ரூ.1 கோடிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையா.. கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்!

கொரோனாவுக்கு முன்பு வரையில் இன்சூரன்ஸ் என்றாலே அலறி அடித்து தள்ளி நின்றவர்கள் கூட, தற்போது இன்சூரன்ஸ் எடுத்தால் என்ன என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவுக்கு மக்களை கொரோனா பாடாய் படுத்தியுள்ளது. எனினும் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியா? இது தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையில் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் செய்ய முடியுமா? இந்தளவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைதானா? யாரெல்லாம் இதனை எடுத்துக் கொள்ளலாம், வாருங்கள் பார்க்கலாம். காணாமல் போன மேக் … Read more

"அம்மாவின் கழுத்தை அறுத்தேன்; முக்தி கிடைக்க புனித நீர் தெளித்தேன்!" – மகனின் பகீர் தற்கொலை குறிப்பு

ஸ்ரீநிவாஸ் என்பவர் தன் மனைவி, மகன் க்ஷிதிஜ் (Kshitij)-னுடன் டெல்லியில் வசித்து வந்தார். ஸ்ரீநிவாஸ் ஓய்வூதியம் தான் குடுப்பத்துக்கான ஒரே வரவு. இந்த நிலையில், ஸ்ரீநிவாஸ் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, ஓய்வூதியமும் நின்றுபோக குடும்பத்தை ஸ்ரீநிவாஸின் மனைவி காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை க்ஷிதிஜ் தன் நண்பன் ஒருவனுக்கு தொலைப்பேசியில் அழைத்து, “அம்மாவைக் கொன்றுவிட்டேன். நானும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதே நேரம் க்ஷிதிஜ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. … Read more

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன? அவசியம் தெரிஞ்சிகோங்க

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என … Read more

விரைவில் மாநில கல்விக்கொள்கை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் அறிவிக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை:  விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடை முறைப்படுத்தப்படும்  என்றும் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,   “நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை.  … Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 24,341 இடங்களுக்கு நாளை முதல் செப்.16 வரை WWW.tngasa.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.20ல் வெளியிடப்பட்டு செப்.21 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

அட்டூழியம்.. துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை மீனவர்கள்

News oi-Nantha Kumar R காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தொடரும் மீனவர் பிரச்சனை இந்த பிரச்சனை காலம் காலமாக … Read more

எலான் மஸ்க்-கிற்கு பித்து பிடித்துள்ளதா? வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார் உற்பத்தி இலக்கு..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இதுவரை உலகில் எந்த ஆட்டோமொபைல் நிறுவனமும் கனவு காணாத வகையில் பிரம்மாண்ட விரிவாக்கப் பாதையில் அமைத்துள்ளார் 2030 ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற பிரம்மாண்ட இலக்கை எலான் மஸ்க் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இதுதான் டெஸ்லா-வின் வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக அமைந்துள்ளது, இந்த இலக்கை அடைய தேவையான விரிவாக்கம் தான் டெஸ்லா-வின் எதிர்காலம் அமைந்துள்ளது. டெஸ்லா இந்த இலக்கை … Read more

காரைக்கால் சிறுவன் கொலை: ”மருத்துவர்களின் மெத்தனமே காரணம்!” – நாராயணசாமி தாக்கு

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவனந்தபுரத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். புதுவை சார்பில் பொறுப்பு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அந்த மாநாட்டில் மத்திய அரசின் பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும். அண்டை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதால் மாநில பிரச்னைகள் … Read more

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…

லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து,  அந்நாட்டு வழக்கப்படி புதிய பிரதமர் பதவிக்கு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல கட்டங்களாக  நடைபெற்று வந்தது. இறுதி போட்டியில்  இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ் … Read more

ஆசிய கோப்பை டி20: இலங்கை அணிக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு 174 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.