போலி நன்கொடை பெற்ற கட்சிகள்: வருமான வரித்துறை ரெய்டு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போலியாக நன்கொடை மற்றும் வரி மோசடி தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிவைத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சோதனை நடந்த நிலையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் … Read more

வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வடிவமைத்து, உருவாக்க விரும்புவதாகப் பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2022 இன் போது ISRO தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத் துறையைத் தலைகீழாக மாற்றி வரும் தனியார் நிறுவனமான SpaceX தான் முதன் முதலில் ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்-ஐ 2வது முறையும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பெரும் புரட்சியை உண்டாக்கிய எலான் மஸ்க் தற்போது … Read more

`அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம் பெண்கல்வி!'- முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே #VisualStory

நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என்ற பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே. 1981-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மும்பை பிரசிடென்சியில் பிறந்தார். Marriage அவரது 9 வயதில் ஜோதிராவ் பூலேவுக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். சமூக சீர்திருத்தவாதியான தன் கணவரிடம் ஆரம்பக்கல்வியைப் பெற்று, பின் அகமத்நகரில் உள்ள அமெரிக்க மிஷனரி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சிக்குப் பின், தன் கணவர் தொடங்கிய பெண்கள் பள்ளியில் ஆசிரியராகத் தனது … Read more

தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு

நடிகை பேபி அஞ்சு தன்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகரை மணந்த நிலையில் ஒரே ஆண்டில் கசந்த வாழ்க்கை. நடிகர் டைகர் பிரபாகர் உடனான வாழ்க்கை குறித்து மனம் திறப்பு பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். neet.nta.nic.in ntaresults.nic.in தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in … Read more

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

கழுத்தை அறுத்து.. ஆசிட் ஊற்றி.. நரிக்குறவர் சிறுமியை சீரழித்த ‘தாய் மாமன்’! அதிர்ந்து போன ஆந்திரா!

India oi-Rajkumar R அமராவதி : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததோடு சிறுமியின் கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களை சிக்கும் சம்பவங்கள் … Read more

தோல் கழலை நோய் 22 மாடுகள் பலி| Dinamalar

புனே :மஹாராஷ்டிராவில் கழலை நோய் தாக்குதலில், 22 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை தோல் கழலை என்ற நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகளின் தோலில் கட்டி உருவாகி, அவற்றுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சமீபகாலமாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும் இந்த நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. … Read more

அப்படியெல்லாம் அதிகமாக கடன் வாங்கல.. PSB-ல் பாதியாக குறைந்த கடன்.. அதானி குழுமம் செம அப்டேட்!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரான கெளதம் அதானி, சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகின்றார். இது நல்ல விஷயம் தான் என்றாலும் மறுபுறம் இவரின் கடன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைட்ஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது. அதில் அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் … Read more

ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடியை கோயிலுக்குள் விடாமல் தடுத்த பஜ்ரங் தள தொண்டர்கள் – நடந்தது என்ன?

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் தங்களது படம் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி கபூர் தம்பதி கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் இயக்குநர் அயன் முகர்ஜி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் வருவது குறித்து … Read more