செல்லமாக வளர்த்த நாயை தூக்கில் தொங்கவிட்டு, டெய்லர் தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த டெய்லர் ரகு, வயது 47. இவர் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிப்பெயர்ந்தனர். ஆரணி சின்னசாயக்காரத் தெருவில் வீடு, கடையை வாடகைக்கு எடுத்து தங்கினர். துணிகளை தைத்து கொடுப்பது, பட்டுப்புடவைகளை வாங்கி விற்பனைச் செய்வது என அவர்களின் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் கணவன்மீது கோபமடைந்த மஞ்சுளா சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து … Read more

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என்று கூறினார். எடப்பாடி கூட்டிய  அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு வந்த … Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் புதிதாக 6,395 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று பாதிப்பு 6,395 பேருக்கு உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,78,636 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 6,614 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,00,204 ஆனது. தற்போது 50,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 19 பேர் … Read more

இந்தியாவிலேயே அதிக லாபம் பெறும் நிறுவனம் எது தெரியுமா..?

முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தை மதிப்பீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றி நிறையக் கேள்விகள் எப்போதும் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்கள் என்ன தான் விரிவாக்கம், முதலீடுகள் ஆகியவற்றைச் செய்தாலும் கடைசியில் லாபம் தான் மிகவும் முக்கியக் காரணியாக ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளருக்கு உள்ளது. இதனால் நிறுவனத்தின் மதிப்பீடுகளில் கேள்வி எழுவது இயல்பு தான். இல்லையெனில் பங்குச்சந்தையில் அதிக மதிப்பீடு உடன் ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட்ப்அப் நிறுவனங்களின் நிலை இன்று வேற லெவவில் இருந்திருக்கும். … Read more

பிரிட்டன்: இதுவரை இல்லாத வகையில் முக்கியப் பொறுப்புகள்… அதிரடிகாட்டும் லிஸ் ட்ரஸ்!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவையின் மிக முக்கிய 4 பொறுப்புகளில் இங்கிலாந்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஒருவர்கூட இடம்பெறவில்லை. பிரிட்டனின் வரலாற்றுப் பக்கங்களில் இப்படி நிகழ்வது இதுவே முதன்முறை என்கிறார்கள். பிரிட்டனின் நிதித்துறை அமைச்சராக குவாசி குவார்டெங் என்ற கானா நாட்டு வம்சாவளி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிரிட்டனின் முதல் கறுப்பின நிதியமைச்சர். ஜேம்ஸ் கிளவர்லி வெளியுறவு அமைச்சராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இவர் அந்நாட்டின் முதல் கறுப்பின வெளியுறவு அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லிஸ் ட்ரஸ் அதேபோல, லிஸ் … Read more

முடிவுக்கு வந்த இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு! இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் இந்திய அணிக்கு இறுதி போட்டி வாய்ப்பு சிறிதளவு இருக்கும் என நிலை இருந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 129 ரன்களே எடுத்தது. பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் … Read more

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் தடை

சென்னை: ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜி ஸ்கொயர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் செப்.30-க்குள்  சவுக்கு சங்கர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் அவதூறுகளால் முன்பதிவு செய்த்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்ததாக ஜி ஸ்கொயர் மனுவில் தெரிவித்துள்ளது.

மதம் மாறி என்னை திருமணம் செய்யனும்.. இல்ல ஆசிட் தான்.. நர்சிங் மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

India oi-Mani Singh S போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதம் மாறி என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடில் ஆசிட் வீசிவிடுவதாக நர்சிங் மாணவியை மிரட்டிய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தை சேர்ந்தவர் மோனு மன்சூரி (வயது 22). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு நர்சிங் படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நர்சிங் மாணவி மோனு மன்சூரியை காதலிக்க மறுத்துள்ளார். ஆனாலும் … Read more

அமித்ஷாவை நெருங்க முயன்றவர் கைது| Dinamalar

மும்பை: மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த (செப்., 5ம் தேதி) லால்பாக் ராஜா மற்றும் முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார். மேலும், இவர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் சென்றார்.அப்போது, பாதுகாப்பு விதிகளை மீறி மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹேமந்த் பவார் என்பவர் நெருங்க முயன்றார். பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஹேமந்த் என்பவர் இன்று(செப்.,08) கைது … Read more