செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் பொதுவிநியோகத் திட்ட (ரேசன் கார்டு) மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

சென்னை: செப்டம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம்  (ரேசன் கார்ட) சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல்  பிற்பகல் 1மணி வரை நடத்த உள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் … Read more

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08-09-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு, நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப். 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை.. மாப்பிள்ளை குடும்பம் செய்த அநாகரீகம்..கொந்தளித்த வானதி சீனிவாசன்

India oi-Yogeshwaran Moorthi பில்வாரா: கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மணமகளிடம் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் கேட்டதற்கு, பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் 24 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் வழக்கப்படி திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுப்பது வழக்கமான ஒன்றாகும். இதனால் திருமணத்திற்கு பின் அவர்களின் குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் … Read more

மீண்டும் சரிவு பாதையில் கிரிப்டோகரன்சி.. பிட்காயின் விலை என்ன தெரியுமா..?!

கிரிப்டோகரன்சி சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் Bitcoin (BTC) மற்றும் Ethereum (ETH) உட்படப் பலவற்றின் விலை குறைந்துள்ளன. காயின்மார்கெட்கேப் படி உலகளாவிய கிரிப்டோ சந்தை மூலதனம் 6.07 சதவீதம் சரிந்து 938.8 பில்லியன் டாலராக உள்ளது, மேலும் மொத்த கிரிப்டோ சந்தை அளவு கடந்த 24 மணி நேரத்தில் 15.20 சதவீதம் அதிகரித்து 82.7 பில்லியன் டாலராக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் அடைந்த கிரிப்டோகரன்னி ஹீலியம். ஹீலியம் விலை தற்போது 4.08 டாலராக … Read more

கதவு, தடுப்புகள் இல்லை; அருகருகே இரண்டு கழிப்பிடங்கள்! – முகம் சுளிக்க வைக்கும் கோவை பொது கழிப்பறை

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், அருகருகே இரண்டு கழிப்பிடங்கள் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட அந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவோ, தடுப்பு சுவரோ எதுவும் இல்லாமல் இரண்டு கழிப்பிடங்கள் அருகில் இடம் பெற்றிருந்தன. கோவை வைரல் கழிப்பறை `பதிவு எண் இல்லாத இன்னோவா கார்’ – கோவை மேயர் விளக்கம் அதே பொதுகழிப்பிடத்தில் அருகில் உள்ள கழிப்பறையில் கதவு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. “இது … Read more

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான கனேடிய காதலி…குத்திக் கொன்ற பிரித்தானிய இளைஞர்!

கனேடிய தோழியை குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்ட பிரித்தானிய இளைஞர். ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு. டேட்டிங் செயலி மூலம் சந்தித்த கனேடிய தோழியை 23 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய இளைஞர் குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் எசெக்ஸைச்(Essex) சேர்ந்த 23 வயது இளைஞர் ஜாக் செப்பிள்(Jack Sepple), டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 19 வயதுடைய கனேடிய காதலி ஆஷ்லே வாட்ஸ்வொர்த்தை குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். Pic: Facebook பிரிட்டிஷ் … Read more

காரில் அமரும் அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம்! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி:  காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சமீபத்தில், டாடா நிறுவன முன்னாள் தலைவர்  சைரஸ் மிஸ்திரி விபத்தின்போது உயிரிழந்தார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை  அவர் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்து திரும்பிக் கொண்டிருந்தார்.  அந்த காரின் முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் … Read more

கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 பேர், போலீசார் வாகனத்தின் மீது கற்களை வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஒரே அழுகை.. நிறுத்துதா பாரேன்.. குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர தாய்

India oi-Jackson Singh லூதியானா: அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர தாயை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தாய் தயங்க மாட்டாள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு கூட மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய தாய் குறித்த செய்தி வெளிவந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், அதற்கு நேரெதிராக தனது குழந்தையை தானே … Read more

இனி ஒவ்வொரு காரிலும் இது கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு!

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் பலியானதையடுத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை இறுதி செய்ய உள்ளதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6 ஏர்பேக்குகள் கட்டாயம் … Read more