இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விண்வெளித்துறையில் வலுவான தொடர்பு- பெங்களூரு மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து

பெங்களூரு: விண்வெளித்துறையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பெங்களூருவில் நடந்த விண்வெளி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) பெங்களூருவில் அமைந்துள்ளது. அந்த மையத்தின் தலைவராக சோம்நாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் விண்வெளி மைய தலைவர் என்ரிகோ பலேமர், இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வன்டென் பெர்க் ஆகியோர் இஸ்ரோ மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். அங்கு அதன் தலைவர் சோம்நாத்தை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,508,705 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,508,705 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 611,756,076 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 589,423,002 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,985 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாதை பெயர் மாற்றம் : நிறைவேறியது தீர்மானம்| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியில் மறுசீரமைக்கப்பட்டுள்ள ராஜபாதைக்கு, ‘கர்தவ்யா’ பாதை என பெயர் மாற்றம் செய்யும் முன்மொழிவுக்கு புதுடில்லி மாநகராட்சி கவுன்சில் சிறப்பு கூட்டத்தில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுடில்லியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் வைக்கப்பட்ட பெயர்கள் படிப்படியாக மாற்றப்படும்’ என, சுதந்திர தின விழா உரையின் போது பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர் லோக் கல்யாண் மார்க் என 2015ல் மாற்றப்பட்டது. நம் … Read more

வடியாத மழைநீரும்… விலகாத சோகமும்.. அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் உணவுக்கே கஷ்டப்படும் கோடீசுவரர்கள்

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு கோடீசுவரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொட்டி தீர்த்த கனமழை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. கடந்த 4-ந் தேதி பெங்களூரு நகரில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சர்ஜாப்புரா ரோடு, மகாதேவபுரா, பெல்லந்தூர், எமலூர் பகுதிகளில் ஏரிகள் உடைந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள 2 லே-அவுட்டுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த … Read more

அதென்ன 50/30/20 பட்ஜெட் விதி.. உங்க செலவு, சேமிப்பு எப்படி இருக்கணும்?

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பல நடுத்தர குடும்பங்களிலும் உள்ள ஒரு கவனிக்க வேண்டிய விஷயம், சம்பளம் வந்தால் அடுத்த சில நாட்களிலேயே செலவுக்கு திண்டாடுவது தான். இதற்கு காரணம் செலவுகள் அதிகரிப்பு தான் பணம் கையில் இருக்கும்போது எதற்காக செலவு செய்கிறோம் என யோசிக்காமல் செலவு செய்திடுவோம். அதற்கு பிறகு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். நம்மில் பலரும் பட்ஜெட் போட்டு செய்வதில்லை. ஆக நாம் இன்று பார்க்கவிருப்பது பட்ஜெட் விதி 50/30/20 என்பது பற்றி தான். … Read more

ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை| Dinamalar

மும்பை :மஹாராஷ்டிராவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து, மர்ம நபர்கள் ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.மஹா.,வின் சதாரா மாவட்டத்தில் உள்ள நாக்தானே கிராமத்தில், ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இதற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு இயந்திரங்களில் ஒன்றை வெடி வைத்து தகர்த்தனர். பின், அதிலிருந்த ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.முன்னதாக, கொள்ளையர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க, ஏ.டி.எம்., மையத்திலுள்ள கண்காணிப்பு கேமரா மீது, … Read more

தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு எதிராக டுவிட்டரில் இணையவாசிகள் ஆக்ரோஷம்

பெங்களூரு: பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியபோது, மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்ட தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு எதிராக இணையவாசிகள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தேஜஸ்வி சூர்யா எம்.பி. பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருபவர் தேஜஸ்வி சூர்யா. பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவரான அவர் மத ரீதியாக பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வதும் உண்டு. இந்த நிலையில் பெங்களூருவில் கடந்த 1-ந் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் … Read more

இந்தியாவில் என்ஆர்ஐ-கள் முதலீடு செய்ய சிறந்த 5 வழிகள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவை எல்லாமுமே சிறந்த வழிகள் இல்லை. எனவே இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் என்ஆர்ஐ-கள் முழுமையான நிதி பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான வருமானத்தை வழங்கும் சிறந்த முதலீட்டு விருப்பத்தை கண்டுபிடிப்பது முக்கியமான ஒன்று. சில என்ஆர்ஐக்கள் தங்கள் குடும்பத்திற்காக பெரும் தொகையை உருவாக்க முதலீடு செய்கிறார்கள் அல்லது எப்போதாவது இந்தியாவுக்குத் திரும்புவதற்குத் தயாராகிறார்கள்; மற்றவர்கள் வேகமாக விரிவடையும் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதன் … Read more

கட்சி அலுவலகங்களில் வருமான வரி சோதனை| Dinamalar

புதுடில்லி:பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனை தொடர்பாக, நாடு முழுதும் 110 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுதும், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2,800 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் செயல்பாட்டில் உள்ள கட்சிகளை அடையாளம் காணுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், இந்த பட்டியலில் உள்ள பல கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது தெரிய … Read more

பெங்களூரு நகரின் வளர்ச்சி பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்பு- பொதுமக்கள் ஆதங்கம்

பெங்களூரு: பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்புகளை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு பெங்களூரு நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்ப பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது, போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவது, சாலை பள்ளங்களை … Read more