உடல் கருகி ஒருவர் பலி| Dinamalar

புதுடில்லி : புதுடில்லியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றியதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. தலைநகர் புதுடில்லியில் உள்ள அலிபூர் பல்லா சாலையில் சொகுசு கார் ஒன்றில் வந்த நபர் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். அடுத்த நிமிடம் அந்தக் கார் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயை அணைப்பதற்குள் காரின் பெரும்பான்மையான பகுதிகள் சாம்பலாகி விட்டன. … Read more

தீபாவளி: டெல்லியில் தீ விபத்து தொடர்புடைய 201 சம்பவங்கள் பதிவு

புதுடெல்லி, இந்தியாவில் தீபாவளி பண்டிகை 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. மக்கள் கோலங்களை இட்டும், புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினார்கள். இதேபோன்று, உலகமெங்கிலும் வசித்து வரும் இந்தியர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது. ஒட்டுமொத்த … Read more

`நான் செவிலியராக வேண்டும்!' – தனக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

மேற்கு வங்காளம், புகுலியா மாவட்டம் காசிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அருகாமையில் இருந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். அந்தச் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள். அப்போது அவர் திருமணம் செய்வதற்கான சட்டப்பூர்வ வயது 18 என்பதை நன்கு அறிந்து கொண்டார். இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக சிறுமிக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க … Read more

இன்று மாலை சூரிய கிரகணம்; திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்படபல கோவில்களில் நடைமூடல்…

சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று (25ம் தேதி) திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை உள்பட பெரும்பாலான கோவில்களின் நடை  மூடப்படுகிறது. இன்று மாலை ( 25-ந் தேதி செவ்வாய் கிழமை) பகுதி  சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இந்தியாவில் பெரும்பாலான இந்து கோவில்களின் நடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இன்று காலையே … Read more

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 29ல் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிம் குக் பாராட்டிய தீபாவளி புகைப்படம்| Dinamalar

மும்பை : மும்பையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான அபேக்ஷா மேக்கர் என்பவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தை, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், வெகுவாக ‘டுவிட்டர்’ வாயிலாக பாராட்டி உள்ளார். “ தீபாவளி பண்டிகை ஏன் தீபங்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை இந்த புகைப்படம் வெகு அழகாக காட்டி விட்டது. மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்த இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், அபேக்ஷா எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.இந்த … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,549- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது … Read more

“வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’’ – ஓபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில், கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததும், காரில் பயணித்தவர் வீட்டில் வெடிப்பொருள் தயாரிப்புக்கான மூல பொருள்கள் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு கண்டனம். கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும் சட்டம்-ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழ்நாடு தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி, சட்டம் … Read more

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய சாம்பியன் அணி! கொந்தளித்த ரசிகர்கள்.. பதவி விலகிய பயிற்சியாளர்

மேற்கிந்திய தீவுகள் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதால் பதவி விலகிய பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – ஃபில் சிம்மோன்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை டி20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் 2 தோல்விகளை சந்தித்ததால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு … Read more

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக் இன்று மாலை பதவி ஏற்பு..!!

லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக் இன்று மாலை பதவி ஏற்கிறார். இன்று மன்னர் சார்லஸை சந்திக்கிறார். மன்னர் 3ம் சார்லஸ், முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனாக்கை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பதவியேற்பார்.