கார் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், இனிமேல் காரின் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி, 54, கடந்த 4ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இருந்து மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு காரில் வந்தார். … Read more

தங்கம் விலை மீண்டும் சரிவு.. கிட்டதட்ட 1 மாத சரிவில்.. இது வாங்க சரியான வாய்ப்பா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த அமர்வின் முடிவில் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. … Read more

சாத்தான்குளம்: அடகு நகை பிரச்னை… பெற்ற மகளால் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள ஞானியார்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி. இவரின் மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா என்பவர் உட்பட 6 மகள்கள் மற்றும் 4 மகன்கள் என 10 குழந்தைகள். இதில், 2 மகன்கள் இறந்து விட்டனர். அமுதா மற்றும் அவரின் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்கள். ஆறுமுகபாண்டி, தனது மகள் அமுதாவின் 5 பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அடகு வைத்து அந்த பணத்தில் சாத்தான்குளம் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சைபர் கிரைம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

“மாட்டுகறி” நல்லது! திரண்ட பஜ்ரங்தள்.. திகைத்த ரன்பீர்-ஆலியா ஜோடி – உஜ்ஜைன் கோயிலுக்கு விடக்கூடாதாம்

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்று கருத்து கூறியதற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோயிலுக்குள் செல்ல பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் … Read more

ஆள விடுங்க.. இப்போதைக்கு உணவு, குரோசரி டெலிவரி கிடையாது.. டெலிவரி நிறுவனங்கள் கைவிரிக்கிறதா?

பெங்களூர்: கடந்த சில தினங்களாகவே வெள்ளத்தில் மிதந்து வரும் டெக் சிட்டியான பெங்களூரில், ஒரே நாள் இரவில் 130 மிமீ மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் டிராக்டர்களில் பயணம் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருந்து வருகின்றது. ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து … Read more

பாரத் ஜோடோ யாத்ரா: இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி… ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை, இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து தொடங்குகிறார். அதை முன்னிட்டு, இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார். இந்த யாத்திரை … Read more

ஓணம் பண்டிகையையொட்டி பழனி- கொடைக்கானல் சாலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் அனுமதி

திண்டுக்கல்: பழனி- கொடைக்கானல் சாலை மழைக்கு சேதமடைந்த நிலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் விசாகன் அனுமதியளித்தார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள பயணிகள் சாலையை அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்பட்டது. 

இட ஒதுக்கீடு வழக்குவரும் 13 முதல் விசாரணை| Dinamalar

புதுடில்லி, ‘கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான முழுமையான விசாரணை வரும் 13 முதல் துவங்கும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2019 ஜனவரியில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் … Read more

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை இரண்டாம் நாள் ஐபிஓவில் காலையிலேயே முழுமையாக முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இரண்டாம் நாள் முடிவில் தகுதியான முதலீட்டு நிறுவனங்கள் 0.98 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 1.27 மடங்கும், ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 3.61 மடங்கும் என மொத்தமாக 1.53 மடங்காகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை வாங்கியுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமாக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே … Read more