எம்.எல்.ஏ அலுவகத்தில் திருட்டு; மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸிடம் வலியுறுத்திய அரசு தலைமை கொறடா

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கான எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ரூ.25,000 மதிப்பிலான நீர் மூழ்கி மோட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எம்.எல்.ஏ அலுவலகம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவி.செழியன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக பதவி வகித்து வருகிறார். இவருடைய எம்.எல்.ஏ அலுவலகம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் … Read more

பிரபல நடிகை போல மாற முயற்சி..ஜோம்பி போன்ற தோற்றம்..தெரிய வந்த பெண்ணின் உண்மை

எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தபார் பகிர்ந்துள்ளார் தன் மீதான சர்ச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திற்கு திரும்பவில்லை என தபார் தெரிவித்துள்ளார் முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் … Read more

காங்கிரஸ் செயற்குழுவுக்கு பதிலாக 47 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை நியமித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கே விடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிலையில், கட்சியின் செயற்குழுவுக்கு (CWC) பதிலாக 47 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை நியமித்துள்ளார். வழிகாட்டு குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தவிர கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், … Read more

கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி நேரில் விசாரணை

உதகை: கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு ஆவணங்களை கொள்ளையடித்தது பற்றி விசாரணை நடத்துகிறார்.

வயலில் இஞ்சி திருட்டு விவசாயிகள் தவிப்பு| Dinamalar

மைசூரு : பிரியா பட்டணாவின் நவிலுார் கிராமத்தில், வயலில் செழுமையாக வளர்ந்திருந்த இஞ்சியை, இரவோடு இரவாக திருடி சென்றுள்ளனர். விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மைசூரு, பிரியா பட்டணாவின் நவிலுார் கிராமத்தில், நாளுக்கு நாள் இஞ்சி திருட்டு அதிகரிக்கிறது. வயலில் இருந்தே இரவோடு, இரவாக திருடுகின்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவு, மர்ம கும்பல் வயலில் நுழைந்து, இஞ்சியை திருடி சென்றனர். விவசாயிகள் வழக்கம் போன்று, காலை வயலுக்கு வந்த போது, வயல் சிதைந்து கிடப்பதையும், இஞ்சி திருடப்பட்டதையும் … Read more

ராணிப்பேட்டை: குவிண்டால் ரூ.7,755 … 140 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு!

விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும் அவர்களின் வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் நாஃபெட் நிறுவனத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வேலூர் விற்பனைக் குழுவின்கீழ் செயல்பட்டுவரும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், முதன்மைக் கொள்முதல் முகமையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இந்த மையத்தில், கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறு ஒரு குவிண்டாலுக்கு 7,755 … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஏதோ ஆபத்து உள்ளது! மூத்த கம்யூ தலைவர் நல்லகண்ணு

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அச்சாரமிடுவதுபோல கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஏதோ ஆபத்து உள்ளது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. மூத்த கம்யூ தலைவர் நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.  சென்னை தி.நகரில் உள்ள … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரூ.88.79 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரூ.88.79 லட்சம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில்ரூபாய் 88,79,682 ரொக்கமும், தங்கம் 175 கிராம், வெள்ளி 946 கிராம் மற்றும் 162 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் காணிக்கைகளாக வரப்பெற்றுள்ளது.

பெங்களூரு நகரில் குளிர்ச்சி நீடிக்கும்| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில், இரண்டு நாட்களாக வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்கள், இதே சூழ்நிலை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவ மழை இன்னும் துவங்கவில்லை என்றாலும், ஈஷான்ய திசையில் இருந்து, குளிர் காற்று வீச துவங்கியது. எனவே பெங்களூரில், இரண்டு நாட்களாக வெப்பநிலை குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன், குறைந்தபட்ச வெப்பநிலை, 19 முதல் 20 டிகிரி … Read more

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் பதிவாளர் சஸ்பெண்ட்!- தடுத்து நிறுத்திய கவர்னர் தமிழிசை; காரணமென்ன?

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவந்த அரசு பொறியியல் கல்லூரியை, கடந்த ஆண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர் மோகன் என்பவர் துணைவேந்தராகவும், அங்கு ஏற்கெனவே பேராசிரியராக பணியாற்றிவந்த சிவராஜ் என்பவர் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டனர். அன்றுமுதல் இருவருக்கும் பணிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா வெளியிட்ட அறிக்கையில், “புதுவைப் பொறியியல் கல்லூரியில் இருக்கும் திறமையான பல பேராசிரியர்களை ஒதுக்கிவிட்டு, … Read more