டெல்லிக்கு இடமாறும் அதிமுக சண்டை… பொதுக்குழு விவகாரத்தில் இனி அடுத்து என்ன?!

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் மூலமாக நீக்கப்பட்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் பன்னீர்செல்வம். அவரின் ஆதரவாளரான வைரமுத்து சார்பிலும் தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு … Read more

காதலை அழகாய் வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் மற்றும் மனைவி! வைரலாகும் பதிவு

டுவிட்டரில் ஒரு ”வார்த்தை ட்விட்” என்ற ஹேஷ் டேக் டிரண்டான நிலையில் அதன் மூலம் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் தம்பதி தங்கள் காதலை அழகாக வெளிப்படுத்தினார்கள். உலகளவில் உள்ள சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது டுவிட்டர். இதில் அடிக்கடி எதாவது ஒரு ஹேஷ் டேக் உலகளவில் டிரண்டாகும், அந்த டேக்குக்கு சம்மந்தமான பதிவுகளை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பதிவிடுவார்கள். அந்த வகையில் #OneWordTweet (ஒரு வார்த்தை ட்விட்) என்ற ஹேஷ் டேக் நேற்று டிரண்டானது. அதன்படி … Read more

தமிழ்நாட்டில் 393 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது அறிவிப்பு – முழு விவரம்…

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 393 ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருதை  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன் முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: இந்தியாவில் ஒரே நாளில் 7,219 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 59,210-லிருந்து 56,745 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 9,651 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,27,965 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 7,219 பேருக்கு கோவிட்: 33 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 7,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,49,726 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 9,651 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,65,016 ஆனது. தற்போது 56,745 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் … Read more

கடனில் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்று ரூ.77,450 கோடி..!

டெல்லி: கனடாவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகுல் பாட்டியாக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது கனவு. தனது தந்தை ஒரு டிராவல் முகவாண்மை நடத்தி வந்தாலும் அதையே செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. எனவே சொந்தமாக பல்வேறு தொழில்களைத் தொடங்கியும் எதிலும் வெற்றி இல்லை. அந்த நேரத்தில் தனது தந்தையின் உடல் நலம் சரியில்லாமல் போனதால், குடும்பச் சூழல் காரணமாகத் தனது தந்தையின் வணிகத்தைத் தொடர ஆரம்பிக்கிறார். இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் பின்னர் … Read more

`கடவுள் இவ்வளவு ஆசீர்வதிப்பார் என்று நினைக்கவேயில்லை’ – 16 குழந்தைகளைப் பெற்ற தாய் மீண்டும் கர்ப்பம்

நம்ம ஊர்ல எல்லாம் புதுசா திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, பொதுவாகவே பெரியவர்களெல்லாம் `16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துறது வழக்கமான ஒன்றுதான். அதற்கான உண்மையான அர்த்தம் வேறு என்றாலும் கூட, சும்மா விளையாட்டுக்காக 16 குழந்தைகளை பெற்றுக்கொள் என விளையாட்டாக சொல்வதும் உண்டு. ஆனா இங்க ஒரு தம்பதி 16 குழந்தைகளைப் பெற்றெடுத்து, 17-வது குழந்தையைப் பெற்றெடுக்கவே தயாராகிட்டாங்க. இதை படிக்கும்போது உங்களுக்கே ஆச்சர்யமா இருக்கில்ல. வாங்க அப்படி யார் தான் அவங்கனு பார்ப்போம். அமெரிக்காவின் வடக்கு … Read more

சேலம் உள்பட பல மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு…

சேலம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சேலம் உள்பட சில மாவட்டங் களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன். இன்று சில மாவட்டங்களிலும் கரைக்கப்பட உள்ளது. சென்னையில் நாளை(4ந்தேதி) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.40-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.24 முதல் ரூ.28 வரை விற்றுவந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விலை ரூ.40 அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் கெடுபிடி: மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சே; வரவேற்ற அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் பிரதமர், அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் அரசியல்வாதிகளின் வீடுகள் சூரையாடப்பட்டது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அவர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் இலங்கையில் இருந்த வரை தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார். அவரால் போராட்டகாரர்களை … Read more