`இவர்களுக்கு' கடன் கொடுக்கும்போது, சிபில் ஸ்கோர் பார்க்காதீர்கள் – மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

எவருக்கும் கடன் எளிதாக கிடைத்துவிடாது. ஒருவரின் சிபில் ஸ்கோரை செக் செய்தே கடன் வழங்குவார்கள். இந்த சிபில் ஸ்கோர் ஒருவர் கடன் வாங்கி அதை திரும்ப கட்டியது பொறுத்தே அமையும். யாருக்கு எவ்வளவு சிபில் ஸ்கோர்? சிபில் ஸ்கோர் 900 பாயிண்டுகள் வரை கணக்கிடப்படும். இதில் ஒருவர் 750 பாயிண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், அவரது சிபில் ஸ்கோர் சிறப்பாக உள்ளது. அதற்கு குறைந்தால், அவரது சிபில் ஸ்கோர் நன்றாக இல்லை என்று பொருள் கொள்ளலாம். கடன் ஒருவர் … Read more

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு – 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில்,  நடப்பாண்டு,  கடந்த ஆண்டைவிட  ஆண்டு  20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும்,  37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான நிரப்பப்படாத இடங்களை, ஆதிதிராவிடர் பிரிவினருக்கு மாற்றி அளிப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல்படிப்பிற்கான மூன்று கட்ட கலந்தாய்வு ஏற்கனவே … Read more

ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? – உண்மை என்ன?

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர். RBIயின் பெயரில் போலி தகவல் இந்த தகவலை … Read more

சிக்குன்குனியா தடுப்பூசி ‘ஐஎக்ஸ்சிக்’ கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் அமெரிக்காவில் தடை

சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த மருந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். கொசு மூலம் பரவும் சிக்கன்குனியா வைரசுக்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் Ixchiq-க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட … Read more

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகியது ஏன்? அமித்ஷா பதில்

புதுடெல்லி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு … Read more

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" – நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ஜஸ்வந்த் வர்மா என்ற அந்த விமானி பயணிகளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்கினார். இண்டிகோ விமானம் “இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். ஏனென்றால் என்னையும் பைலட் ஆக்கவேண்டும் என்ற என் கனவையும் ஆதரித்த நபர், என் அம்மா, முதல்முறையாக என்னுடன் இங்கே பயணம் செய்கிறார். … Read more

Find My செயலி உதவியுடன் பிக்பாக்கெட் அடித்தவரை கொத்தாகப் பிடித்து அலறவிட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி… வீடியோ

இத்தாலியின் வெனீஸ் நகருக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் இயர்போட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது. ‘Find My’ என்ற செயலி உதவியுடன் கைப்பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். தன்னிடம் கைவரிசை காட்டி சிக்கிய பெண்ணிடம் “எட்டு பிள்ளைகளுக்குத் தாயான என்னிடம் நீமட்டும் சிக்காமல் போயிடுவியா” என்று கொத்தாக அவரது தலைமுடியப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவரது மகள் கரீஸ் மெக்எல்ராய், “தனது தாயாரிடம் சிக்கிய … Read more

சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர் என பேச்சு; அமித்ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கார் பதவி விலகிய நிலையில், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கேரளாவின் கொச்சியில் நடந்த … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, கரடி, புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை தடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாட்டுத் … Read more

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்திருந்த நிலையில், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும்  பாராசூட் சோதனை  நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, … Read more