20000 புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் – ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!

பாஜக-வினர் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சந்துரு “20000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார். “ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என்று அவர் பேசினார். … Read more

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற உத்தரவிட்டதை எதிர்த்தும், வருங்கால வைப்பு நிதியை விடுவிக்கவும், நிரந்தரப் பணியாளர்களாக மாற்றவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

\"உனக்கு நாற்காலி கேட்குதா?\" தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய வெறியர்கள்.. மத்திய பிரதேசத்தில் கொடுமை

India oi-Halley Karthik போபால்: மத்தியப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேரில் அமர்ந்ததற்காக ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும், பட்டியலின மக்கள் மீதும் தலித் சமூகத்தினர் மீதும் ஆதிக்க சமூகத்தினர் என தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் தாக்குதல் நடத்துவது நீடித்து வருகிறது. இது போன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கும் விதத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டிருந்தாலும், இந்த … Read more

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா: கோலாகல துவக்கம்| Dinamalar

பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.கொரோனாவால் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது.தொற்று பரவல் வெகுவாக குறைந்ததாலும், மாநிலம் முழுதும் மழை பெய்து செழிப்புடன் இருப்பதாலும், இம்முறை தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்தது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நேற்று (செப்.,26) கர்நாடகா சென்றார். தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற … Read more

ரூ.25 கோடி பரிசு விழுந்தும் நிம்மதியில்லை.. லாட்டரியில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வருத்தம்..ஏன்?

கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி லாட்டரி விற்பனை நடைபெற்று வந்ததில். இதில் கேரளாவில் ஆட்டோ ஒட்டுனர் ஒருவருக்கு 25 கோடி ரூபாய் பரிசும் விழுந்தது. ஆரம்பத்தில் பரிசு பெற்ற ஓட்டுனர் சந்தோஷத்தில் முதலில் கிடைத்த பரிசினை வைத்து வீடு கட்டுவேன். அதோடு கடன்களை திரும்ப செலுத்துவேன். என்னால் முடிந்த அளவு உறவினர்களுக்கு உதவுவேன் என கூறியிருந்தார். இதுல முதலீடு செய்யுங்க.. இதைமட்டும் செய்யாதீங்க.. ரூ.25 … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்.. 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி. தினகரன், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளை ஏமாற்றி 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி குறித்த விசாரணையின் போது, உயர் … Read more

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது: தனிப்படை போ

கோவை: இந்து முன்னணி நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது செய்துள்ளனர். பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் முகமது ரபீக், மாலிக், ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் ஜெஸ்சூர்யாஸ், கேரளா-வில் பிஸ்மி.. முகேஷ் அம்பானி அதிரடி திட்டம்..!

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும், ஆனால் சமீபத்தில் தென்னிந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல் ஒருபக்கம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், கடைகள் வாயிலான வர்த்தகம் கொரோனா தொற்றுக்குப் பின்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் இரு பிரிவிலும் விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது. இதற்காகக் கேரளாவில் ஒரு ரீடைல் விற்பனை நிறுவனத்தை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் … Read more

`அநாவசியமாக யாரிடமும் பேச மாட்டேன்' பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் `பாவம் கணேசன்' நேஹா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘பாவம் கணேசன்’. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேஹா ராமகிருஷ்ணா இந்தத் தொடரில் கதாநாயகியாகவும், `கலக்கப்போவது யாரு’ நவீன் கதாநாயகனாகவும் நடித்து வந்தனர். சன் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணப் பரிசு’ தொடரின் மூலம் நம்மிடையே அறிமுகமானவர் நேஹா. நேஹா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பிக்பாஸ் கன்னடா சீசன் 9′-ல் நேஹா ஒரு போட்டியாளராக களம் இறங்கியிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், ` … Read more