ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த மதுரை இளைஞர்: தமிழ் முறைப்படி திருமணம்!

ஜெர்மன் பெண்ணிற்கும் தமிழக இளைஞருக்கும் திருமணம். பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் காளிதாஸ் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு உடன் பணிபுரிந்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ஹானா பங்க்லோனாவை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். View this post on Instagram A … Read more

பொன்னியின் செல்வன் ரிலீசுக்காக ஒரு ரசிகனைப் போல காத்திருக்கிறேன் : இயக்குனர் ஷங்கர்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி்க்கு இந்தப் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். வழக்கமான மணிரத்தினம் படமாக இல்லாமல் மாறுபட்ட வரலாற்று புனைவை இயக்கி இருக்கிறார் மணிரத்தினம். ஏகப்பட்ட பொருட்செலவில் இந்த ஆண்டின் மெகா … Read more

அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது. எனவும் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களுக்கு நெறிமுறைகள் அறிமுகம்| Dinamalar

புதுடில்லி :’சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், விரிவான நெறிமுறைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடுவோரின் கணக்குகள் முடக்கப்படுகின்றன; ரத்து செய்யப்படுகின்றன. இதை எதிர்த்து பலர் தொடர்ந்த வழக்குகளை புதுடில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ‘இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?’ என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.இந்த வழக்கின் விசாரணை … Read more

இந்த 6 பங்குகளை வாங்கி போடுங்க.. விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம்.. !

சர்வதேச அளவில் மெதுவான வளர்ச்சி இருந்து வந்தாலும், இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி விகிதமானது மேன்மையடைய தொடங்கியுள்ளது எனலாம். சர்வதேச அளவிலான தாக்கம் இந்தியாவில் இல்லை எனலாம். இத்தகைய சூழலில் பங்கு சந்தை முதலீடு எப்படி இருக்கும்? இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த காலகட்டத்திலும் சில பங்குகளை வாங்கி வைக்கலாம் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் கணித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையொட்டி, … Read more

“ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக இருக்கிறது!'' – பிரதமர் மோடி

ரஷ்யாவில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பொருளாதார மன்றம், ரஷ்ய தூரகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச முதன்மை தளமாக மாறியிருக்கிறது. ஆர்க்டிக் விவகாரங்களில் (arctic subjects) ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் முழு உலகிலும் தாக்கத்தை உருவாக்குகின்றன. … Read more

அண்ணா பிறந்தநாளன்று பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரையில்  தொடங்கி வைக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான திமுக  அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு … Read more

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் (79) நீரிழிவு நோயால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு; சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..!

இந்திய ஐடி துறை அதிக அட்ரிஷன் விகிதங்கள் மற்றும் மார்ஜின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்துறையின் பல தலைவர்கள் பிரஷ்ஷர்களின் சம்பள அளவுகள் குறித்துப் பேசி வருகின்றனர். இந்தியாவில் சராசரியாக ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும் ஐடி துறையில் தற்போது வர்த்தக மந்த நிலை நிலவும் காரணமாக ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கத் துவங்கியுள்ளது. இதேவேளையில் பல வருடங்களாக ஐடி துறையில் பிரஷ்ஷர்களின் சம்பளம் உயராமல் இருப்பது … Read more