மதம் மாறி என்னை திருமணம் செய்யனும்.. இல்ல ஆசிட் தான்.. நர்சிங் மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

India oi-Mani Singh S போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதம் மாறி என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடில் ஆசிட் வீசிவிடுவதாக நர்சிங் மாணவியை மிரட்டிய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தை சேர்ந்தவர் மோனு மன்சூரி (வயது 22). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு நர்சிங் படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நர்சிங் மாணவி மோனு மன்சூரியை காதலிக்க மறுத்துள்ளார். ஆனாலும் … Read more

அமித்ஷாவை நெருங்க முயன்றவர் கைது| Dinamalar

மும்பை: மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த (செப்., 5ம் தேதி) லால்பாக் ராஜா மற்றும் முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார். மேலும், இவர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் சென்றார்.அப்போது, பாதுகாப்பு விதிகளை மீறி மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹேமந்த் பவார் என்பவர் நெருங்க முயன்றார். பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஹேமந்த் என்பவர் இன்று(செப்.,08) கைது … Read more

சைரஸ் மிஸ்திரி மரணம்.. அமேசானுக்குப் பறந்த உத்தரவு..!

இந்தியாவில் முக்கிய மற்றும் பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவர் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர விபத்தில் மரணம் அடைகிறார் என உலக வங்கியின் தரவுகள் கூறும் நிலையில், சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கும் அலாரம் சிஸ்டம் கொண்ட வர ஆலோசனை நடத்தி வருகிறது. கடுப்பான … Read more

இந்தூர்: `என்கிட்ட பாம் இருக்கு’… விமானத்தை தவறவிட்ட குடும்பம் – கடைசியில் ட்விஸ்ட்!

மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு கொண்டுசெல்வது மட்டுமல்ல, விளையாட்டாய் என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது என்று கூட பேசக்கூடாது. காரணம், இந்தூர் விமான நிலையத்தில் ஒரு நபர் தன் மகளிடம் கூறிய இதேபோன்ற விளையாட்டுத்தனமான பொய்யால் விமானத்தைத் தவறவிட்டிருக்கிறார். விமான நிலையம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், ஒரு நபர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இந்தூர் சர்வதேச … Read more

காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை: சிறப்பு மருத்துவக்குழு அறிக்கை

காரைக்கால்: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை சிறப்பு மருத்துவக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவன் பால மணிகண்டனுக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\"மெடிக்கல் மிராக்கல்\".. மண்ணுக்குள் கிடைத்த 31,000 வருடம் பழைய எலும்பு கூடு! எடுத்து பார்த்தால்.. அச்சச்சோ

International oi-Shyamsundar I போர்னியோ: தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. போர்னியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த எலும்பு கூடு பல்வேறு காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இந்த எலும்பு கூடு 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் லியோன் டேபா என்ற குகையில் இந்த எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. … Read more

சுகாதாரம் பேணுவதில் பெங்களூரு சிறைக்கு முதலிடம்; சென்னை மத்திய சிறைக்கு 3வது இடம்| Dinamalar

பெங்களூரு: சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறையாக, தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3வது இடமும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு தேர்வு செய்தனர். இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 3வது … Read more

நிர்மலா சீதாராமன் கொடுத்த சூப்பர் அப்டேட்.. எதற்கு முன்னுரிமை தெரியுமா?

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது. அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருதல், வருவாயினை சமமாக பகிர்தல் தான் அரசின் முக்கிய கடமைகளாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா அமெரிக்கா வர்த்தக கவுன்சிலின் உச்சி மாநாட்டில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய அரசின் முன்னுரிமை எதற்கு என்பது குறித்தான பலவற்றையும் பேசினார். மேலும் கடந்த சில மாதங்களோடு ஒப்பிடும்போது பணவீக்கம் என்பது மீண்டும் … Read more

`மீண்டு வாங்க Men in Blue!' – தொடர் வெற்றிகள் டு `தொடர்' தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை?

இலங்கை அணியிடம் தோற்று யாரும் எதிர்பாராத விதமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோற்கும் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது ரோஹித்தின் அணி. அதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. என்னதான் பிரச்னை, இது இந்திய அணியை எந்த வகையில் பாதிக்கும்?! ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ஆன பிறகு, அவர் தலைமையில் தொடர் வெற்றிகளை மட்டுமே … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பெண்களுக்கான 30% இடங்களை முன்கூட்டியே ஒதுக்கிவிட்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, பெண்களுக்கு அரசுப்பணிகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பிலான அறிவிப்புகளை தமிழக சட்டசபை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில், தமிழக அரசுத் … Read more