கௌதம் அதானி தடாலடி வளர்ச்சி.. முகேஷ் அம்பானி ஷாக்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய வர்த்தக முடிவில் 116.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் பல பில்லியனர்களை ஓரம்கட்டிவிட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். கௌதம் அதானியின் திடீர் வளர்ச்சி பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் … Read more

`ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிக்க தகுதி இல்லை' – உயர் நீதிமன்றம்

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.  Chennai HighCourt “ஆன்லைனில் படிக்கும்போது மாணவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!” – மோடி அறிவுரை இந்நிலையில், ஊதிய உயர்வு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த  நீதிபதி கிருஷ்ணகுமார், “ஆசிரியர் தகுதித் தேர்வில் … Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்

தமிழகத்தில் கள்ளத்தொடர்பால் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (34) கொத்தனார். இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை, மற்றும் ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு … Read more

ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

சென்னை: ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை, தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு- ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாய்

நாகர்கோவில்: மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர். நேற்று காலை வழக்கம்போல் ஜெகதீஸ் வேலைக்கு சென்றார். வீட்டில் கார்த்திகா குழந்தைகளுடன் இருந்தார். மாலையில் மகன் சரணுக்கு உடல்நிலை சரியில்லை என்று கணவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார். பதட்டமடைந்த ஜெகதீஷ் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது குழந்தை … Read more

பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: பாக். தேர்தல் ஆணையம் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய ஏழு மாதங்கள் தேவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது தேசிய தேர்வு முகமை. இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், … Read more

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்!" – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துச் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பேரிக்காய் கிலோ 1500-க்கு விற்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த … Read more

ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவில்லை! பிரபல ஐரோப்பிய நாடு அதிரடி

   ரஷ்யா மீதான எரிசக்தி தடைகளுக்கான பரிந்துறைகளை நாடு ஆதரிக்கவில்லை என்று ஹங்கேரியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. இதனிடையே, ரஷ்ய நிலக்கரி மீதான பரிந்துறைக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்கும் பணியில் … Read more

தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழக மின்துறை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு … Read more