60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் கோயில் சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

சென்னை:  60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட 4  சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கிருந்த  திருமங்கை ஆழ்வார், காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகள் 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் சிலர் திருடிச் … Read more

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலை

சென்னை: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் பான் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?

பான் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது ஒரு தனித்துவமான பத்து இலக்க எண்ணெழுத்து எண் ஆகும். இது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது வரி நோக்கங்களுக்காக மட்டுமல்ல, அடையாள ஆதாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பான் கார்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட உங்களது பெயரில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், இப்போது நீங்கள் எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம். அதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் பான் கார்டில் உங்கள் … Read more

"`பீட்டா' அமைப்பு வெளிநாட்டினரிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறது!"- அமைச்சர்‌ ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மின்சார வசதி இல்லாததால் மின்சார வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வந்துள்ளேன். தற்போது இந்தப் பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசின் அனுமதி பெறவேண்டி உள்ளது. அதிகாரிகளை இது குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு அறிக்கை … Read more

பட்டம் பயின்ற முதல் அரச வாரிசு… இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III குறித்த சுவாரஸ்ய தகவல்கள்…

இங்கிலாந்து மன்னராக தனது 73 வது வயதில் பொறுப்பேற்றுள்ள சார்லஸ் III 1948 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி பிறந்தார். 1952 ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இருந்த ஜார்ஜ் VI மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகள் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்டார். எலிசபெத், மகாராணியாக முடிசூட்டிக் கொண்டபோது 3 வயதே நிரம்பிய அவரது மூத்த மகன் சார்லஸ் பட்டத்து இளவரசராக அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார். விவரம் தெரியாத குழந்தையாக இருந்தபோதே பட்டத்து இளவரசராக வலம்வந்த … Read more

ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு: புகழேந்தி

சென்னை: ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கட்சி பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.

ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80ஐ தொட்டு பெரும் வீழ்ச்சியடைந்த நிலையிலும், உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனைக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு மத்தியில் தனது புதிய ஐபோந் 14 சீரியஸ் போன்களின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் பெரும் தொகையை வட்டியாக மட்டுமே செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அப்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் … Read more

`ராகுல் அணிந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.41,000!' – விமர்சித்த பாஜக… பதிலளித்த காங்கிரஸ்

தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததையடுத்து, அடுத்து 2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் களமாடி வருகிறது. அதன் முன்னெடுப்பாக, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த புதன்கிழமையன்று `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை மக்களை நேரில் சந்திக்கும் விதமாக யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி இந்த நிலையில், யாத்திரையின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை … Read more

போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

சென்னை: போக்சோ வழக்குகளை காவல்துறையினர்எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, சிறுவர்கள்மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக சைலேந்திரபாபு வெளியிட்ட சுற்றறிக்கையில்,  சென்னை … Read more

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12 முதல் விண்ணப்பம் அறிவிப்பு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12 முதல் காலை 10 மணி முதல் 26 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்ப வழிமுறைகள் இதர விவரங்களை www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.