ஜேர்மனியில் வெளிநாட்டினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள சில மாற்றங்கள்!

ஜேர்மனியில் இம்மாதம் முதல் கொண்டுவரப்பட்டுள்ள சில மாற்றங்கள் வெளிநாட்டிருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளன. குறைந்தது ஒன்பது பாதிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் மருந்துச் சீட்டுகள் முதல் பொதுப் போக்குவரத்துத் தள்ளுபடிகள் வரை ஜேர்மனியில் பல மாற்றங்கள் கொடுவரப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பர் 2022-ல் ஜேர்மனியில் உள்ள வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள் இங்கே உள்ளன. 1. 300-யூரோ ஆற்றல் நிவாரண கட்டணம் (energy relief payment) அதிகரித்து வரும் எரிசக்தி விலைக்கு உதவ, ஜேர்மனியில் பணிபுரியும் … Read more

போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா… சுற்றுலா சென்ற இந்திய நிறைமாத கர்ப்பிணி மரணம்

இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நிறைமாத கர்ப்பிணி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமையன்று மரணமடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைக்காக லிஸ்பனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டா மரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மார்டா டெமிடோ அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அதே நகரில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அவருக்கு மாரடைப்பு … Read more

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உடற்கல்விக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை.. மம்தா பானர்ஜி கருத்து.. விளாசும் ஓவைசி

India oi-Mani Singh S கொல்கத்தா: ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை என்றும் பாஜக கட்சியினை விரும்பாத மற்றும் ஆதரிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை மிகக்கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் … Read more

அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை| Dinamalar

குர்கான்: அரியானாவில் பா.ஜ., பிரமுகர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அரியானா மாநிலம் குர்கானில் சோஹானா மார்க்கெட் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சுக்பீர் கத்னா மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி … Read more

தினமும் 18 மணிநேரம் வேலை பாருங்க.. சீஇஓ பதிவால் கடுப்பான நெட்டிசன்..!

இந்திய அலுவலகத்தில், பணியிடத்தில் ஆரோக்கியமான எல்லைகளை அமைக்க வேண்டும் என்பது தொற்று நோய் பாதிப்புக்கு பிந்தைய உலகில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களை அல்லது தங்கள் வணிகங்களைச் சரிவில் இருந்து மீட்கவும், மேம்படுத்தவும் அதிக மணிநேரம் பணியாற்றியிருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல எச்சரிக்கைகளை உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அளிக்கிறது. வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்ர்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?! கடுமையான … Read more

“ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம், ஆனால் அரசாங்கத்தில் பங்கு இல்லை!" – கார்த்தி சிதம்பரம்

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புனித பயணம் என்பது பொதுமக்களை நாடிச் செல்லும் பயணம். மக்களை நோக்கிய பயணம் வெற்றி பயணமே… பொதுமக்களைச் சந்திக்க இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு யார் சென்றாலும் கட்சிக்குப் பின்னடைவுதான். குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி விசித்திரமான … Read more

பிரித்தானியாவில் பால் விநியோகத்தை தடுக்க திட்டமிடும் வீகன் குழு! விலைவாசி கடுமையாக அதிகரிக்கும் அபாயம்

பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு பால் விநியோகத்தைத் தடுக்க வீகன் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடந்தால் கடுமையான விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. தாவர அடிப்படையிலான பால் மாற்றுகளுக்கு மாறக் கோரி, சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடிய வீகன் குழு பிரித்தானியாவில் பால் விநியோகத்தைத் தடுத்துவைக்க திட்டமிட்டுள்ளதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பால் கிடங்குகளை முடக்கும் திட்டத்தில் 500 வீகன் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. Animal Rebellion எனப்படும் அந்த … Read more

சிபிஐ வழக்கைத் தொடர்ந்து, புதிய கலால் கொள்கையை திரும்ப பெற்றது கெஜ்ரிவால் அரசு! இன்றுமுதல் அரசே மது விற்பனை…

டெல்லி: கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய கலால் கொள்கையே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஆம்ஆத்மி அரசு, இன்று (செப்டம்பர் 1ந்தேதி) முதல், அரசே மது விற்பனையை மேற்கொள்கிறது. இன்றுமுதல்  சில்லறை மது விற்பனையில் தனியாா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி அரசு ஜூலை மாதம் பழைய கலால் கொள்கையை … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்கிறது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.