மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இலவச மின்சார சலுகைகள் ரத்து செய்யப்படுவதுடன், மின் விநியோகத்தை … Read more

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 26 லட்சம் உயர்வு- சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை

புதுடெல்லி, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை, அசையும் சொத்துக்கள் மட்டுமே அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனக்கு உள்ள சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளார். … Read more

சீனாவுக்கு எதிராக களத்தில் குதிக்கும் அமெரிக்கா.. இனி ஆட்டம் வேற லெவலில் இருக்கலாம்!

சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறையானது நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு துறைகளில் சவாலான நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக சிப் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் உற்பத்தி, மின் சாதனங்கள் உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இன்னும் மந்த நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிப் பற்றாக்குறை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்காவின் இந்த முடிவானது வந்துள்ளது எனலாம். … Read more

“பள்ளி போகாத ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது'' – கல்வியாளர் வருத்தம்!

ஒவ்வொரு வருடமும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு, அன்றைய தினம் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறுவதற்கு ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளோடு, மேலும் சில பரிந்துரைகளை இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்டந்தோறும் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அக்குழு, டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிற ஆசிரியர்கள், … Read more

பிரித்தானிய மக்களுக்கு கூடுதல் பணம் வழங்கப்படும்! ரிஷி சுனக் புதிய வாக்குறுதி

பிரித்தானியாவின் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஏழைகளுக்கு நிதி உதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிகரித்து வரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப் போட்டியாளராக இருக்கும் 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், அரசாங்கத்தின் “Efficiency savings” … Read more

தமிழ்நாட்டில் இன்று 941 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 202 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 202, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 29 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 107, திருநெல்வேலி 23, தூத்துக்குடி 7, சேலம் 54, கன்னியாகுமரி 22, திருச்சி 22, விழுப்புரம் 15, ஈரோடு 46, ராணிப்பேட்டை 22, தென்காசி 13, மதுரை 11, திருவண்ணாமலை 13, விருதுநகர் 10, கடலூர் 16, தஞ்சாவூர் 15, திருப்பூர் 23, … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.  அர்ஜுன் எரிகாசி வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார். மேலும் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். 

மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து தலா ஒருவர் மட்டுமே நியமனம் – மத்திய அரசு

புதுடெல்லி, மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணை வேந்தர் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களில், தலா ஒருவர் மட்டுமே துணை வேந்தர் பதவி வகித்து வருகின்றனர். மத்தியக் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான, இடஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மந்திரி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கல்வி … Read more

குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம்.. அமெரிக்க CEO-வின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக சிலர் எங்களது அலுவலகமும் இன்னொரு குடும்பம் என்பார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் பிடித்தமான வேலை, நல்ல சம்பளம், அனுசரித்து செல்லும் ஊழியர்கள் என அமைந்தால் அது உண்மையில் சொர்க்கம் தான். ஏனெனில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரை அடுத்து, அதிக நேரம் இருப்பது அலுவலகத்தில் தான். அப்படி அலுவலகம் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை போல இருந்தால் யாரும், அந்த அலுவலகத்தினை விட்டு செல்ல மாட்டார்கள்.தொடர்ந்து அலுவலகத்தில் … Read more

"நான் திடீரென்று திருமணம் செய்துகொள்ளக் காரணம் இதுதான்!"- மனம் திறந்த ஆலியா பட்

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டம் முடிந்த கையோடு இருவரும் தங்கள் படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாகத் தொடங்கிவிட்டனர். `பிரம்மாஸ்திரா’ படத்தின் டிரெய்லர், புரொமோஷன் என இவர்களின் ஷெட்டியூல் முழுமையாக நிரம்பி இருந்தது. ஆலியா தனது முதல் ஹாலிவுட் படத்திற்கான படப்பிடிப்புக்கு லண்டன் சென்றார். இதையடுத்து ரன்பீர் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “எங்கள் குழந்தை… விரைவில்” … Read more