பெங்களூருவில் வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தை தள்ளி சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி

பெங்களூரு: பெங்களூருவின் வைட் பீல்ட் பகுதியில், வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்ற பெண் அகிலா(23), மின் கம்பத்தில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வெள்ளத்தில் சென்ற போது நிலை தடுமாறியதை அடுத்து அகிலா மின் கம்பத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் பாதிப்பு 5 ஆயிரமாக குறைவு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 5,910 பேருக்கு உறுதியான நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று பாதிப்பு 4,417 பேராக ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,417பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,66,862 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 6,032 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,86,496 ஆனது. தற்போது 52,336 … Read more

அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதம் முந்தைய ஆண்டினை காட்டிலும், கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கடன் பிரச்சனையால் பெரும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதனை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் கடன் அறிக்கை குறித்தான தரவுகள் வெளியாகியுள்ளது. இது இந்தியாவை எச்சரிக்கும் விதமாக வந்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் அறிக்கையின் படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் விகிதமானது, 8.2% அதிகரித்து, 620.7 பில்லியன் … Read more

`காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இருந்தாலும் இல்லையென்றாலும்…’ – எதிர்கால சவாலும் பதிலும்

75 வருட சுதந்திர இந்தியாவில் முக்கால்வாசி வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை சற்று மோசதான். தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், புதிய தலைவரைத் தேர்வுசெய்ய அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதிலாவது ஸ்திரமிக்கத் தலைவர் உருவாரா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பாஜக – காங்கிரஸ் நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தொண்டர் ஒருவர், “பா.ஜ.க எப்படி மெல்ல மெல்ல வளர்ந்ததோ, அதேகாலகட்டத்தில் காங்கிரஸ் மெல்ல … Read more

மேட்டூர் அணையில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 65,000 கன அடியில் இருந்து 80,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 65,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 57,000 கன அடி நீரும், சுரங்க மின் நிலையம் வழியாக 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் போட்டா போட்டியில் கட்டணம் குறைப்பு.. மகிழ்ச்சியில் பயணிகள்!

கொரோனா தொற்று காலத்தில் உள்நாட்டு விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட கட்டண வரம்புகளை ஆகஸ்ட் 31-ம் தேதி ஒன்றிய அரசு நீக்கியது. அதனைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அதை உறுதி செய்யும் விதமாக விமான நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது கட்டணங்களைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. டெக் துறை மட்டுமல்ல..இனி இதிலும் கர்நாடகா தான் பெஸ்ட்.. பில்லியன் முதலீடு.. 60,000 பேருக்கு வேலை ஆகாசா ஏர் ஆகாசா ஏர் விமான … Read more

“மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள்” – சொல்கிறார் சந்திரசேகர் ராவ்

தேசிய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக சரியான தலைவர் இல்லாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சோசியல் மீடியாக்களும், பாஜகவும் இணைந்து ராகுல் காந்தியை பப்புவாக சித்தரித்துவிட்டதால் அவரை எதிர்க்கட்சிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ள மற்ற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மம்தா பானர்ஜி தேசிய அரசியலுக்கு வர சரத்பவார் உட்பட சில தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் … Read more

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்பு

லண்டன்: இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்க உள்ளார். லிஸ்டிரஸ் 1975-ல் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் பிரிவில் பட்டம் பெற்ற அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரல் டெமாக்ராஸின் தலைவராக இருந்தார். லிஸ் டிரஸ் கணக்காளரான ஹக் ஓ லியரி என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 1996-ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். 2001 மற்றும் 2005-ல் மேற்கு யார்க்ஷயரில் … Read more

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

ஏற்காடு: தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காடு – சேலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. கடும் சேதம், மின்சார விநியோகம் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

International oi-Mani Singh S பெங்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கங்டிங் என்ற நகரத்தில் மையாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நகரமே குலுங்கியது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு … Read more