பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யுடன் திடீர் சந்திப்பு… உக்ரைன் தலைநகரில் ஆய்வு…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார். இங்கிலாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் காக்கி உடைக்கு மாறிய ஜெலன்ஸ்கி-யுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பதையும், பேச்சுவார்த்தை நடத்தும் படங்களையும் அதில் பதிவிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் இந்த … Read more

ஐபிஎல்: 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர்  ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் … Read more

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

அமெரிக்காவை மிரட்டும் ரெசிஷன்.. பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்குப் பின்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்குப் பின்பு பணவீக்கம், விலைவாசி உயர்வால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு மூலம் அமெரிக்க அரசு சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டும் அல்லாமல் மாற்று வழியை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. வரி வழக்கில் … Read more

பெட்ரோல் விலை உயர்வு: ஸ்மிருதி இரானியை விமானத்தில் இடைமறித்து கேள்வி கேட்ட காங் மகளிரணி தலைவி!

சமீபகாலங்களில் இந்தியாவில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் மற்றும் மருந்து பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்படுவதால் ஏழை, எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. गुवाहाटी की फ़्लाइट में @smritiirani जी से सामना हुआ। रसोई गैस की लगातार बढ़ती क़ीमतों पर सुनिए उनके जवाब महँगाई … Read more

போராட வீதியில் இறங்கிவிட்டேன் – இலங்கை முஸ்லிம் பெண்ணின் பரபரப்பு பேட்டி

Courtesy: BBC Tamil இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ”கோட்டாபய கோ ஹோம்” என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு – காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் பெருமளவில் இளைஞர், இளம் பெண்களே கலந்துக்கொண்டிருந்தனர். இதில் … Read more

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்- சென்னையில் 9 மாவட்டங்களில் நாளை பகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

சென்னை: அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3-வது கட்ட தேர்தல் ஒன்றிய நகர, பேரூராட்சிகளில் நடந்து வருகின்றன. அதில் 25 மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை அறிவித்துள்ளது. நாளை (11-ந் தேதி) சென்னையில் உள்ள 9 மாவட்டங்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கும், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கும், … Read more

நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பதிவான வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நாளை விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 13ஆம் தேதி தனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளலாம் என குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மியான்மர் அகதிகளுக்கு அடையாள அட்டை| Dinamalar

அய்சாவல்-மிசோரமில் மியான்மர் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளது. வட கிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் ஜோரம் தங்கா தலைமையில், மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில எல்லையை ஒட்டி மியான்மர் நாடு உள்ளது. இந்நாட்டில் கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, ஏராளமானோர் மிசோரமிற்கு அகதிகளாக வந்துள்ளனர். மொத்தம், 29 ஆயிரத்து 532 பேர் அகதி முகாம்கள், தேவாலயங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இப்படி, 11 மாவட்டங்களில் தங்கியுள்ள மியான்மர் … Read more

மூன்றாவது முறையாக… சிபிஎம் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய மாநாட்டில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சீத்தாராம் யெச்சூரி – முதல்வர் அதேபோல, இதில் 85 பேர் மத்தியக்குழு உறுப்பினர்களாகவும், 17 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகவும், மத்தியக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 3 பேரும், மத்திய கட்டுப்பாட்டு குழுவிற்கு 5 பேரும், நிரந்தர சிறப்பு அழைப்பாளர்களாக … Read more