52 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி: குஜராத் தொழிலதிபர் சாதனை| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் போடக் தேவ் நகரில் வசிப்பவர் பிரதீப் குமார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுதியிருந்தார். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, பிரதீப்குமார் 607 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.அவர் கடந்த 1987 ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் அப்போது 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.பின்னர் டில்லி பல்கலையில், … Read more

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்.. எச்சரிக்கையா இருங்கப்பு..!

உலகம் முழுவதும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்கள் கூட, தங்களது செலவினங்களை குறைக்க தொடங்கியுள்ளனர். பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன. சம்பள அதிகரிப்பினை நிறுத்தி வைத்துள்ளன. மொத்தத்தில் ரெசசன் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் செலவு குறைப்பில் இறங்கியுள்ள நிலையில், அது இந்திய ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. மேற்கோண்டு அமெரிக்காவினை சேர்ந்த கடன் வழங்குனர்கள், பற்பல நிதி நிறுவனங்கள் என பலவும் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம் … Read more

கர்நாடகா: ஆடையில் மலம் கழித்த 2-ம் வகுப்பு சிறுவன்; ஆத்திரத்தில் ஆசிரியர் செய்த கொடூரச் செயல்!

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தேகல்லூர் கிராமத்தில், தனியார் அமைப்பால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்றுவரும் மாணவன் ஒருவன் பள்ளி சீருடையில் மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் ஹுலிகெப்பா சமையல் நடந்துக்கொண்டிருந்த அறையிலிருந்து கொதிக்கும் நீரை சிறுவனின் மீது ஊற்றியிருக்கிறார். இதனால் அலறிதுடித்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு 40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. காயம் சிறுவன் … Read more

மகாராணியார் பிரதமரை சந்திப்பதை புகைப்படம் எடுக்கத்தான் சென்றேன்: ஆனால்… நெகிழும் புகைப்படக் கலைஞர்

பிரித்தானிய மகாராணியார் உயிருடன் இருந்தபோது அவரை கடைசியாக சந்தித்த பெருமை புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. மகாராணியாரை சந்தித்ததை பெரும் கௌரவமாக கருதுவதாக தெரிவிக்கிறார் அவர். பிரித்தானிய மகாராணியார் புதிய பிரதமரை சந்திப்பதை புகைப்படம் எடுக்கத்தான் நான் அங்கு சென்றேன். ஆனால், மகாராணியாரையே புகைப்படம் எடுக்கும் ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்கிறார் மகாராணியாரின் கடைசி நிகழ்வில் அவரை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர். பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ் மகாராணியாரைச் சந்திக்கும் நிகழ்வை … Read more

அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அமைச்சர் கேஎன் நேரு மீதான வழக்கு ரத்து!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசு மீது எதிர்க்கட்சியாக இருந்த திமுக விமர்சித்து வந்தது. இதையடுத்து, அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் … Read more

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் மறைவை அடுத்து அரியணை ஏறினார் 3-ம் சார்லஸ்

இங்கிலாந்தின் புதிய மன்னராக ராணி 2ம் எலிசபெத்தின் மகன் 3ம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். புனிய ஜேம்ஸ் பேலஸில் அரச குடும்பத்தினர் முன்னிலையில் 3ம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்

பணம், நகை வேண்டாம்.. பெண்கள் உள்ளாடை போதும்.. விசித்திர திருடனால் விக்கித்துபோன மக்கள்

India oi-Jackson Singh குவாலியர்: மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். உலகில் பல வகையான திருடர்கள் இருக்கின்றனர். அவர்கள் திருட்டில் பிரத்யேகமான ஒரு ஸ்டைல் இருக்கும். உதாரணமாக, பீரோ புல்லிங் மூலம் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் திருடர்கள் எங்கு சென்றாலும் அதே பாணியில்தான் திருடுவார்கள். அதேபோல, ஒரு குறிப்பிட்ட பொருட்களை திருடுபவர்கள் அதை மட்டும்தான் திருடுவார்கள். வேறு எதையும் … Read more

பிறந்த குழந்தையை விற்ற மருத்துவமனைக்கு சீல்| Dinamalar

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தையை, வேறொரு தம்பதிக்கு விற்ற உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சங்கீதா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்த மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அசோக் ரத்தோர், ‘ஏற்கனவே உனக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில், ஆறாவதாக பிறந்துள்ள இப்பெண் குழந்தையை உன்னால் கவனிக்க முடியாது’ என அப்பெண்ணிடம் கூறி, குழந்தையை ஒரு முஸ்லிம் தம்பதியிடம் … Read more

அங்கீகாரம் இல்லாத ஃபோரக்ஸ் வர்த்தக தளங்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியல்!

இந்திய ரிசர்வ் வங்கி இந்த வாரம் அங்கீகரிக்கப்படாத ஃபோரக்ஸ் வர்த்தகத்தின் மின்னணு வர்த்தக தளங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி அந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட தளங்களை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.. எவ்வளவு அதிகம்? முழு விவரங்கள்! இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்படாத ஃபோரக்ஸ் மின்னணு … Read more

ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்… இருவருக்கும் தந்தை வேறு- மருத்துவ உலகில் விந்தை!

பிரேசிலில் இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்துள்ளனர்; இதில் அதிசயம் என்னவென்றால், இரு குழந்தைகளுக்கும் தந்தை வெவ்வேறு நபர் என்பதுதான். அரிதான இந்த அதிசய நிகழ்வு, மருத்துவ உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மருத்துவ உலகில் பல்வேறு விந்தைகள், அறிவியல் அற்புதங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரேசிலில் நடந்துள்ள சம்பவம், மருத்துவ உலகினரை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. விந்தணு மாதிரி பிரேசிலின் தென்மேற்கில் உள்ள குயாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது … Read more