ராமநாதபுரம்: “கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" -வைரலாகும் திருமண பேனர்

திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கதில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்களை, ஏன் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைத்தும் பேனர் அடிப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாச வித்தியாசமான வசனங்களை எல்லாம் போடுவார்கள். அதிலும் கட் அவுட்டுகளில் மணமக்களின் நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த … Read more

உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி யுயுலலித் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரம் முதல் தொடர் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது. இந்தியாவில் படிப்பு, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து துறைகளிலும் சாதி, மத ரீதியிலான இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய பாஜக அரசு,  பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு … Read more

பெங்களூருவில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை

பெங்களூரு: வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூருவில் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 அணிகள் பெங்களுருவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1965 யுத்தம் தொடங்கிய நாள்:காஷ்மீர் எல்லையில் பாக். திடீர் தாக்குதல்- பாதுகாப்பு படை சரமாரி பதிலடி!

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் சரமாரி பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்டது. ” />பாகிஸ்தானை இந்தியா … Read more

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு| Dinamalar

புதுடில்லி: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று(செப்.,06) மேல்முறையீடு செய்துள்ளார்.அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்வர் பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு … Read more

ஈரான் – இந்தியா: அணுசக்தி ஒப்பந்தம் குறித்து திடீர் பேச்சுவார்த்தை.. எதற்காக..?

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு சர்வதேச சந்தையில் ஈரான் முக்கியமான வர்த்தக நாடாக மாறி வருகிறது. குறிப்பாக எரிபொருள், எரிவாயு, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது எனப் பல முக்கியக் காரணிகளுக்குத் தற்போது ஈரான் முக்கிய நாடாக விளங்குகிறது. ஈரானும், ரஷ்யா போல உலக நாடுகளால் வர்த்தகத் தடை, பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா தனது முக்கியமான திட்டத்திற்காக ஈரான் நாட்டு அரசு அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் … Read more

ஹிஜாப்: “பள்ளிக்குள் மதப்பழக்கவழக்கங்களை பின்பற்ற நீங்கள் உரிமைகொள்ள முடியுமா?" – உச்ச நீதிமன்றம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்க… அரங்கேறிய போராட்டங்களும், கலவரங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல!’ எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது. ஹிஜாப் அதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கெதிராக, உச்ச நீதிமன்றத்தில் பல … Read more

நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டிய புகாரில் கைதான தயாரிப்பாளருக்கு ஜாமின்

சென்னை: நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டிய புகாரில் கைதான தயாரிப்பாளர் பவிந்தர் சிங்கிற்கு, வானூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலா பால் –  பவ்விந்தர் சிங் இருவரும் பதிவு திருமணம் செய்து, குடும்பம்  நடத்தியது குறித்த ஆதாரங்களை, அவர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வங்கதேசத்தின் பெரிய சந்தை இந்தியா: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆசியா முழுவதும், வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், நீர் மேலாண்மை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தெற்கு ஆசியாவில் நிலைத்தன்மையை உருவாக்குவது,அறிவியல் மற்றும் … Read more

அரசு பணத்தை சுரண்டும் பொதுத்துறை நிறுவனங்கள்.. மாருதி சுசூகி தலைவர் பொளீர்..!

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களால் அரசுக்கு இழப்பு தான். இதனால் அரசுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பு என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதன் வருவாயை முதலீடாகக் கொண்டே வளர்ச்சி அடைய வேண்டும். ஆனால் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசுக்கு நிதி வழங்க வேண்டிய நிலை உள்ளது. உலகின் … Read more