3000 பணி நீக்கமா.. ஃபோர்டின் அதிரடி முடிவு.. இந்தியர்கள் எத்தனை பேர்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 சம்பளதாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாகனத் தொழிலை மின்சார துறைக்கு மாற்ற திட்டமிடும் போர்டு நிறுவனம், பல மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மின்சார வாகன துறைக்கு நிறுவனம் மாறுவதால், அதன் பணியாளர்கள் அதற்கான திறனைக் கொண்டிருக் வில்லை என்று பல மாதங்களாகவே … Read more

தூத்துக்குடி: ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை – முன் விரோதம் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். இவர் இன்று பஞ்சாயத்து அலுவலகம் சென்றுவிட்டு, பிற்பகலில் தெற்கு திட்டங்குளம் டு விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் பொன்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதற்கிடையே, தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரைப் பிடித்து கோவில்பட்டி … Read more

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சிலர் சாவர்க்கர் புகை படங்களை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலங்களில் திப்பு சுல்தானின் படம் ஒட்டப்படும் என காங்கிரஸ் அமைப்பினர் … Read more

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அறிவிப்பாணையாக வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

சியோமி-க்கே இந்த நிலைமையா..? லாபத்தில் 83% சரிவு..!

ரியல் எஸ்டேட், டெக் நிறுவனங்கள், அதிகரித்து வரும் கடன், கொரோனா, உற்பத்தி அளவை உயர்த்த முடியாத நிலை, ரீடைல் சந்தை தொடர் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும் சீனா தைவான் நாட்டைக் கைப்பற்றத் துடிக்கிறது. இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கும் சீன அரசுக்கு பெரும் தலைவலியாக அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தைப் பதவி செய்து வருகிறது என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முதலும் முக்கிய உதாரணமாக விளங்குவது சியோமி. இந்த … Read more

சென்னை: திருட்டு வழக்கு; ரூ.2 லட்சம் டீலிங் – போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகினி சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தி.நகரில் உள்ள பிரபலமான ஜூவல்லரி ஷாப்பைச் சேர்ந்தவர்கள், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தனர். அதோடு ஆடியோ பதிவு ஒன்றையும், சி.சி.டி.வி கேமரா பதிவு காட்சிகளையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் … Read more

மொத்தமாக 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள்…ரஷ்யாவின் அத்துமீறலால் பலியான உயிர்கள்!

போர் நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழப்பு. 45400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். ரஷ்யாவின் போர் தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடங்கி இன்றுடன் 180 நாள்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் மோதலானது தொடர்ந்து வருகிறது. இந்த போர் தாக்குதலில் இதுவரை 45400 ரஷ்ய போர் … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும் என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை எச்சரிக்கும் சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை; விநாயகர் சிலை விலையை உயர்த்தி விற்ககூறும் இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது . போலீசில் மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிதர பரிசீலிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் உத்தமபலையத்தைச் சேர்ந்த பிரதாப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடப்பட்டது.

FMCG நிறுவனத்தின் இந்த பங்கு உங்களிடம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமன ஜில்லெட் இந்தியா, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 2.5 மடங்கு அதிகரித்து, 67.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 27.53 கோடி ரூபாயாக இருந்தது. இதன் லாபம் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்குதாரர்களுக்கும் அதன் பலனை கொடுக்கும் விதமாக, 10 ரூபாய் முகமதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்குக்கு 36 ரூபாய் டிவிடெண்டினை வழங்க இயக்குனர் குழு … Read more