கோவையில் இருந்து சென்னைக்கு காங்கிரசார் பாத யாத்திரை- பொதுமக்கள் ஆதரவு தர கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக நாள்தோறும் மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக உயர்த்தி வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு ரூபாய் 18.70, டீசலுக்கு ரூபாய் 18.34 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த கலால் வரி உயர்வு பெட்ரோலில் 203 சதவிகிதமாகவும், டீசலில் 531 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் விலைவாசி கடுமையாக … Read more

மதுரை சித்திரை திருவிழாவுகாக 11-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுகாக 11-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்ககா தண்ணீர் திறக்கப்படுகிறது.

லாயக்கற்ற உள்துறை அமைச்சர்! சித்தராமையா பாய்ச்சல்| Dinamalar

மைசூரு : “அரக ஞானேந்திரா, லாயக்கில்லாத உள்துறை அமைச்சர். இவரிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக ராஜினாமா கடிதம் பெற வேண்டும்,” என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் இளைஞர் கொலை வழக்கில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உளவுத்துறை உள்ளது; போலீஸ் துறை உள்ளது. சரியான தகவல் தெரிந்துகொள்ளாமல், உள்துறை அமைச்சர் எப்படி பேசினார்?அரக ஞானேந்திரா, லாயக்கில்லாத உள்துறை அமைச்சர். இவரிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை, உடனடியாக ராஜினாமா கடிதம் பெற … Read more

2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் விமான சேவையை மிஈண்டும் நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளோம். அனுமதி பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே விமான சேவை தொடங்கி விடலாம். அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. … Read more

ஆணாக மாற சிகிச்சை – பெரம்பலூரில் மாயமான கல்லூரி மாணவிகள் சென்னையில் மீட்பு!

மாணவி ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில், பெற்றோர்களின் புகாரின் பெயரில் போலீஸார் மாணவிகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரம்பலூரில் நடந்திருக்கிறது. போலீஸ் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஏ ஆங்கிலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவிகளும் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இரவு வரையிலும் வீட்டுக்கு வராததால் பதற்றம் அடைந்த … Read more

உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்ப மாட்டோம்! பிரித்தானியா, ஜேர்மனி கூட்டாக அறிவிப்பு

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ராணுவ டாங்கிளை அனுப்பப்மாட்டோம் என பிரித்தானிாய, ஜேர்மனி நாடுகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மீது தொடர்ந்து 45வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டில் பொதுமக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேசமயம், ரஷ்யா தாக்குதலிருந்து உக்ரைனை பாதுகாக்க தங்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஜெலன்ஸ்கி கோரிக்கை ஏற்று, சில நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை … Read more

தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வாரந்தோறும் நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இனிமேல் நடத்தப்படாது என தமிழ்நாடு அரசின்  பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வாரம்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இதுவரை … Read more

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகம், நீலகிரி, … Read more

பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்டோக்களில் பொருத்தியுள்ள மீட்டர்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய போக்குவரத்து துறை, காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது

முகக்கவசம் தேவை இல்லை: நிபுணர்கள் கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியுள்ளதை அடுத்து கட்டாய முக கவச உத்தரவை நாடு முழுதும் திரும்ப பெற இதுவே சரியான நேரம்’ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்டாய முக கவச உத்தரவை அரசு திரும்ப … Read more