தலைப்பு செய்திகள்
கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி…!
பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா … Read more
IND vs SA: குல்தீப்பின் மேஜிக்கால் பரிதாபமாக வீழ்ந்த தென்னாப்பிரிக்கா; தொடரை வென்ற இந்தியா!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஒரு நாள் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு டேவிட் மில்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் செய்யத் தீர்மானித்தது. பிட்ச்சில் ஈரப்பதம் இருப்பதாகச் சொல்லி அதனை தாங்கள் உபயோகித்து கொள்ள வேண்டும் என்று கூறினார் தவான். பிட்ச்சில் சில இடங்களில் புற்கள் வளர்ந்து … Read more
பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூடும் நாள் இளவரசர் ஹரிக்கும் ஒரு விசேஷமான நாள் தெரியுமா?
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் அடுத்த ஆண்டு முடிசூட இருக்கிறார். அவர் முடிசூடும் நாள் பல சிறப்பம்சங்களைக் கொண்ட நாள் ஆகும். பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் அடுத்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி முடிசூட இருக்கிறார். அவர் முடிசூடும் நாள் பிரித்தானிய வரலாற்றில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட நாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இதே மே 6ஆம் திகதிதான், மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஐந்தாம் … Read more
ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை! சபாநாயகர் அப்பாவு…
சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து, இரு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி தலைமையில் ஒரு குழுவும், எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓபிஎஸ் தரப்பில் இன்னொரு குழுவும் செயல்பட்டு வருகிறது. இதனால், சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, … Read more
நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன்
சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் காவல்துறைசம்மன் அனுப்பியது.
செக் போஸ்ட்!| Dinamalar
‘இன்பார்மர்’ வேலையில் தலைவரு! இக்கடா, துக்கடா கட்சியோட ஒருத்தரு, ஏமி, எக்கடா, முக்குடா, என்றெல்லாம் கிராமத்து மண்வாசனையை கேலி, கிண்டல் செய்ததை மறக்க முடியுமா? இவரு, ‘அக்கடா’ சென்று ஓட்டு வாங்கினால் தான் ‘ராஜா’ன்னு அசெம்பிளிக்கு போக முடியும்னு, கோல்டு சிட்டி தலையெழுத்து மாறிடுச்சே. புத்திசாலிகள் உள்ள நகரத்தில் வேட்பாளர்கள் புதுசா வருவதே கஷ்டமாயிடுச்சு. வயசான பெருசு, இதுவே தனக்கு கடைசி எலக் ஷன்னு சொல்லி அழ தொடங்கினாலும், நாக்குல சனி, விட்டு தொலையலையாம். ஓட்டு தரும் … Read more
ஆதார் எண்ணுடன் புதிய விவரங்களை சேர்க்க வேண்டும் ஆதார் முகமை அறிவுறுத்தல்
புதுடெல்லி, 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ … Read more
Pro Kabaddi 2022: டேக்கிள் மட்டும் போதுமா? `Give it all' என்பது வார்த்தைகளில் மட்டும்தானா தலைவாஸ்?
புரோ கபடி சீசன் 9 இல் தமிழ் தலைவாஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸூக்கு எதிரான இந்தப் போட்டியில் 22-27 என தோற்றிருக்கிறது. தோல்வி என்பதை விட தமிழ் தலைவாஸ் அணி தோற்றவிதம் ரசிகர்களை இன்னும் அயர்ச்சியடைய செய்திருக்கிறது. Pawan கோடிகளையும் பெரும் நம்பிக்கையையும் முதலீடாக போட்டு அணிக்குள் அழைத்து வந்த பவன் ஷெராவத் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவருடைய காயம் எப்போது குணமடைந்து அணிக்கு எப்போது திரும்புவார் … Read more
இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா
புதுடெல்லி: இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார். ரவிக்குமார் ராஜினாமா குறித்து, பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து சேவைகள், டிஜிட்டல் மாற்றம்,தொழில் வளர்ச்சி, பாரம்பரிய தொழில்நுட்பம், பொறியியல், தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் இன்ஃப்ரா சேவைகளை ஆகியவற்றை கவனித்து கொண்டார். இன்ஃபோசிஸ் தலைவராக இருந்த ரவிக்குமார் ராஜினாமா செய்தது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு என அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவி குமார், … Read more