4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி

International oi-Nantha Kumar R ஒட்டாவா: கனடாவில் 21 வயது நிரம்பிய டிக்டாக் பிரபலமான கல்லூரி மாணவி சாகசம் செய்வதற்காக ‛ஸ்கைடைவிங்’ முறையில் வானில் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தபோது பாராசூட் செயல்படாததால் தரையில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவை சேர்ந்தவர் தான்யா பர்டாஷி (வயது 21). இவர் டொரண்டா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் 2017ல் நடைபெற்ற ‘மிஸ் டீன் கனடா’ அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் … Read more

வீட்டில் இருந்து பணி வேலை பார்த்தால் சோம்பேறியா.. பில்லியனிரின் சர்ச்சை கருத்து..!

பிரிட்டீஷ் கோடீஸ்வரரான ஆலன் சுகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களை, கடுபேற்றும் விதமாக ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார். இது ட்விட்டரில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பெரும் விவாதமாகவே மாறியுள்ளது. இது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களை அசிங்கப்படுத்தும் விதமாக வந்துள்ளது. ஒர்க் ப்ரம் ஹோமில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு! குறைவான … Read more

"நாம் இந்தியப் படங்களைத் தயாரிக்க வேண்டுமே தவிர, மொழிப் படங்களை அல்ல" – இயக்குநர் ராஜமௌலி

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘பிரமாஸ்திரா’. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி … Read more

மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர் இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உடல் உறுப்பு தானம் பெற அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை அளித்தார். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை | Dinamalar

இ.சி.ஆரில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாஸ்பேட்டை இ.சி.ஆர். தனியார் திருமண மண்டபம் அருகே கடந்த 1ம் தேதி மதியம், 55 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தார். சடலத்தை லாஸ்பேட்டை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவரை பற்றி தகவல் தெரிந்தால், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை 0413-2243097 என்ற எண்ணில் தொடர்பு கொளளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இ.சி.ஆரில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் … Read more

பாலியல் வன்கொடுமை… கர்ப்பம் – மரத்தில் சடலமாக தொங்கிய பழங்குடியின சிறுமி! – போலீஸ் தீவிர விசாரணை

ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று போலீஸாரால், பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மரக்கிளை ஒன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முதலில் இது கொலையா அல்லது தற்கொலையா எனச் சந்தேகப்பட்ட போலீஸார், மீட்கப்பட்ட சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாயாரும், தன்னுடைய மகளை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக போலீஸிடம் கூறிவந்தார். சடலம் பின்னர் … Read more

தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட நினைத்தால் உதைப்படுவார் – இளங்கோவன் எச்சரிக்கை

ஈரோடு: தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க உள்ளார். இது குறித்து ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஏஸ்.அழகிரி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் … Read more

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

டாக்கா: வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக  முஷ்பிகுர் ரஹீம் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சீனாவை நெருங்கியது 2022-ன் வலுவான புயல்.. ஜப்பான், தைவானிலும் முன்னெச்சரிக்கை தீவிரம்

International oi-Mani Singh S பெய்ஜிங்: சீனாவில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது என்றும் இந்த புயலால் பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதால் சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே ஒருபுறம் கடுமையான மழை வெள்ளம், மற்றொரு பக்கம் கடுமையான வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், புதிதாக புயல் தாக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ”நடப்பு 2022ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஹின்னம்னோர்’ புயல் சீனாவை நெருங்கியுள்ளது என்றும் … Read more