காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? – இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த போர் முடிவுக்கு வர நான்தான் காரணம், இது நான் நிறுத்திய 8-வது போர் ( இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட) என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழக்கம்போல் சுய … Read more

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000! ஜேப்பியார் கல்லூரி தலைவர் அறிவிப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000 வழங்கப்படும் என  ஜேப்பியார் கல்லூரி தலைவரும், தவெக நிர்வாகியுமான மரிய வில்சன் அறிவித்து உள்ளார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சமும், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.10 லட்சம், நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியஅரசு ரூ.2 லட்சம், பாஜக  ரூ.1 லட்சம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற கட்சிகளும் தங்களால்  முடிந்த உதவிகளை … Read more

`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' – Hi-Fi செய்து கொண்ட இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்!

துபாயில் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. லீக், சூப்பர் 4, இறுதிப்போட்டி என இந்தியா – பாகிஸ்தான் மோதிய மூன்று போட்டிகளிலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்தனர். India VS Pakistan அதற்கு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் … Read more

சேவை உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சேவை உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்  என  தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கேரளத்தில்  சேவை உரிமைச் சட்டம் கூடுதல் வலிமையுடன் திருத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்,  வலிமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 15 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது  என பாமகை தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். உங்கள் ‘சகாவு’விடம் … Read more

தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance -336

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் மற்றும் சந்தை நுணுக்கங்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் … Read more

பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம்.! தவாக தலைவர் வேல்முருகன் மிரட்டல்

சென்னை: விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,  தடை செய்யாவிட்டால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என விஜய் டிவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார். … Read more

ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள் நிறுவனம்

விசாகப்பட்டினம், உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் … Read more

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் – ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. கோவை இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதிகிஷோர் (15). இந்த சிறுவனை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் கடித்துள்ளது. இதனிடையே கடந்த 9-ம் தேதி சிறுவனுக்கு … Read more

மிஷன் சக்ஸஸ்… ஆர்.கே. சாலையை வந்தடைந்தது ‘பவானி’…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் 3ல் பலகட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இராயப்பேட்டை நிலையத்திலிருந்து ஆர்.கே. சாலை நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் பாலம் மற்றும் இராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரியக் கட்டிடம் ஆகியவற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘பவானி’ ஈடுபடுத்தப்பட்டது. 910 மீட்டர் … Read more

மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்

மும்பை, நாட்டின் முக்கிய பண்டிகை தீபாவளி உள்ளது. இதனிடையே நடப்பு ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு, புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, இந்தியாவில் சீன பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து … Read more