அதிமுக உட்கட்சித் தேர்தல் வழக்கில் இடைக்கால தடை – கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய கோரிய மனுமீது நாளை விசாரணை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்த மனுவை … Read more

கபாலீஸ்வரர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 73 மாணவர்களுக்கு ரூ. 7.30 லட்சத்தில் கல்வி உதவி தொகை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கபாலீஸ்வரர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 73 மாணவர்களுக்கு ரூ. 7.30 லட்சத்தில் கல்வி உதவி தொகை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் அறநிலையத்துறையின் கீழ் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள் செப். 17-ல் ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் செப்.17-ல் ஏலம் விடப்பட உள்ளது. பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட கடவுள் சிலைகள் மற்றும் சில பொருட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பொருட்களை ஏலம் விட முடிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மக்கள் நிலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து இப்பொருட்களை வரும் செப்.17-ம் தேதி ஆன்லைன் மூலம் துவங்கி அக்டோபர் 2-ம் தேதி … Read more

வரலாறு காணாத பாகிஸ்தான் பெருவெள்ளம்.. $30 பில்லியன் இழப்பு ஏற்படலாம்..!

டெல்லி: பாகிஸ்தானில் அதீத மழைப் பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த கடும் வெள்ளத்தால் 1396 பேர் இறந்துள்ளதாகவும், இதில் குறிப்பாக 499 குழந்தைகளும் அடங்குவர் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தென் மாகாணமான சிந்துவில் சராசரி மழையை விட 466% அதிக மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முமுவதுமே 30 ஆண்டு சராசரி மழையை விட 190% … Read more

“அமித் ஷாவின் மஃப்ளர் விலை 80,000 ரூபாய்!" – டி-ஷர்ட் விமர்சனத்துக்கு பதிலளித்த அசோக் கெலாட்

காங்கிரஸில் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், கட்சியின் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ’ எனும் யாத்திரையை தொடங்கியிருக்கிறார். ராகுல் காந்தி, கடந்த வாரம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மூலம் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார். ராகுல் – டி-ஷர்ட் இதுவொருபக்கம் நடந்துகொண்டே இருக்க, பா.ஜ.க-வினர் பலரும் `பாரத் ஜோடோ’ யாத்திரையையும், அதில் ராகுலின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி விமர்சித்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த … Read more

12500 ச.அடி ரூ. 50000 வாடகை 10 ஆண்டு குத்தகை… 75% பங்கு Silly Souls பாருக்கு உரிமையாளர் யார் ? ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்தது…

இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம் பெற்று Silly Souls என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி கோவாவில் பார் நடத்தி வருவதாக இரண்டு மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் ஆதாரங்களுடன் வெளியிட்ட இந்த புகாரை மறுத்த ஸ்ம்ரிதி இரானி தனது மகளுக்கும் இந்த பாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஸ்ம்ரிதி இரானியின் கணவர் சுபின் இரானி இயக்குனராக … Read more

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.

கொடுமை.. ஓடும் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு.. 12 வயது சிறுமி படுகாயம்.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்

India oi-Jackson Singh கண்ணூர்: கண்ணூரில் ஓடும் ரயில் மீது விஷமிகள் கற்களை வீசியதில் 12 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாரபட்சம் இன்றி விரும்புவது ரயில் பயணங்களை தான். அப்படிப்பட்ட சுவாரசியமான ரயில் பயணங்களை சில விஷம எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நாசமாக்கி விடுகின்றனர். ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை தடம்புரளச் செய்வது; டிராக்குகளை மாற்றும் கருவிகளை உடைப்பது என … Read more

நுண்ணறிவு செயற்கைகோள் : உருவாக்குது இஸ்ரோ| Dinamalar

புதுடில்லி : தேவைக்கு ஏற்ப பயன்களை மாற்றிக் கொள்ளும் நுண்ணறிவு உடைய ‘ஜிசாட்’ செயற்கைகோள்களை ‘இஸ்ரோ’ தயாரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம்கூறியதாவது:தொலைத்தொடர்பு, ‘டிவி’ ஒளிபரப்பு, செய்தி சேகரிப்பு, வானிலை முன் அறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு ஜிசாட் எனப்படும், ‘ஜியோசின்க்ரனஸ்’ செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், நுண்ணறிவுடன் செயல்படும் ஜிசாட் செயற்கைகோள்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப அதன் … Read more

போட்டியை சமாளிக்க வேற லெவல் நடவடிக்கை.. ஏர் இந்தியாவின் அதிரடி திட்டம்!

இந்தியா விமான நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும் நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய விமானங்களை இறக்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிய டாடா நிறுவனம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 25 ஏர் பஸ்கள் மற்றும் 5 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களின் போட்டியை ஏர் இந்தியா சமாளிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. உலகக்கோப்பை … Read more