KGF 2 ராக்கிங் ஸ்டார் யஷ் தாடியை எடுத்ததற்கு மனைவியின் ரியாக்ஷன்… வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் நடிகர் யஷ் நீண்ட தாடியுடன், மிரட்டும் மேனரிசத்துடன் மாஸாக நடித்திருந்தார். அவரின் கெட்டப் ரசிகர்களைக் கவரும் படி இருந்து அது ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. இந்நிலையில் யஷ் தனது தாடியை எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொலியில் யஷ் தனது தாடியை எடுக்கத் தயாராகும் போது அவரது மனைவி ராதிகா பண்டிட் … Read more

கனடாவில் ரயில் பாதையில் ஜாகிங் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

கனடாவில் ரயில் பாதையில் ஜாகிங் சென்ற ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக பலியானார். கால்கரியில், நேற்று மதியம் 1.00 மணியளவில் ஒருவர் ரயில் பாதையில் ஜாகிங் சென்று கொண்டிருக்க, பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளது. மக்கள் அவரை எச்சரிக்க குரல் எழுப்பியும் அவர் அதை கவனிக்கவில்லையாம். வேகமாக வந்த அந்த ரயில் அவர் மீது மோத, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார் அவர். 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது காதுகளில் இயர்போன் மாட்டியிருந்திருந்ததாக கூறப்படுகிறது. … Read more

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது.  சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் இடம்பெற்றது. அப்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் டிபார்ட்டி புறக்கணிப்பு குறித்து அறிக்கை வாசித்தார். அதன்பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் … Read more

ஜோஸ் பட்லர் அதிரடி சதம்… கொல்கத்தா அணிக்கு எதிராக 217 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி … Read more

ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 218 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை: கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்கு அயல்பணி கட்டாயமாக்க உள்துறை பரிந்துரை| Dinamalar

புதுடில்லி,-எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், மத்திய அரசுப் பணிக்கு அயல்பணியாக வருவதை கட்டாயமாக்கும்படி, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பற்றாக்குறை உள்ளது. மாநில அரசுகள், தடையில்லா சான்றிதழ் அளித்தால் மட்டுமே, இந்த அதிகாரிகள், அயல் பணியாக மத்திய அரசு பணிகளுக்கு செல்ல முடியும் நிலை இருந்தது.இதையடுத்து, மத்திய அரசின் துறைகளில் இணைச் … Read more

வர்த்தக நேரத்தை மாற்றியது ரிசர்வ் வங்கி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை..!

கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தக நேரத்தை மாற்றி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் ரிசர்வ் வங்கி பழைய வர்த்தக நேரத்திற்கு மாறியுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து வர்த்தகத் தளமும் காலை 9 மணி முதல் வர்த்தகத்தை துவங்கும். ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் கொரோனா தொற்றுக் காரணமாக ஏப்ரல் 7, 2020 அன்று மாற்றப்பட்டது. 1172 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ஐடி, … Read more

உணவு பரிமாறுவதில் தகராறு… தனியார் உணவகத்தில் ரகளை செய்த திருநங்கைகள்! – போலீஸ் விசாரணை

பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்றைய தினம் விழுப்புரத்தில் `மிஸ் கூவாகம்- 2022′ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரம் வந்து கொண்டிருக்கின்றனர். உடைக்கப்பட்ட கண்ணாடிகள் இந்த நிலையில், விழுப்புரம் வந்திருந்த திருநங்கைகளில் சுமார் 9 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

ஐபிஎல் தொடர் நிறுத்தமா? பிசிசிஐ அவசர ஆலோசனை!

ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 26ம் தேதி 2022 ஐபிஎல் மெகா தொடர் தொடங்கியது. நான்கு வாரங்களாக இந்த தொடர் சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த அணியும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த போட்டிக்கான அனைத்து பயிற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சமூக வலைதளங்கள் முழுவதும் ஐபிஎல் … Read more

கொரோனா அதிகரிப்பு: உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு  அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்ததைத்தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தின. இந்த நிலையில், சீனா உள்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதுடன் லாக்டவுன் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் … Read more