தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் எல்.இ.டி டிவி திருட்டு! – கொள்ளையர்களின் இலக்கு முக்கிய ஆவணங்களா?

​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓ‌.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு ​​உள்ளது.​ ​பெரியகுளம், தென்கரை அக்ரஹார தெருவில் இரண்டு வீடுகள், போடி​யி​ல் ​எம்.எல்.ஏ., ​அலுவலகம் உள்ள​து. இருப்பினும் ​கைலாசபட்டி பண்ணை வீட்​டில் ​தனது ஆதரவாளர்களை​ ​சந்திப்பதையே ஓ.பி.எஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் ​கைலாசநாதர் கோயில் மலைச் சாலை​யை ஒட்டி​​ ​வயல்வெளிகளுக்கு நடுவே​, தனது தென்னந்தோப்பிற்கு அரு​கே 4 ஏக்கர் நிலத்துக்குள் பண்ணை வீ​ட்டைக் கட்டியுள்ளார். நான்கு ஏக்கரை சுற்றியும் 10​ ​அடி உயர​ மதில் சுவர் கட்டி, ​உள்ளே ​பசு மாடுகள் வளர்ப்பு மற்றும் வேளாண் இடு பொருள்கள் … Read more

மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2,00,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர்

ஆர்ப்பாட்டம் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம், புதுவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவையில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமாரவேல், கலியபெருமாள், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், பு.சு.இளங்கோவன், ஜே.வி.எஸ்.சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் … Read more

ஃபிரிட்ஜில் ரத்தக்கறை, வீட்டு வளாகத்தில் எலும்புத் துண்டு-நரபலி கொடுத்த வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே நடுங்கச் செய்துள்ளது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங், அவர் மனைவி லைலா ஆகியோரை போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் ஆகியவற்றில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கொலைசெய்யப்பட்ட பத்மா-வின் 39 கிராம் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் … Read more

குழந்தை திருமண விவகாரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் கைது

சிதம்பரம்: குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பூஜை செய்து வருகின்றனர். அவர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சில தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் … Read more

சிக்கிய ரூ.75 லட்சம்; திமுக எம்.எல்.ஏ மகனிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை – பூண்டி கலைவாணன் பதில்

திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைதுறை தங்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 75 லட்சத்தை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் திருவாரூர் மாவட்ட ஐந்து உட்கோட்ட எல்லைகளில் ஒப்பந்தம் எடுத்து பணி செய்பவர்களிடம் ஐந்து சதவீதம் கமிஷனாக அந்தந்த உட்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் என அதிகாரிகளுக்கு தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மனசாட்சியோடு வாக்களியுங்கள் – கார்த்தி சிதம்பரம்

சென்னை: நாளை நடக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மனசாட்சியோடு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி. கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடக்க உள்ளது. தேசிய மாநில நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் என 9,300 பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 710 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக, சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 710 பேருக்கும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,570,834 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,570,834 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 629,681,495 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 608,675,975 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,671 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IIT Madras: 40% குறைவான கார்பனை வெளியிடும் சிமென்ட், ஐ.ஐ.டி ஆராய்ச்சியளர்களின் புதிய முயற்சி

கட்டுமானப் பணிகளில் ‘போர்ட்லேண்ட் சிமென்ட்’ (Portland Cement) என்ற வகையே நாம் வெகுவாக பயன்படுத்தப்படும் ஒன்று. இந்த வகை Cement Clinkers முறையை கொண்டே பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது. சுண்ணாம்பு கற்கள் எரிக்கப்படும் இத்தயாரிப்பு முறை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை விளைவிக்கிறது. கிட்டத்தட்ட 8% உலகளாவிய CO2 வெளியேற்றத்திற்கு இந்த போர்ட்லேண்ட் சிமென்ட் கட்டிகளின் தயாரிப்பே காரணமாக அமைகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கான்கிரீட் சிமென்ட் கட்டிகளின் அளவைக் குறைப்பதன் மூலமாகவும், சிறந்த கட்டுமான நுட்பங்களைக் கொண்டு கழிவுகளைக் … Read more