பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது: ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ரூ.315 கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது என ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற பயன்பாட்டுக்காக பழைய சட்டக்கல்லூரி கட்டடம் புதுப்பிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு பதிலடி தர வெல்வாரா ஹேமந்த் சோரன்?

India oi-Mathivanan Maran ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தமது பெயரில் பெற்றிருந்தார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரான என தேர்தல் ஆணையத்திடம் பாஜக … Read more

சிவப்பு ரேஷன் அட்டை வழங்கல் | Dinamalar

அரியாங்குப்பத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டையை எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பலர், தங்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என குடிமை பொருள் வழங்கல் துறையில் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 150 நபர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப் பட்டது.அரியாங்குப்பம் காமராஜ் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிவப்பு நிற ரேஷன் அட்டையை எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். அரியாங்குப்பத்தில் வறுமை … Read more

“சசிகலாவின் `ஒற்றை' வார்த்தை ட்வீட் காலம் கடந்தது!" – ஆர்.பி.உதயகுமார்

“சசிகலாவின் ட்விட்டர் பதிவு, காலம் கடந்தது” என்று கருத்து தெரிவித்துள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின்னர் 152 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அம்மா பெற்றுத்தந்தார். கடந்த ஆட்சிக்காலத்தில் மூன்று முறை 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையில் … Read more

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழதுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும்,   புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த … Read more

பொதுக்குழு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என பழனிசாமி தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் அளிக்கப்பட்டது.

நடிகர் மட்டுமல்ல.. தொழிலதிபராக மாறிய ரன்வீர் சிங்.. சுகர் காஸ்மெடிக்-ல் முதலீடு!

சமீபத்திய காலமாக நடிகர் நடிகைகளின் முதலீடு என்பது தொழிற்துறையில் அதிகரித்து வருகின்றது. பலரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும், சொந்த தொழிலில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ரன்வீர் சிங் முதல் முறையாக ஸ்டார்ட் அப் ஒன்றில் முதலீடினை செய்துள்ளார். ரன்வீரின் முதலீடு எவ்வளவு? எதற்காக எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். மற்ற முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்! … Read more

டிரோன் மூலம் கொண்டு வரப்படும் உடல் உறுப்புகள்… எப்படி சாத்தியம்?

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதே சமயம் மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து உடல் உறுப்புகளைத் தானம் பெற்று பிறருக்குப் பொருத்துவதில் பல சிக்கல்கள் இன்றளவும் நீடிக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கால விரயமின்றி உடல் உறுப்புகளை தானம் பெறுவோருக்குப் பொருத்த வேண்டும். இந்த விஷயத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது. டிரோன் மூலம் உடல் உறுப்புகள் கொண்டு செல்லும் திட்டம் டிரோன் மூலம் உடல் … Read more

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் இருந்து வங்கதேசம் வெளியேறியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது ஓய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று, நான் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு … Read more

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் வெறுப்பும் கோபமும் அதிகரித்து வருகிறது: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் வெறுப்பும் கோபமும் அதிகரித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறினார். பணவீக்கம் குறித்த அச்சம், வேலைவாய்ப்பின்மை காரணமாக வெறுப்பு அதிகரித்து வருகிறது, வெறுப்பு நாட்டை பலவீனப்படுத்துகிறது. மக்களின் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப நினைத்தாலும் அதை பாஜக அரசு அனுமதிப்பதில்லை.