ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 விமானங்கள் புறப்பாடு தலங்களாக இருந்து வந்தது. பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் அவை 10ஆக குறைக்கப்பட்டது. இதில் சென்னையும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் … Read more

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

புதுடெல்லி: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் தனது பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார். இதையும் படியுங்கள்…செல்வாக்கில் … Read more

ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 4.5 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,109 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,33,067 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,213 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,00,002 ஆனது. தற்போது 11,492 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more

‘அந்த’ படத்தை பார்க்க 1 மணிநேரத்திற்கு ரூ.1500 சம்பளம்.. இப்படியும் ஒரு வேலையா?

வேடிக்கையான, விநோதமான பல வேலைவாய்ப்புகளை நாம் கேட்டு இருக்கோம், சமீபத்தில் தூங்குவதற்குச் சம்பளம் கொடுத்து ஊழியர்களைத் தேர்வு செய்வதாக ஒரு முன்னணி பெட் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் இப்போது பெட்பைபிள் என்ற ஒரு நிறுவனம் இதுவரையில் யாரும் அறிவிக்காத வகையில் ஒரு வேலைவாய்ப்பையும், சம்பளத்தையும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தி தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. 20 டாலர் சம்பளம் பெட்பைபிள் என்னும் நிறுவனம் ஆபாச படம் பார்ப்பதற்காக ஒருவரைத் தேடி வருவதாகவும், … Read more

`போனால் கடலோடு… தப்பினால் வேறெங்காவது போவோம் என வந்தோம்' -இலங்கையிலிருந்து அகதியாக வந்த பெண் வேதனை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால். அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்து, சாமான்ய மக்கள் வாழ வழியின்றி மற்ற நாடுகளுக்கு கடல் வழியாக தப்பிச்சென்று அகதிகளாக நுழைந்து வருகின்றனர். அதன்படி ஏற்கெனவே இலங்கையிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் கடந்த மாதம் கள்ளப் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் அகதிகள் நுழைவதை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையின் அதி தீவிர … Read more

பிரித்தானிய ஆண்கள் சிலர் கொடுக்கும் தொந்தரவால் உக்ரைன் இளம் பெண் அகதிகள் எடுத்துள்ள முடிவு

உக்ரைனிலிருந்து தப்பி வரும் இளம் பெண் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தங்கள் வீடுகளில் இடம் கொடுக்க வரும் பிரித்தானிய ஆண்கள் சிலர், அவர்களிடம் பாலியல் ரீதியான பதிலுதவியை எதிர்பார்ப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. உக்ரைனில் போருக்குத் தப்பி பிரித்தானியா வரும் அகதிகளுக்கு உதவும் நோக்கில் பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளில் கூடுதலாக உள்ள அறையை உக்ரைன் அகதிகளுக்குக் கொடுக்கலாம். அதற்காக அந்த பிரித்தானியர்களுக்கு ஒரு சிறு நிதி உதவியையும் … Read more

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், 25,500 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர். அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும்,  விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் … Read more

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் எழிலன் (தி.மு.க.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- … Read more

ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பது ஒன்றிய அரசின் தந்திரம்: வெங்கடேசன் எம்.பி.

மதுரை: அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே என வெங்கடேசன் எம்.பி. ட்விட் செய்துள்ளார். ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம் என குறிப்பிட்டார். மேலும் தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.