Liger படத்தின் தோல்வி; சமூக வலைதளத்தை விட்டுத் தற்காலிகமாக விலகும் நடிகை சார்மி!

காதல் அழிவதில்லை படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்தவர் சார்மி கவுர். அதன் பிறகு தெடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்துள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட பலர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து பூரி ஜெகன்னாத் இயக்கி வெளியான படம் லைகர். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து தமிழ், தெலுங்கு, … Read more

கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்தை சேதப்படுத்திய தேவேந்திரன், சதீஷ்பாபு, போலீஸ் வாகனம் மீது கற்களை வீசிய சின்னையன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்தை அலேக்கா தூக்கும் முகேஷ் அம்பானி.. கடைக்குட்டி சிங்கத்துக்கு ஜாக்பாட்!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் அதேவேளையில் சேவைகளை வேகப்படுத்தவும் பல நிறுவனங்களை வாங்கி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அந்த வகையில் ரிலையன்ஸ் தனது 4வது முதலீட்டுச் சுற்றில் நியூ எனர்ஜி பிரிவு மூலம் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாகக் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை … Read more

“2024-ல் நான் பிரதமர் வேட்பாளரா?!" – செய்தியாளார்கள் சந்திப்பில் திட்டவட்டமாகக் கூறிய நிதிஷ் குமார்

பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க-வுடன் இணைந்து முதல்வராக ஆட்சி செய்துவந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், திடீரென அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியாக விளங்கிய மகாபந்தன் கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். இது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அடுத்ததாக 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கெதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிடப்போகிறார் எனச் செய்திகள் வெளிவந்தன. அதுபோன்ற செய்திகளுக்கேற்றவாறே, நிதிஷ் குமாரும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவந்தார். மோடி- … Read more

ஹிஜாப் வழக்கு: கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா?

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியா மதசார்பற்ற நாடு என அரசியலமைப்பின் முகப்பில் உள்ளது. தனிநபருக்கு , தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, ஆனால் அவர் அந்த உரிமையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட சீருடையைக் கொண்ட பள்ளி வரை எடுத்துச் செல்ல முடியுமா? என  உச்சநீதிமன்ற … Read more

இங்கிலாந்து பிரதமரின் ராஜினாமா ஏற்பு

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை, ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பிரதமராக லிஸ் ட்ரூஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்

வளர்ப்பு நாய் கடித்ததால் துடிதுடித்த சிறுவன்: உரிமையாளர் மீது வழக்கு| Dinamalar

காசியாபாத்: உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உ.பி., மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட்டில் சிறுவன் ஒன்று நின்று கொண்டிருந்தான். அப்போது, பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் உள்ளே வந்தார். நாயை பார்த்த பயத்தில் சிறுவன் முன்னே, அமைதியாக சென்றான். ஆனால், அந்த நாய் சிறுவனின் காலை கடித்தது. இதனால், … Read more

தலைகீழாய் மாறிய ஐடி ஹப்.. டிராக்டரில் அலுவலகம் சென்ற அப்கிரேட் CEO.. பெங்களூரின் பரிதாபம்

பெங்களூர்: பெங்களூரில் கொட்டும் மழையிலும் கடமையை செய்ய டிராக்டரில் பயணித்த ஐடி ஊழியர்கள் நிலையை பார்க்க முடிகிறது. போக்குவரத்து நெரிசல் என்பது சற்று சலூப்பூட்டுவதாக இருந்தாலும், அதன் இதமான கால நிலை பலரையும் ஈர்க்கும் ஒன்றாகவே பெங்களூரு டெக் சிட்டி இருந்து வருகின்றது. ஆனால் கடந்த சில தினங்களாகவே அது சலிப்பூட்டுவதாக இருந்து வருகின்றது. பல முக்கிய வழித்தடங்களும் வெள்ளக்காடாய் மாறியுள்ள நிலையில், ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கார் எல்லாம் வராது.. டிராக்டர் … Read more

சிசேரியன் திடீரென்று அதிகமாவதற்கு என்ன காரணம்? | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் சுகப்பிரசவம் தான். சிசேரியன் என்பது எப்போதாவது தான் நடைபெறும். அதுவும் அரிய நிகழ்ச்சியாகவே இருந்தது. அதுவும் கிராமத்தில் வீட்டிலேயேதான் நிறைய பிரசவங்கள் நடந்தன. இப்பொழுது சிசேரியன் திடீரென்று அதிகமாவதற்கு என்ன காரணம்? பெற்ற தாய், கர்ப்பிணிப் … Read more

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது, அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து.