பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்று புதுவையில் நடுக்கடலில் விஜய் பேனர்

புதுச்சேரி: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் 13-ந்தேதி வெளியாகிறது. திரைப்படத்தை வரவேற்று புதுவை நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் தங்களது விருப்பமான அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படங்களை அதில் இடம் பெறச்செய்துள்ளனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை … Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்வு: சவரன் ரூ.39,400-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்ந்து சவரன் ரூ.39,400-ஐ தாண்டி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925-க்கும் சவரன் ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிளட் பிரஷர் தெரியும்; ஐ பிரஷர் தெரியுமா? – கண்கள் பத்திரம் – 10

ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா’ (Glaucoma). அது என்ன செய்யும்… அறிகுறிகள் எப்படியிருக்கும்…. சிகிச்சைகள் தேவையா…? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். சிறப்பு மருத்துவர் வசுமதி அதென்ன க்ளாக்கோமா? கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் (Aqueous humour) என்ற திரவம் … Read more

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இமானுவேல் மேக்ரான் முன்னிலை

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 12-வது அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் 27.42 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். ஆனால் அந்நாட்டு தேர்தல் முறைப்படி, முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் அதாவது 50 சதவீதம் வாக்குகள், யாரும் பெறவில்லை என்றால் இரண்டாம் கட்ட … Read more

கனமழை: நாகை, காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை : தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு … Read more

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள்  நடைபெறுகிறது.மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்படுகிறது.

திடீர் மழையால் வாழை மரங்கள் சேதம்| Dinamalar

திருக்கனுார் : மணலிப்பட்டு பகுதியில் சூறைக் காற்றுடன் கூடிய திடீர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.திருக்கனூர் அடுத்த மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வாழை, சவுக்கை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதனால், மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. … Read more

தனியார் மையங்களுக்கு இலவச கோவிஷீல்டு தடுப்பூசி சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி,  இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் நேற்று முதல் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை தனியார் தடுப்பூசி மையங்களுக்கு விலை குறைத்து ஒரு டோஸ் ரூ.225 என்ற விலைக்கு வழங்குவதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்நிலையில், தனியார் தடுப்பூசி மையங்களில் ஏற்கனவே இருப்பு … Read more

சிமெண்ட் விலை மீண்டும் உயரும்.. இதுதான் காரணம்..!

இந்தியாவில் அனைத்து நுகர்வோர் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமான துறையைப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல லட்சம் கட்டுமான திட்டங்கள் மந்தமாவது மட்டும் அல்லாமல், இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எண்ணிக்கை குறையலாம். அமெரிக்காவை மிரட்டும் ரெசிஷன்.. பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை..! சிமென்ட் விலை இந்தியாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமான … Read more

சசிகலா சேலம் பயணம்… ஆர்வம் காட்டாத ஆதரவாளர்கள்! தெரிந்தேதான் செய்தாரா முதல்வர்? -கழுகார் அப்டேட்ஸ்

நிதியமைச்சர் அட்வைஸ்… ஏற்றுக்கொண்ட முதல்வர்!மானியக் கோரிக்கையில் பரிசு கிடையாது! தமிழக சட்டசபையில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது, அந்தந்தத் துறை சார்பாக தங்கள் துறை அலுவலர்களுக்கு ஸ்பெஷல் உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை அப்படி எதுவும் வழங்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. கழுகார் “நாம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவரும்போது, இது போன்ற செலவுகள் வேண்டாம்” என்ற நிதியமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்தே முதல்வர் அலுவலகம் இப்படியொரு முடிவை எடுத்ததாம்! … Read more