தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகம், நீலகிரி, … Read more

பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெட்ரோல் – டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்டோக்களில் பொருத்தியுள்ள மீட்டர்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய போக்குவரத்து துறை, காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது

முகக்கவசம் தேவை இல்லை: நிபுணர்கள் கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியுள்ளதை அடுத்து கட்டாய முக கவச உத்தரவை நாடு முழுதும் திரும்ப பெற இதுவே சரியான நேரம்’ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு மையத்தின் இயக்குனர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்டாய முக கவச உத்தரவை அரசு திரும்ப … Read more

23 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சாதனை படைத்த மத்திய அரசு.. 2022 நிதியாண்டில் 34% வரி வசூல் அதிகரிப்பு!

டெல்லி: நாட்டின் மொத்த வரி வசூல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் 34% அதிகரித்து, 27.07 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது. இதுவே 2020 – 2021ம் நிதியாண்டில் 20.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது நிறுவன வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி வரி வசூல் உள்ளிட்ட பல வரிகளும் சேர்த்து மொத்தம் அரசின் இலக்கினை கிட்டதட்ட அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசு 22.17 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயம் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது. இது கடந்த 23 … Read more

BB Ultimate – 69: இறுதிக்கட்டத்தில் போட்டி; பைனலுக்குத் தயாரான போட்டியாளர்கள்; அந்த ஒருவர் யார்?

ஜூலியின் எலிமினேஷனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் நான்கு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாலா, நிரூப், தாமரை மற்றும் ரம்யா. இதில் வெற்றிக் கோப்பையை பறிக்கப் போகிறவர் யார்? அது பாலாதான் என்கிற அழுத்தமான கணிப்பு பரவலாக உலவினாலும் கடைசி நேரத்தில் எதுவும் மாறலாம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற மேஜிக், பார்வையாளர்கள் தரப்பிலிருந்துகூட நிகழலாம். ‘சக மனிதர்களை சகித்துக்கொள்வது, ஒருவரை நிறை, குறையோடு ஏற்றுக்கொள்வது, முகமூடி இல்லாமல் இயன்ற வரை நேர்மையாக இருப்பது, புறணி பேசாதது, போன்றவைதான் பிக் பாஸ் … Read more

ஏலியன்களால் கர்ப்பமான பெண்! அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு

ஏலியனுடன் உறவு கொண்டதன் காரணமாக பெண்ணொருவர் கர்ப்பமானார் என அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பெறப்பட்டது. UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் தொடர்பான ஆவணங்களையே அமெரிக்கப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பல சாட்சிகள் அளித்த தகவலின்படி பல UFOs மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப்பயிற்சி – முழுவிவரம்

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப் பயிற்சி, மற்றும் வீடு அற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை, 2022-23ஆம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் வரி விதிப்பு … Read more

அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் – இந்தியா கொடுத்த கடன் பணமும் தீர்ந்ததால் இலங்கை திணறல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து … Read more

அந்தமான் பகுதிகளில் விசைப்படகில் போதை பொருள் கடத்தி வந்த 13 பேர் கைது

சென்னை: அந்தமான் பகுதிகளில் விசைப்படகில் போதை பொருள் கடத்தி வந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் படகில் போதைப்பொருட்களுடன் வந்த 13 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை காசிமேடு அழைத்து வந்தனர். காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் வைத்து 13 பேரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பெங்களூரில் ம.ஜ.த., போராட்டம்| Dinamalar

பெங்களூரு : அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ம.ஜ.த.,வில் பெங்களூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை வாசி உயர்வை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில், முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.அப்போது அவர் பேசியதாவது:முதலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பின் சமையல் காஸ் விலை உயர்ந்தது. அதன் … Read more