சீன படையை சமாளிக்க சீன மொழியை கற்கும் இந்திய ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை சமாளிக்க, நமது ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியை கற்று கொடுக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, ராணுவ தளபதி நரவானேயிடம் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மூலமும், பல்கலை மற்றும் பயிற்சி நிலையங்கள் மூலம் வீரர்களுக்கு சீன மொழியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக … Read more

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..!

நாட்டில் கொரோனாவின் பெருந்தொற்று தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து விமான போக்குவரத்து துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நஷ்டத்தினை குறைக்க ஏர் இந்தியா உள்பட பல விமான நிறுவனங்களும் சம்பளத்தினை குறைத்தன. ஆனால் தற்போது நாடு கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தினை வழக்கம்போல கொடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. ரூ.5 லட்சம் கோடி செலவு! இதற்கிடையில் சில … Read more

“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்!'' – பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.கே.படேல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவராலும் மருத்துவக் கல்வியை எட்ட முடியும். பிரதமர் மோடி இந்த குறிக்கோள்களின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார். அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் … Read more

கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு

 கீவ் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவோம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. கருங்கடல் ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றதை அடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு உறுதியளித்துள்ளது. உக்ரேனிய ஏவுகணைகளை தயாரித்து பழுதுபார்க்கும் தலைநகர் கீவில் உள்ள ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய கூறியுள்ளது. இன்று காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. பீதியில் மக்கள்! வெளியான … Read more

பாரதியார் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கை குறித்து விமர்சிக்கும் கார்டூன்! ஆடியோ

சென்னை கவர்னர் மாளிகையில், பாரதியார் சிலையை திறந்து வைத்துள்ள தமிழக ஆளுநரின் நடவடிக்கை குறித்து விமர்சித்து உள்ளது. ஆளுநனர் மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகஅரசு அவர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்ககும் முயற்சியாகவே ஆளுநரின் நடவடிக்கை உள்ளது. தமிழகஅரசின் நீட் விலக்கு மசோதா உள்பட ஏராளமான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதை கார்டூன் … Read more

கொடநாடு வழக்கு – அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.விடம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக … Read more

வாழப்பாடி அதன் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இடி, மின்னலுடன் தற்போது கனமழை பெய்து வருகிறது. வாழப்பாடி சிங்கிபுரம் முத்தம்பட்டி பொன்ன்னராம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம் பெரிய கிருஷ்ணாபுரத்திலும் கனமழை பெய்து வருகிறது. லட்சத்தீவு , தென்கிழக்கு  அரபிக்கடல் மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனம் காரணமாக  அடுத்த ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது

டிவிட்டர் மோகம்.. டெஸ்லா-வுக்கு வேட்டு வைக்கும் எலான் மஸ்க்..!

புதுமைக்கும், சவால்களுக்கும் பெயர்போன எலான் மஸ்க் டெஸ்லா-வில் துவங்கி போரிங் கம்பெனி வரையில் வியக்க வைக்கும் பல வெற்றியைப் பதிவு செய்திருந்துள்ளார். இதனாலேயே எலான் மஸ்க்-ஐ பல கோடி மக்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற அறிவித்த பின்பு எலான் மஸ்க் செய்வது சரியா தவறா எனச் சந்தேகம் எழும் அளவிற்குத் தற்போது சூழ்நிலை மாற்றியுள்ளது. டிவிட்டர் பணயக் கைதியல்ல.. எலான் மஸ்க் அறிவிப்பால் கடுப்பான பராக் அகர்வால்..! … Read more

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: சித்ரா பௌர்ணமி ஏற்பாடுகள் தீவிரம்!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பதினெண் சித்தர்களுள் ஒருவரான வால்மீகி சித்தர் ஜீவ சமாதி அடைந்த தலமாக இது உள்ளது. இந்தக் கோயிலிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம் இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. … Read more

ரஷ்யாவில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. பீதியில் மக்கள்! வெளியான வீடியோ

 ரஷ்யா நகரில் பயங்கர வெடி சத்தங்கள் கேட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கோரோட் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பொல்கோரோட்டில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால் நகரில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. வான் பாதுகாப்பு அமைப்பு பாய்ந்து சென்று நடுவானில் வெடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. More footage from #Belgorod. pic.twitter.com/hzzqVIEjRx — NEXTA (@nexta_tv) April 15, 2022 மிகவும் வேதனையான விளைவுகள் ஏற்படும்! … Read more