பார்லிமென்டிற்கு புதிய பாதுகாப்பு படை| Dinamalar

நம் நாட்டின் அரசியல் சாசனம் நவம்பர் மாதம் 26ல் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டில் லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூட உள்ளது. பார்லிமென்டிற்கு என தனி பாதுகாப்பு அமைப்பு இருந்தாலும், இதை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து. உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட உள்ளது. என்.எஸ்.ஜி., என அழைக்கப்படும் கறுப்பு பூனை படை, வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. … Read more

ஒரே நாளில் 81 ஆன்லைன் கோர்ஸ்கள்: சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!

பலரும் ஒரு பாடத்தை கற்கவே, முட்டி மோதி சிரமப்படுவதுண்டு. ஆனால் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ரெஹனா ஷாஜஹான் (Rehna Shajahan), ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகள் முடித்து, சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். Online Class (Representational Image) இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) என்ற மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் எம். காம் நுழைவுத் தேர்வில், 0.5 மதிப்பெண் குறைவாக பெற்றதால், அவருக்கு பல்கலைக்கழகத்தில் … Read more

பொதுமக்களே எச்சரிக்கை: சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் கரைப்பு –

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலை களில் கரைக்கப்பட்டு வருகின்றன. மாநில தலைநகர் சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதனால், சென்னையில் பல இடங்களில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள், நாளை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 … Read more

மனதை மயக்கும் கர்நாடக நீர் வீழ்ச்சிகள்!| Dinamalar

மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பதே, அற்புதமான அனுபவம். கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும். மழைக்காலம் இயற்கையின் அழகுக்கு மெருகேற்றும்.கர்நாடகாவில் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலா தலங்கள் ஏராளம். மலைகள், நீர் வீழ்ச்சிகள், கடற்கரைகள் சூழ்ந்த மாநிலம். மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளில், பேரிறைச்சலுடன் தண்ணீர் கீழே பாய்ந்து வருவதை கண்டு ரசிப்பது, பேரானந்தமாக இருக்கும். கண்களுக்கு விருந்தளிக்கும். இத்தகைய நீர் வீழ்ச்சிகள் பல உள்ளன. மகிழ்ச்சியான தருணம் மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், ஜோக் நீர் வீழ்ச்சி ஒன்றாகும். … Read more

ஜூலையில் கிரெடிட் கார்டு செலவினங்கள்.. முதல் இடத்தில் இந்த வங்கி தான்!

இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் புதிதாக வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. அதேபோல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டுகள் செலவினங்கள் 6.4% உயர்ந்திருப்பதாகவும் மொத்தம் 1.16 லட்சம் கோடி ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..! கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை … Read more

சுயமரியாதைத் திருமணம் முடித்துவிட்டு, கோயிலில் வைத்துத் தாலி கட்டியது ஏன்?- புகழ் ‘நச்’ பதில்

குக்கு வித் கோமாளி புகழ் – பெல்ஸியா திருமணம் செப்டம்பர் முதல் தேதி புகழின் பெற்றோர் முன்னிலையில் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் – பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சினிமா மற்றும் சின்னத்திரை நண்பரகளுக்காக திருமண வரவேற்பானது மகாபலிபுரத்தில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பே இந்த ஜோடியின் திருமணம் கோயம்புத்தூரில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றதாக சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. (விகடன் … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான்! திமுக எம்.பி.க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்…

சென்னை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான், என  திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்து உள்ளார்.  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் என தெரிவித்து உள்ளார். திமுக எம்.பி. செந்தில்குமார், இந்துக்கள் தொடர்பான விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே அரசு நிகழ்ச்சியின் அடிக்கல் நாட்டு விழா பூஜையின் போது, இதை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அதுபோல, … Read more

பாலிவுட் நடிகையிடம் டில்லி போலீஸ் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, … Read more

இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் கிட்டத்தட்ட அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே. ஆதார் என்பது இந்திய குடிமகனின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்ட நிலையில் ஆதார் அட்டை இல்லாத இந்தியர்களே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்துடன் இந்தியாவில் மொத்தம் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வாகன … Read more

ஆழியா​று- ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை​! ​​ அமைச்சர் கே​.​என்​.​நேரு

பரம்பிக்குளம்- ஆழியாறு ​​திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி, திருப்பூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்படவில்லை என ​தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே​.​என்​.​நேரு ​தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு ஒரு விசிட்! #Album ​திண்டுக்கல் மாவட்ட ​கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே​.​என்​.​நேரு … Read more