மஹா.,வில் 37 லட்சம் ஜன் தன் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 37 லட்சம் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்கும் வகையில், ‘ஜன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நாடு … Read more

அங்கேயும் வேலையை காட்டிய சீன நிறுவனங்கள்.. கடுப்பான பங்களாதேஷ்.. என்ன தான் பிரச்சனை!

சமீப மாதங்களாகவே இந்தியாவில் அடுத்தடுத்து சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக வருமான துறை சோதனை மூலம் தெரிய வந்தது. இந்த சோதனை மூலம் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் பலவும் கண்டு பிடிக்கப்பட்டன. இப்படி அடுத்தடுத்து இந்தியாவில் சிக்கி வரும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, பற்பல நாடுகளிலும் இதே பிரச்சனையில் சிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க பங்கு சந்தையில் தணிக்கையில் பிரச்சனை என … Read more

தனிநபர்கள் வாங்கிய கடன்கள்: முதல் இடத்தில் எந்தக் கடன் தெரியுமா?

தனிநபர் கடன்கள்..! வீட்டுக் கடனுக்கு அடுத்தபடியாக தனிநபர் கடன்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுகள் மேல் வழங்கப்படும் கடன்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் வங்கிகள் மிக அதிக அளவில் தனிநபர் கடன்கள் வழங்கியுள்ளது. Loan (Representational Image) வீட்டுக் கடன்: பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்… எதைத் தேர்வு செய்வது? சென்ற ஒரு வருடத்தில் தனி நபர் கடன்களின் வளர்ச்சி 16.5% அளவில் உள்ளது. இதே காலகட்டத்தில் வீட்டு கடன்களின் வளர்ச்சி 5% … Read more

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழகஅரசு…

சென்னை: டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு தமிழகஅரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, … Read more

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு செப்.21 வரை சிறை: திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை செப்டம்பர் 21 வரை திரிகோணமலை சிறையில் அடைக்க திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

\"ஒரே அடி\".. குழந்தையை இழுத்துச் சென்ற புலி.. வீர தீரமாக சண்டையிட்டு காத்த தாய்.. பரபர சம்பவம்

India oi-Jackson Singh போபால்: மத்திய பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்ற புலியிடம் தீரமாக சண்டையிட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை” என கேஜிஎப் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன. தனது குஞ்சுகளை காப்பாற்ற பாம்பை கொன்ற எலி, கழுகை ஓட ஓட விரட்டிய குருவிகள் என எத்தனையோ வீடியோக்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை … Read more

குரு பவன் கட்டடத்துக்கு நிதியுதவிதங்கவயல் நகராட்சி தலைவர் உறுதி| Dinamalar

”தங்கவயல் குரு பவன் கட்டடம், இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா செய்வார். எனது பதவிக்காலம் இருக்கும் வரை எனக்கும், நகராட்சி உறுப்பினரான எனது மனைவிக்கும் கிடைக்கிற கவுரவ சம்பளத்தை குருபவன் கட்டட நிதிக்குவழங்குவேன்,” என,தங்கவயல் நகராட்சி தலைவர் முனிசாமி கூறினார். தங்கவயல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் தின விழா, ராபர்ட்சன்பேட்டை ‘குரு பவன்’ அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. இதில், நகராட்சி தலைவர் … Read more

சிங்கப்பூர் தமிழர்களுக்கு குட்நியூஸ்.. இனி ஒரு நிமிடம் போதும்..!

வெளிநாடுகளில் தமிழர்கள் உட்படப் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாக விளங்கும் சிங்கப்பூர் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாள் ஆகும். இப்படியிருக்கையில் இதைச் சில நொடியில் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா, இதைச் சாத்தியமாக்கத் தான் இந்திய வங்கிகள், சிங்கப்பூர் வங்கி, இந்திய அரசின் முக்கிய அமைப்புகள் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. வெளிநாட்டில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் குடும்பப் பொருளாதார … Read more

“திமுக எம்எல்ஏ-க்கள் கூடத்தான் 10 பேர் எங்களோட பேசிட்டிருக்காங்க..!'' – கேள்விக்கு எடப்பாடி பதில்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை. ஸ்டாலின் எந்த பொருள் திருடு போனாலும் அவற்றை முறையாக … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு,புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 07.09.2022 : தமிழ்நாடு, … Read more