சித்தராமையாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த வாரம் குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வீரசாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்தை கண்டித்து பா.ஜனதாவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்று இருந்த ஒருவர் சித்தராமையாவின் கார் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இந்த … Read more

என்னாது கார் எரிபொருளுக்கு மட்டும் இவ்வளவு செலவா.. புதுச்சேரி அமைச்சர்களின் செலவால் அதிர்ச்சி?

புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் கூடிய நிலையில், அமைச்சர்கள் 3.3 கோடி ரூபாய்க்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு மட்டும், 70 லட்சம் ரூபாய் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எரிபொருள் செலவினங்கள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்! ஆர்டிஐ மூலம் தகவல் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் … Read more

தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில்…அணுஆயுத ஆபத்து: ஐ.நா பொதுசெயலாளர் வருத்தம்

உலக பதற்றத்தை தணிக்க நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, ஐ.நா பொதுசெயலாளர் கருத்து  உலகில் அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில் உள்ளது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று தெரிவித்துள்ளார். உலகில் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், சீனா தைவான் இடையிலான பதற்றம், அமெரிக்கா ஈரான் இடையிலான அணுஆயுத ஒப்பந்தம் என அடுத்தடுத்த பிரச்சனைகள் … Read more

எருமை மாடுகள் மீது ஆசிட் ஊற்றி கொடுமை| Dinamalar

இந்திய நிகழ்வுகள் ஆசிரியரை ‘வெளுத்த’ கூடுதல் கலெக்டர்: பீஹாரில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி பாட்னா-பீஹாரில், ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராடியவரை, கூடுதல் கலெக்டர் தடியால் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன … Read more

டெல்லியில் பழங்குடியினர் கலைக் கண்காட்சி இன்று தொடங்கியது

புதுடெல்லி: புதுடெல்லியில் ஒடிசா லலித் கலா அகாடமியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஐந்து நாள் பழங்குடியினர் கலைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினரின் செழுமையான அழகியல் உணர்வை மக்களுக்கு வழங்குகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதுசூதன் பதி தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு விழாவில் ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவரான பிரபல மணல் கலைஞர் … Read more

Moonlighting முழுக்க முழுக்க சீட்டிங் வேலை.. கொந்தளிக்கும் விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி..!

கொரோனாவுக்குப் பின்பு வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட பல முக்கியமான மாற்றங்களில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது Moonlighting கொள்கை தான். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இந்த Moonlighting கான்செப்ட் தற்போது இந்தியாவிலும் சில முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்படப் பல சிறு குறு நிறுவனங்கள் Moonlighting கான்செப்ட் தனது நிறுவனத்தில் அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெக் சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ தலைவர் Moonlighting கான்செப்ட் குறித்துப் பேசியுள்ளார். விப்ரோ ஊழியர்களின் சம்பளம் … Read more

உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி…ஐரோப்பிய யூனியன் தலைவர் அறிவிப்பு

உக்ரைன் வீரர்களுக்கு ஐரோப்பிய யூனியன் இராணுவ பயிற்சி. இந்த முன்முயற்சியின் மூலம் உக்ரைன் தேவையான திறன்களை பெறும். உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் தற்போது 180வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமை … Read more

மலையாளத்துறை அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு தடை கேரள ஐகோர்ட்டு உத்தரவு

பெரும்பாவூர், கண்ணூர் சர்வகலாசாலையில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. கண்ணூர் சர்வகலாசாலையில் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக கண்ணூரை சேர்ந்த பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார். இவர் கண்ணுரைச் சேர்ந்தவர். பிரியா வர்கீஸ் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த தேர்வில் 2-ம் இடம் பிடித்த … Read more

சீனா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான முடிவா இருக்கே.. சாதகமான விஷயமா?

சீன பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், சீனா அதன் வளர்ச்சியினை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க தொடங்கியுள்ளது. இது பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியினை கூட்டலாம். வேலைவாய்ப்பினை அதிகரிக்கலாம். மார்ஜின் விகிதங்களை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டிரஸ்ட்-ல் இவரா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..! பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தலாம் மொத்தத்தில் பெய்ஜிங்கின் இந்த நடவடிக்கையானது பொருளாதார வளர்ச்சியினை ஊக்கப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக … Read more

பஞ்சாப் முன்னாள் மந்திரி கைது

சண்டிகர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உணவு மற்றும் விநியோகத் துறை மந்திரியாக இருந்தவர் பரத் பூஷன் அஷு. இவரது பதவிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், இவரை இன்று மொஹாலியில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஜூன் மாதம், முன்னாள் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பஞ்சாபில் பகவந்த் மன் தலைமையிலான ஆட்சி … Read more