தோல் கழலை நோய் 22 மாடுகள் பலி| Dinamalar

புனே :மஹாராஷ்டிராவில் கழலை நோய் தாக்குதலில், 22 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை தோல் கழலை என்ற நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகளின் தோலில் கட்டி உருவாகி, அவற்றுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சமீபகாலமாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும் இந்த நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. … Read more

அப்படியெல்லாம் அதிகமாக கடன் வாங்கல.. PSB-ல் பாதியாக குறைந்த கடன்.. அதானி குழுமம் செம அப்டேட்!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரான கெளதம் அதானி, சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகின்றார். இது நல்ல விஷயம் தான் என்றாலும் மறுபுறம் இவரின் கடன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைட்ஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது. அதில் அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் … Read more

ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடியை கோயிலுக்குள் விடாமல் தடுத்த பஜ்ரங் தள தொண்டர்கள் – நடந்தது என்ன?

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் தங்களது படம் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி கபூர் தம்பதி கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் இயக்குநர் அயன் முகர்ஜி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் வருவது குறித்து … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தத்தை போக்க மனநல மருத்துவர்களை அணுகலாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தம் இருந்தால், அது தொடர்பாக மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த இன்று  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கs சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணயின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றவர்,  தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து … Read more

மதுரையில் 1 லட்சம் ஏக்கர் நில பாசனத்துக்கு தேனி வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

தேனி : மதுரையில் 1 லட்சம் ஏக்கர் நில பாசனத்திற்காக தேனி வைகை அணையில் இருந்து பெரியகருப்பன் பாசனத்துக்கு நீர் திறந்து வைத்தார். 130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கும், பின்னர் 75 நாட்களுக்கு முறை பாசனம் என 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

டில்லியில் ஜன.,1 வரை பட்டாசு விற்பனைக்கு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் ஜன., 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு வரும்., அக்., 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு விற்பனைக்கு தடை: சுற்றுசூழல் மாசுபாடு கருதி, டில்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க, வரும் ஜன., 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு … Read more

சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கட்டுமான பொருட்கள் முதல் காண்டம் விற்பனை வரையில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய உணவு சந்தையை ஏற்கனவே சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது உணவகங்களின் நேரடி வர்த்தகத்திலும் இவ்விரு நிறுவனங்கள் நுழைய உள்ளது. இதனால் உணவகங்கள் இனி சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது, … Read more

07/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன்,  27 பேர்  உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 5,379 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் 5ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக குறைந்தது. தற்போது நாடு … Read more

தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவு: திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனை

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக பூ வரத்து குறைவால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. மதுரையில் பூ வரத்து குறைந்து ஒரு வாரமாக மல்லிகை விலை உயர்ந்து தற்போது ரூ.3000க்கு விற்பனையாகிறது.