முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

யாதகிரி: கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில், யாதகிரி மாவட்டம் அருகே முஸ்லிம் வீட்டில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. யாதகிரி மாவட்டம் சகாபுரா அருகே தோரணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் நபி. இவர், சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதையடுத்து, விநாயகர் சதுர்த்திக்காக … Read more

இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 6 முதல் 11 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

பண்டமாற்று முறைக்கு திரும்பும் பிரான்ஸ் – ஜேர்மனி: ஜனாதிபதி மேக்ரான் புதிய திட்டம்

ஜேர்மனி மின்சாரம் வழங்க தயாராக இருக்க பிரான்ஸ் ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தங்களுக்கு மின்சாரம் தேவை என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி சிக்கலுக்கு தீர்வாகும் புதிய திட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்வைத்துள்ளார். அதில், ஜேர்மனி மின்சாரம் வழங்க தயாராக இருக்க பிரான்ஸ் ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதன்மை விநியோக பாதை வழியாக எரிவாயு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,504,668 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,504,668 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 610,549,684 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 587,617,049 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,251  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டியூசன் சென்று திரும்பிய சிறுமியை கிண்டல் செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் – பலர் படுகாயம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் பன்நகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிச்சிறுமி நேற்று மாலை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதை மற்றொரு தரப்பு இளைஞர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் … Read more

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: ஆயுதத்தால் தாக்கி வாலிபரை கொன்ற தொழிலாளி கைது

யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கடேசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 25). இந்த நிலையில் நாகராஜ் மனைவிக்கும், சித்தப்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உண்டானது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நாகராஜ் மனைவி வேலை செய்த போது, அவருக்கும் சித்தப்பாவுக்கும் இடையே பழக்கம் உண்டாகி, கள்ளத்தொடர்பாக மாறி இருந்தது. இதுபற்றி சமீபத்தில் நாகராஜிக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவி மற்றும் சித்தப்பாவை … Read more

எரிவாயு வழங்குகிறோம்… ஒரே ஒரு நிபந்தனை: ஐரோப்பாவுக்கு உக்ரைன் அழைப்பு

பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு கட்டணம் மற்றும் எரிசக்தி கட்டணம் பல மடங்கு எகிறும்  தேவையான ஆயுதங்களை வழங்கவும், பதிலுக்கு எரிவாயு வழங்கலை தாங்கள் முன்னெடுக்க தயார்  எரிவாயு வழங்களை ரஷ்யா மொத்தமாக முடக்கியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளது உக்ரைன். ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை பராமரிப்பு காரணங்களை குறிப்பிட்டு மொத்தமாக நிறுத்தியுள்ளது ரஷ்யா. இதனால் ஜேர்மனி, நெதர்லாந்து உட்பட பல முக்கிய நாடுகள் எரிவாயு சேமிப்பில் களமிறங்கியதுடன், அக்டோபர் மாதத்திற்கான இலக்கையும் … Read more

மராட்டியத்தில் வங்கியில் இருந்து ரூ.49 லட்சம் கொள்ளை

லத்தூர், மராட்டிய மாநிலம் லத்தூரில் உள்ள வங்கியில் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். லத்தூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் உள்ள மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் இந்த கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து ஷிரூர் ஆனந்த்பால் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வர் தத் கூறும்போது, “வழக்கு பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது, ​ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. வங்கியில் கொள்ளையின் … Read more

ரோகிங்யா அகதிகள் விவகாரத்தை சமாளிக்க இந்தியா எங்களுக்கு உதவலாம் – வங்காளதேச பிரதமர்

புதுடெல்லி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்தில் ஷேக் ஹசினா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ரோகிங்கியா விவகாரம், இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷேக் ஹசினா, இந்தியா மிகப்பெரிய நாடு. ரோகிங்யா விவகாரத்தை சமாளிக்க இந்தியா எங்களுக்கு … Read more

2021ல் நடந்த சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழப்பு| Dinamalar

கடந்த 2021ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘டாடா சன்ஸ்’ குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரைப் போலவே, பல முக்கிய பிரமுகர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங், … Read more