ஆகஸ்ட் 15ல் இரும்பு மேம்பாலம்; சிவானந்த சதுக்கத்தில் திறக்க தயார்| Dinamalar
பெங்களூரு : கர்நாடகாவின் முதல் இரும்பு மேம்பாலம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 15ல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. பெங்களூரு சிவானந்த சதுக்கத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், இரும்பு மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது. திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் கேள்வியெழுப்பி சிலர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இரும்பு பாலம் கட்ட அனுமதியளித்தது. … Read more