அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும்,  ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள்  என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறினார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி,  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடிப்படை தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது வெளிவருவதில்லை. … Read more

சீர்காழி சுற்றுவட்டாரத்தில் ஒருவாரமாக மழை: 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டாரத்தில் ஒருவாரமாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. வாழை, பருத்தி தோட்டங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதங்களை கணக்கீட்டு இழப்பீடு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

6 வயதிலேயே இப்படியா? ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும் ஆத்விக்! நேரில் அழைத்து பாராட்டிய ஆட்சியர்!

Tamilnadu oi-Mohan S நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஒன்றரை நிமிடத்தில், 12 ம் வகுப்பு பாடத்தில் உள்ள 10 தொகுப்புக்கான கனிம அட்டவணையில் உள்ள பெயர்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளை குவித்துள்ள சிறுவனை, மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சிறுவர், சிறுமிகளுக்கும், பலவிதமான தனித் திறமைகள் இருக்கும். அந்த திறமைகளை வெளியே கொண்டு வர, பெற்றோர் … Read more

பெங்களூர் பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை..!

பெங்களூர்: சீன நபர்களால் கட்டுப்படுத்தப்படும் சட்டவிரோத இன்ஸ்டென்ட் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான கடன் செயலிகளுக்கு எதிராக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக நாட்டின் முக்கியமான பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க துறை திடீர் சோதனை செய்துள்ளது. இந்தியாவில் சீன மொபைல் செயலிகள் மூலம் பிரச்சனைகள் உருவாகி வரும் வேளையில் அமலாக்க துறையின் இந்த அதிரடி சோதனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..! சீன நபர்கள் சீன நபர்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் … Read more

"என் அக்கா வீனஸ் இல்லையென்றால் நான் இங்கு இல்லை!"- கண்ணீருடன் விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த 40 வயதான டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக வலம் வருபவர். தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் செரீனா, இந்தத் தொடருக்குப் பின்னர் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை … Read more

பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு! மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசின் பெண் ஊழியர்கள், பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும், குழந்தை பிறந்தபிறகு இறந்தாலும்,  60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு என மத்திய பணியாளர் நலன்துறை தெரிவித்து உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 12 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை கவனிப்பதற்காகவே பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. இந்j நிலையில் … Read more

உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும்: கட்கரிக்கு அன்புமணி கடிதம்

சென்னை: உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் புறவழிசாலைகளை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவை மிரட்டும் 'ரேபீஸ்' – தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு – தொடரும் திடுக் சம்பவங்கள்

India oi-Jackson Singh பத்தினம்திட்டா: கேரளாவில் நாய்களால் கடிக்கப்பட்டு 3 முறை தடுப்பூசி செலுத்திய பின்னரும் 12 வயது மாணவிக்கு ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபகாலமாக, கேரளாவில் இதுபோன்று தடுப்பூசி செலுத்திய பின்னரும் ரேபீஸால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நன்றியுள்ள ஜீவன்’, ‘மனிதர்களின் காவலன்’ என நாய்கள் அழைக்கப்பட்டாலும் அது பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றன. நாய்களின் எச்சிலில் இருக்கும் … Read more

1800க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் 4 நாட்களில் 1800-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.உச்சநீதிமன்றத்தின் 49வது நீதிபதியாக யு.யு.லலித் கடந்த(ஆக.,27)ம் தேதி இன்று(ஆக.,27) பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் 1957 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த அவர், 1983 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார். 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கும் லலித் … Read more

சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..!

அமெரிக்காவில் ஆட்டோமொபைல் துறையை எலக்ட்ரிக் மயமாக்க இரண்டு மின் மயமாக்கல் திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் மின்சார வாகன தேவையை இவ்விரு திட்டங்களால் பெரிய அளவில் மேம்படுத்தப்படும். முதலாவதாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரசு தள்ளுபடி திட்டம், இரண்டாவதாகக் கலிபோர்னியா-வில் 2035 ஆம் ஆண்டிற்குள் புதிய பெட்ரோல் கார்களைத் தடை செய்வதற்கான விதிகளை அங்கீகரித்தது. ஆனால் இவ்விரண்டுக்கும் அமெரிக்க அரசு செக் வைத்துள்ளது. இதுதான் கடைசி சான்ஸ்.. விப்ரோ நம்பும் முக்கிய திட்டம்..! அமெரிக்க அரசு … Read more