண்டறிந்ததில் சக்கரமே அற்புதமான முதன்மையான கண்டுபிடிப்பு. அதிலிருந்தே உலகம் நவீனமானது. அதைப்போல புராணத்தில் ஸ்ரீசக்கரம் எனும் திருமாலின் ஆயுதம் செய்த அற்புத லீலைகளாலேயே பல தீயவர்கள் யுகம்தோறும் … Read more

புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா கொடுக்கும் பெருந்தொகை: பிரான்ஸ் அதை எப்படி பயன்படுத்தப்போகிறது?

புலம்பெயர்வோர் படகுகள் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, பிரான்சுக்கு பிரித்தானியா பெருந்தொகை ஒன்றை வழங்க உள்ளது. எவ்வளவு வழங்கப்பட உள்ளது? புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகியுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியா பிரான்சுக்கு 72.2 மில்லியன் யூரோக்கள் வழங்க உள்ளது. இந்த தொகையை பிரான்ஸ் எப்படி பயன்படுத்தப்போகிறது? பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் இணைந்து ரோந்து செல்ல இருக்கிறார்கள். … Read more

புட்பால் வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற வீராங்கனை பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு … Read more

விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19க்குள் தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. தமிழக முதல்வர், விருதுநகர் ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின் சிலையை வைக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

வருங்காலத்தில் உலகையே இந்தியா வழிநடத்தும்: பியூஷ் கோயல்

புதுடில்லி: இந்தியாவின் உதவியால் உலக பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில், உலகையே இந்தியா வழிநடத்தி செல்லும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். புதுடில்லியில் 41வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால், உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.இந்தியாவின் உதவியால் … Read more

கீழக்கரை: புரோட்டாவில் பெட்ரோல் வாசனை; சாப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி பயன்று வருகின்றனர். இந்தச் சூழலில் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி பயிலும் 213 மாணவர்களுக்கு, கீழக்கரை வடக்கு தெருவில் உள்ள தனியார் ஹோட்டலிலிருந்து தினமும் உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு அந்த ஹோட்டலிலிருந்து மாணவர்களுக்கு … Read more

புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார்

புகைப்படங்களில் தமது கைகள் வெளிப்படையாக தெரிய முகம் காட்டுவது மறைந்த எலிசபெத் ராணியாருக்கு பிடிக்காத ஒன்று என பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். வாளேந்தியபடி புகைப்படம் வாளேந்தியபடி புகைப்படத்திற்கு முகம் காட்ட புகைப்படக் கலைஞர்கள் கோரிய நிலையிலேயே ராணியார் அதை நிராகரித்துள்ளார். கடந்த 2002ல் ஜூபிலி கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 10 புகைப்படக் கலைஞர்கள் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். @getty அதில், Rankin என்பவரே ராணியாரின் அந்த பிடிவாதத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ராணியாருக்குரிய வாளேந்தியபடி புகைப்படம் ஒன்றிற்கு முகம் … Read more

கார்த்திகை தீபம் எதிரொலி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபம் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தருவர். இதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து … Read more

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்ததாக வந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்ததாக வந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக திருவாரூரை சேர்ந்த ராஜசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விட குறைவான அளவில் முறைகேடாக கட்டிடம் கட்டியதில் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!'' – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று G-20 நாடுகளின் உச்சிமாநாடு தொடங்கியிருக்கிறது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த G-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கின்றனர். G20 மாநாடு இந்த நிலையில், G-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்குப் பிறகு … Read more