ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!

கால் டாக்ஸி-க்கு அடுத்ததாக மிக பிரபலமாகி வரும் சேவை பைக் டாக்ஸியாகும். இது போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக உள்ள நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல, இந்த பைக் டாக்ஸிகள் சமீப காலமாக விருப்பமான சேவையாக மாறி வருகின்றன. பைக் டாக்ஸி ஸ்டார்ட் அப் ராபிட்டோ, ஃபுட் டெக் நிறுவனமான ஸ்விக்கி தலைமையில் 180 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது. தீ … Read more

Oil India தலைமையகத்தில் சைபர் தாக்குதல்… ரூ. 57 கோடி கேட்டு மிரட்டல்! பின்னணி என்ன?

அஸ்ஸாமில் உள்ள இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தின் துலியாஜன் தலைமையகம் (Duliajan Headquarters) மர்ம நபர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பல கணினிகள் மற்றும் பல இணையதளங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் பாதிப்பைச் சரி செய்ய $7,500,000 (தோராயமாக ரூ.57 கோடி) பணம் கேட்டு … Read more

அமெரிக்காவுக்கு ரஷ்ய பகிரங்க எச்சரிக்கை

 உக்ரைனுக்கு தொடர்ந்து உதவினால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு ரஷ்ய எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்காவுக்கு அனுப்பிய வெளியுறவுத்துறை குறிப்பின் நகல் கிடைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கினால் அமெரிக்கா எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய எச்சரித்துள்ளது. கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு  அமெரிக்காவும் அதன் நாட்டு நாடுகளும் பொறுப்பற்ற வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் … Read more

4நாட்கள் தொடர் விடுமுறை: கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் பயணம்

சென்னை: 4நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக  கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் வெளிஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி, சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்ததால், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து, 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டை சுற்றுலா செல்பவர்கள் என ஏராளமானோர் வெளி இடங்களை நோக்கி பயணித்துள்ளனர். 4 நாட்கள் விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக … Read more

எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்துவிட்டது – ஐபிஎல்லில் நுழைந்தது கொரோனா

மும்பை: ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ – பபிள் முறையில் உள்ளனர். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி … Read more

கோடநாடு கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோவையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.

சீன படையை சமாளிக்க சீன மொழியை கற்கும் இந்திய ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை சமாளிக்க, நமது ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியை கற்று கொடுக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, ராணுவ தளபதி நரவானேயிடம் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மூலமும், பல்கலை மற்றும் பயிற்சி நிலையங்கள் மூலம் வீரர்களுக்கு சீன மொழியின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக … Read more

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..!

நாட்டில் கொரோனாவின் பெருந்தொற்று தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து விமான போக்குவரத்து துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நஷ்டத்தினை குறைக்க ஏர் இந்தியா உள்பட பல விமான நிறுவனங்களும் சம்பளத்தினை குறைத்தன. ஆனால் தற்போது நாடு கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தினை வழக்கம்போல கொடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. ரூ.5 லட்சம் கோடி செலவு! இதற்கிடையில் சில … Read more

“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்!'' – பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.கே.படேல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவராலும் மருத்துவக் கல்வியை எட்ட முடியும். பிரதமர் மோடி இந்த குறிக்கோள்களின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார். அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் … Read more

கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு

 கீவ் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவோம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. கருங்கடல் ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றதை அடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு உறுதியளித்துள்ளது. உக்ரேனிய ஏவுகணைகளை தயாரித்து பழுதுபார்க்கும் தலைநகர் கீவில் உள்ள ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய கூறியுள்ளது. இன்று காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. பீதியில் மக்கள்! வெளியான … Read more