ரிலையன்ஸ் 45வது வருடாந்திர கூட்டம்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?!

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தனது 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காட்டிலும் அதானி குழுமம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானியின் எதிர்காலத் திட்டம் என்ன..? நிறுவனத்தின் வர்த்தகப் பாதை என்ன..? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அடுத்த முக்கிய வர்த்தகம் என்ன..? எனப் பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. அமெரிக்க மில்லியனர்களை … Read more

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பிரபல சாமியார் மீது போலீசார் வழக்கு! மடத்தில் நடந்தது என்ன?

கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம், முக்கிய செல்வாக்கு மிக்க லிங்காய மடம். பல அரசியல் தலைவர்களும் இந்த மடத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வித்யாபீடத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு மற்றும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Stop Abuse விடுதியில் வசித்த இரண்டு மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சி. சந்திரகுமார் என்பவர் இந்தப் புகாரைத் தொடுத்துள்ளார். … Read more

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற  தமிழக அரசின் புதிய சட்டத்தின்படி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

100 ஆண்டுகள் பழமையான கல்லறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த அந்த பொருள்: ஒரு திகில் வீடியோ

கல்லறை ஒன்றைக் காணச்சென்ற ஒருவர் அந்தக் கல்லறையினுளிருந்து எட்டிப்பார்த்த ஒரு விடயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த விடயம், நீண்ட தலைமுடி. Joel Morrison (37) என்பவர், கலிபோர்னியாவின் தலைநகரான Sacramento என்ற இடத்திலுள்ள 100 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். அப்போது, 1906ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கல்லறையிலிருந்து, ஒரு பெண்ணின் தலைமுடி எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அது மனிதத் தலைமுடிதானா என்பதைக் கண்டறிவதற்காக, அதிலிருந்து சிறிது மாதிரி சேகரித்து, அதை நீதிமன்ற அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக … Read more

U- 20 ஆசிய ஆண்கள் கைப்பந்து போட்டி: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஆண்கள் கைப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டது. தாய்லாந்து அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.   

ஈஷா அம்பானி: முக்கிய முடிவு எடுக்கப்போகும் முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 65 வயதான நிலையில் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வாரிசு கைகளுக்குக் கொடுக்கும் முடிவு செய்துள்ளார். திருபாய் அம்பானி இறந்த உடன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சொத்துக்களுக்காக எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், இதேபோன்ற பிரச்சனை தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோருக்கு வர கூடாது என்பது உறுதியாக இருக்கிறார். … Read more

விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்… கண் தானம் செய்வோம்|கண்கள் பத்திரம் -30

தானங்களில் சிறந்தது கண்தானம் என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம். போதுமான விழிப்புணர்வு இல்லாமல் தினமும் எத்தனையோ சடலங்கள் கண்களோடு, கருவிழிகளோடு புதைக்கவோ, எரிக்கவோ படுகின்றன. கண்தானத்தின் அவசியம் குறித்தும், அது எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்றும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். சிறப்பு மருத்துவர் வசுமதி கருவிழியில் அல்சர் வருமா? யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?|கண்கள் பத்திரம் – 25 ”உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்கு … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரோடு மண்ணில் புதைந்த அதிர்ச்சி சம்பவம்! 3 சடலம் மீட்பு

கேரளாவில் நிலச்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம், பத்தனம் திட்டா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டம் குடையத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் … Read more

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஏற்கனவே கடந்த மாதம் 16-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், தற்போது மீண்டும் 120அடியை எட்டி உள்ளது. இந்த நிலையில்,  மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1.20 … Read more

நான் முதல்வன் திட்டத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் இணையத்தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாபெரும் திறன் மேம்பாட்டு திடத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 12 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது.