திருமலை மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆய்வு

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார். கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் … Read more

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும். இந்​தியா … Read more

அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக-வின் வினய் கட்டியார் அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: உ.பி. அயோத்​தி​யில் இருந்து 3 முறை எம்​.பி.​யாக இருந்​தவர் பாஜக மூத்த தலை​வர் வினய் கட்​டி​யார். அயோத்தி ராமர் கோயி​லில் தரிசனம் செய்த அவர் செய்​தி​யாளர் கூட்​டத்​தில் முஸ்​லிம்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் பேசி​யுள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “அயோத்​தி​யில் வசிக்​கும் முஸ்​லிம்​களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்​லை. அவர்​கள் விரை​வில் வெளி​யேற வேண்​டும். அண்டை மாவட்​டங்​களான கோண்டா மற்​றும் பஸ்​திக்கு செல்ல வேண்​டும். அப்​போது​தான் அயோத்​தி​யில் இந்​துக்​கள் முழு உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாடு​வோம். பாபர் … Read more

வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் … Read more

திருப்பதி | சிறையில் இருந்தபடியே 7 பட்டங்கள் பெற்ற கைதி

திருப்​பதி: திருப்பதி மாவட்​டம், ஏர்​பேடு மண்​டலம், செங்​காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ஜி. யுகந்​தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்​டில் இண்​டர்​மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்​டிருந்​த​போது, ஒரு சிறு​வனை கடத்தி கொலை செய்த வழக்​கில் அவருக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து யுகந்​தர், கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சிறை​ அதி​காரி​களின் உதவியுடன், ஹைத​ரா​பாத்​தில் உள்ள பி.ஆர். அம்​பேத்கர் தொலை​தூர கல்வி பல்​கலைக்​கழகத்​தில் படித்து அடுத்​தடுத்து 4 பட்​டப் படிப்​பு​களை அவர் நிறைவு … Read more

லடாக் நிலவரம் | சோனம் வாங்சுக் ஜோத்பூர் சிறைக்கு மாற்றம்: லே நகரில் 4-வது நாளாக தொடரும் ஊரடங்கு!

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லடாக்கின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங்சுக் லடாக்கின் பாதுகாப்பிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதியை விரும்பும் லடாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது முக்கியம். இதை … Read more

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு

ஜார்சுகுடா: “காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களை கொள்ளையடிக்கிறார்கள். மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல நின்று தடுக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ காங்கிரஸ் என் மீது அனைத்து வகையான அவதூறுகளையும் வீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை நாங்கள் குறைத்தபோது, … Read more

நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஜார்சுகுடா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி … Read more

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சொத்துகள் முடக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாரிக் அகமது மீர் என்பவரின் அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று முன்தினம் முடக்கியது. ஷோபியன் மாவட்டம், மால்தேரா கிராமத்தில் 780 சதுர அடி நிலத்தில் உள்ள கான்கிரீட் வீடு, ஒரு பழத்தோட்டம் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் தீவிரவாதி சையத் நவீத் முஷ்டாக்கின் கூட்டாளியான தாரிக் அகமது மீர் கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது … Read more

பதாகை வைத்ததால் சர்ச்சை: முஸ்லிம் மதத்தலைவர் கைது – 1,700 பேர் மீது வழக்குகள் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது. இதுதொடர்​பாக உ.பி. போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்​கையை (எப்​ஐஆர்) பதிவு செய்​தனர். இதைக் கண்​டித்து முஸ்​லிம்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்​பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி​யில் நேற்று முன்​தினம் வெள்​ளிக்​கிழமை … Read more