“பள்ளி போகாத ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது'' – கல்வியாளர் வருத்தம்!

ஒவ்வொரு வருடமும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு, அன்றைய தினம் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறுவதற்கு ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளோடு, மேலும் சில பரிந்துரைகளை இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்டந்தோறும் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அக்குழு, டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிற ஆசிரியர்கள், … Read more

பிரித்தானிய மக்களுக்கு கூடுதல் பணம் வழங்கப்படும்! ரிஷி சுனக் புதிய வாக்குறுதி

பிரித்தானியாவின் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஏழைகளுக்கு நிதி உதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பிரித்தானியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிகரித்து வரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப் போட்டியாளராக இருக்கும் 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், அரசாங்கத்தின் “Efficiency savings” … Read more

தமிழ்நாட்டில் இன்று 941 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 202 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 202, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 29 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 107, திருநெல்வேலி 23, தூத்துக்குடி 7, சேலம் 54, கன்னியாகுமரி 22, திருச்சி 22, விழுப்புரம் 15, ஈரோடு 46, ராணிப்பேட்டை 22, தென்காசி 13, மதுரை 11, திருவண்ணாமலை 13, விருதுநகர் 10, கடலூர் 16, தஞ்சாவூர் 15, திருப்பூர் 23, … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.  அர்ஜுன் எரிகாசி வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார். மேலும் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். 

மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து தலா ஒருவர் மட்டுமே நியமனம் – மத்திய அரசு

புதுடெல்லி, மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணை வேந்தர் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களில், தலா ஒருவர் மட்டுமே துணை வேந்தர் பதவி வகித்து வருகின்றனர். மத்தியக் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான, இடஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மந்திரி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கல்வி … Read more

குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம்.. அமெரிக்க CEO-வின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக சிலர் எங்களது அலுவலகமும் இன்னொரு குடும்பம் என்பார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் பிடித்தமான வேலை, நல்ல சம்பளம், அனுசரித்து செல்லும் ஊழியர்கள் என அமைந்தால் அது உண்மையில் சொர்க்கம் தான். ஏனெனில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் தங்களது குடும்பத்தினரை அடுத்து, அதிக நேரம் இருப்பது அலுவலகத்தில் தான். அப்படி அலுவலகம் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை போல இருந்தால் யாரும், அந்த அலுவலகத்தினை விட்டு செல்ல மாட்டார்கள்.தொடர்ந்து அலுவலகத்தில் … Read more

"நான் திடீரென்று திருமணம் செய்துகொள்ளக் காரணம் இதுதான்!"- மனம் திறந்த ஆலியா பட்

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டம் முடிந்த கையோடு இருவரும் தங்கள் படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாகத் தொடங்கிவிட்டனர். `பிரம்மாஸ்திரா’ படத்தின் டிரெய்லர், புரொமோஷன் என இவர்களின் ஷெட்டியூல் முழுமையாக நிரம்பி இருந்தது. ஆலியா தனது முதல் ஹாலிவுட் படத்திற்கான படப்பிடிப்புக்கு லண்டன் சென்றார். இதையடுத்து ரன்பீர் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “எங்கள் குழந்தை… விரைவில்” … Read more

விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ! இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர்.. அடுத்த நிகழ்ந்த விபரீதம்

அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29). புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது(36) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஐந்து ஆண்டுகள் டேட்டிங் செய்த இந்த ஜோடி, காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் சில … Read more

ஏரி மாசுபடுவதை தடுக்க வேளச்சேரியில் புதிய நீரேற்று நிலையங்கள்: அமைச்சர் நேரு

சென்னை: வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மூன்று புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை துவக்கியது. இத்திட்டத்திற்கு மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், வேளச்சேரி ஏரி அருகே ரூ.4.08 கோடியில் நீரேற்று நிலையங்கள் கட்டப்படும். இந்த நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கக்கன் நகர், பவானி … Read more

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி, செல்வ வரி தொடர்பான வழக்குகளில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.