“இந்தி எதிர்ப்பு அகில இந்திய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது!" – கி.வீரமணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் இந்தியில் மட்டுமே நடைபெறுகின்றன. அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும். அது இந்தியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நாடு முழுவதும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் … Read more

உக்ரைன் மக்களின் கர்ஜனை நீங்கள்… ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்த போரிஸ்

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்துள்ளார். உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால், அதன் கர்ஜனை நீங்கள் என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார் போரிஸ் ஜோன்சன். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டியடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார். இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து, உக்ரைனின் … Read more

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம் தமிழ் இணைய கல்வி கழகம் விருப்பம் கோரியுள்ளது. தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள் … Read more

திருச்செந்தூர் கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர்: முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு, குங்குமம் பிரசாதம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி ரூ. 3 கோடி செலவில் பழனி பால தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் திருநீறு தயாரிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோவில்களில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் இளையராஜா இசை நிகழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை மாதம் நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் இசையசைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர் என்றார்.

விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளினால் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மிகழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் வெளியிட்ட சில தகவல்களில் … Read more

வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு காப்பீட்டு சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைப் பெற்று இயங்கி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து வயதுடையவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக எல்ஐசி நிறுவனம் அதிகப்படியான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 11 முதல் 17 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மின்னல் வேகத்தில் மிரள வைத்த புது மாப்பிள்ளை மேக்ஸ்வெல்..! ஒரு நிமிடம் உறைந்துபோன ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்த விதம் ரசிகர்களை மிரள வைத்தது. ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியுடன் இணைந்தார். புதிதாக திருமணம் முடித்துள்ள மேக்ஸ்வெல் அணியில் இணைந்திருப்பதால் அவரது பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் … Read more

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் … Read more