இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..!

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் இந்தக் கொரோனா காலத்தில் எந்த அளவிற்குச் சரிவடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் பணக்காரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதை ஹூரன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை காட்டுகிறது. உலகளவில் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர சந்தை குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஹூரன் இந்த முறை இந்திய பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து சூப்பரான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் … Read more

சென்னை: வழக்கம்போல் மந்தம்… காத்தாடும் வாக்குப்பதிவு மையங்கள்! – 1 மணி நிலவரம் என்ன?!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். வாக்குப்பதிவு மையம் மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை … Read more

பிரித்தானியாவில் தங்க விசா ரத்து: ரஷ்யா உட்பட பல நாட்டு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பிரித்தானியாவில் முதலீட்டார்களுக்கு வழங்கப்படும் தங்க விசா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என உள்விவகாரத்துறை செயலர் ப்ரிட்டி படேல் அறிவித்துள்ளார். இந்த தங்க விசா மூலம் பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் பிரித்தானியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த தங்க விசா மூலம் இந்தியா சீனா மற்றும் ரஷ்யா போன்ற பல நாடுகளை சேர்ந்த பல பணக்கார முதலீட்டாளர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்கி வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு; சென்னையில் 17.88%

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் சென்னை உள்பட  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சென்னை உள்பட … Read more

நவீன இந்தியாவின் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கோண்டா: உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது: நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சீனாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்டதாக அவர் ( ராகுல் காந்தி) கூறினார். அவர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை படிக்கவில்லை, குறைந்தபட்சம் நவீன இந்தியாவின் வரலாற்றையாவது படிக்க வேண்டும். சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை  பாகிஸ்தான், சீனாவிடம் ஒப்படைத்த போது  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.  … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணிக்கு 3.96 சதவீதம், 11 மணிக்கு 17.88 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் 1 மணிக்கு 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் மந்தமான வாக்குகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

குரங்குகள் சேட்டை: 34 கேமராக்கள் நாசம்| Dinamalar

பிலிபிட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. இதில், பிலிபிட் உள்ளிட்ட சில மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்நிலையில், பிலிபிட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 34 கண்காணிப்பு கேமராக்கள் சேதம் அடைந்திருந்தன. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாசவேலையை, அரசியல் கட்சியினர் யாரேனும் செய்திருப்பர் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், குரங்குகளின் சேட்டை என்பது விசாரணையில் தெரியவந்தது. … Read more

நடிகை சன்னிலியோனின் பான் எண் மூலம் கடன் பெற்று மோசடி

புது டெல்லி, தானி கடன்கள் மற்றும் சேவைகள் என்னும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வழங்கி வருகிறது. மேலும் இதில் கடன் பெற பான் கார்டு மற்றும் முகவரி சான்று மூலம் உடனடியாக பணம் பெறலாம் என தனது விளம்பரத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் சில மோசடிகாரர்கள் நடிகை சன்னிலியோன் … Read more

சென்னை – திருச்சி – மதுரைக்கு ஜாக்பாட்.. பாரத் பெட்ரோலியம் சொன்ன குட்நியூஸ்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வரும் நிலையில், எரிபொருள் விற்பனை நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அதிகரிக்கத் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது. தற்போது நாட்டின் முன்னணி பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை 109% உயர்வு.. டெஸ்லா, டாடா-வின் நிலை என்ன தெரியுமா..?! எலக்டரிக் வாகனங்கள் … Read more

விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் ட்ரெண்டி ஐடியா!

நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும், ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு என சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை’. புஷ்பா `ஊ சொல்றியா’ சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா’வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது? `புஷ்பா’ படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு … Read more