காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை பஜாரில் வைத்து வெளுத்த மனைவி| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில் கடைவீதியில் காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை, அந்த இடத்திலேயே, அவரது மனைவி அடித்து துவைத்த ‘வீடியோ’ வேகமாகப் பரவியது. புதுடில்லியில் காஜியாபாத் மார்க்கெட் பகுதி, சாதாரணமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில், வடமாநிலங்களில் தற்போது கர்வா சவுத் என்ற விழா கொண்டாடப்படுகிறது; இது, நம் ஊர்களில் பெண்கள் தங்களது கணவர் தீர்க்க ஆயுசுடன் இருக்கவேண்டி விரதமிருந்து கொண்டாடும் வரலட்சுமி நோன்பு போன்றது. இதனால் காஜியாபாத் மார்க்கெட்டில் … Read more

சிறுநீரகம் முதல் இதயப் பிரச்னை வரை தவிர்க்க, ரத்த ஓட்டம் சீராக்கும் உணவுகள்! #VisualStory

Blood vessels நம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகக் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது, உடலில் பிரச்னை தொடங்குகிறது.   Human body ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிர பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றை தவிர்க்க, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம். சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது, உடற்பயிற்சி … Read more

சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது! வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது, சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று சென்னை யில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மேலும் தனது தொகுதியிலும்  இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று கூறினார். சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரு இலட்சமாவது பணிநியமன ஆணையினை மாற்றுத்திறனாளி செல்வி குஷ்பு க்கு மா முதலமைச்சர் … Read more

மகளிர் ஆசிய கோப்பையை 7 வது முறையாக வென்றது இந்திய அணி..!

மகளிர் ஆசிய கோப்பையை இந்திய அணி 7 வது முறையாக வென்றது. இறுதி போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மகளிர் ஆசிய கோப்பையை வென்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தேவதாசி முறை ஏன்? மாநிலங்களுக்கு நோட்டீஸ்!| Dinamalar

புதுடில்லி, தென் மாநில கோவில்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேவதாசி முறையை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும், மஹாராஷ்டிராவிலும் உள்ள கிராமங்களில், தேவதாசி முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே … Read more

கோஹினூர் வைரம்: `இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்' – அரிந்தம் பாக்சி

நீண்டகாலமாக இங்கிலாந்து ராணியாக இருந்துவந்த இரண்டாம் எலிசபெத் ராணி, காலமானதைத் தொடர்ந்து, அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். ராணியின் மறைவுக்குப் பிறகு `கோஹினூர்’ வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டிருக்கிறது. கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆங்கிலேயரின் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது … Read more

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் 19ந்தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற சாம் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்; இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“நித்தியானந்தா மேல் தப்பில்லை..!” – அடித்துச் சொல்லும் சூர்யா சிவா

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு `கைலாசா’ நாட்டில் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் நித்தியானந்தாவிடம், திருச்சி சிவா மகனும் தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவா “தர்மரக்சகா” விருது பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பேருபொருளாக மாறியிருக்கும் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.. “நித்தியானந்தாவிடமிருந்து ‘தர்மரக்சகா’ விருது வாங்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..?” “இந்து மதத்தை ஆதரித்து உலக அளவில் கருத்துக்கள் பேசி வருவதால் சுவாமி ஜி இந்த விருதை எனக்குக் கொடுத்துள்ளார். இந்த … Read more

இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் பசிக்கான தீர்வல்ல.! ப.சிதம்பரம்

சென்னை; உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 107வது இடத்தில் உள்ள நிலையில், இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் போன்றவை பசிக்கான தீர்வல்ல. என மோடி அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, … Read more