பாரத் பயோடெக் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். அனுமதி அளித்துள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்றை தடுக்க பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும் வரவேற்பை பெற்றன. உலக நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் … Read more

ஆசிய கோப்பை டி20: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

\"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!\" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு

Tamilnadu oi-Vigneshkumar கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பவத்தில் விசாரணை தொடரும் நிலையில், தனியார்ப் பள்ளிக்கு ஆதரவாகப் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், இதை மறுக்கும் பெற்றோர் மாணவி உயிரிழப்பில் மர்மம் … Read more

மூக்கு வழியே செலுத்தும் கோவிட் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்| Dinamalar

புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, டிஜிசிஏ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் முதல் மருந்து இதுவாகும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட்டிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் புது உத்வேகம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் … Read more

இன்டர்சிட்டி சேவையில் பிரியாணி ஆர்டர்.. ஜொமாட்டோ வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி!

இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரத்தில் உள்ள உணவையும் எந்த ஒரு நகரத்திலிருந்து ஆர்டர் செய்யலாம் என்ற இன்டர்சிட்டி சேவை என்பதை சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த சேவையின்படி ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்கட்டமாக ஒருசில நகரங்களுக்கு இடையே மட்டும் இந்த சேவை இருக்கும் என்றும் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் … Read more

அரசு நடப்பதே ITகட்டும் 4% மக்களால்தான்:நீதிபதி-ஸ்டாலின் மாற்றம் ஏன்-நிதிஷ் விளக்கம்|விகடன் ஹைலைட்ஸ்

“அரசு நடப்பதே வருமான வரி கட்டும் 4% மக்களால்தான்!”- உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தால் சர்ச்சை! வருமான வரி ‘அரசு நிர்வாகம் நடப்பது வருமான வரிக் கட்டும் 4 சதவீத மக்களால் மட்டுமே’ என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு எதிராக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி அவ்வாறு சொன்னது ஏன்? இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக … Read more

மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: சேலம், சென்னை 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் தொடங்கி உள்ளது. திமுக அரசு தற்போது 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து செய்யாறு அருகே கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை  திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக நிலம் கையப்படுத்தப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம், நீதிமன்ற உத்தரவு போன்றவற்றால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. … Read more

மதுரையில் நிலத்தை அபகரித்த வழக்கில் கைதான தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: தனக்கன்குளம் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தும் போலி ஆவணம் தயாரித்தும் 4.64 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத்

India bbc-BBC Tamil (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப். 05) மாலை பழநி சென்றார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். பின்னர் தங்க ரதம் இழுத்து வழிபட்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

பெங்களூரு வெள்ளத்தில் மிதக்க முந்தைய காங்., ஆட்சியே காரணம்: பசவராஜ் பொம்மை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: வரலாறு காணாத கனமழையும், முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வெள்ளத்திற்கு மத்தியில், டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர். … Read more