கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் முக்கிய பெயர்கள் மிஸ்ஸிங்!

கர்நாடக தேர்தல்: கர்நாடகாவில்  ஆட்சியைப் பிடிக்க பாஜகவில் இருந்து விலகிய துணை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட 40 நட்சத்திர பிரச்சாரகர்களை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது

லண்டனில் உள்ள இந்திய தூதரக வன்முறை வழக்கு – என்ஐஏ விசாரணை தொடங்கியது

புதுடெல்லி: லண்டனில் இந்திய தூதரகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்தமார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில்பிரிவினைவாதி அம்ரித் பால் சிங்குக்கு எதிரான காவல் துறை நடவடிக்கையை கண்டித்து இப்போராட்டம் நடந்தது.அப்போது தூதரகத்தில் பறந்த தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் கீழே இறக்கி அவமரியாதை செய்தனர். தூதரகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 அதிகாரிகள் … Read more

மிசோரம்: ‘நாங்க தான் நம்பர் 1’.. எதுலனு தெரியுமா மக்களே.?

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பெற்றுள்ளது. இது குறித்து குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமான மிசோரம், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மாணவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப உறவுகள், வேலை தொடர்பான பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு மனப்பாண்மை, மதம் ஆகிய அளவீடுகளின் படி மகிழ்ச்சி சதவிகிதம் … Read more

ஹெலிகாப்டரில் பணம் எடுத்து சென்றாரா? – அண்ணாமலையிடம் அதிகாரிகள் சோதனை

உடுப்பி: கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலை, ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அண்ணாமலையிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை, மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சரும், … Read more

142.86 கோடி மக்கள்தொகை… சீனாவை முந்திய இந்தியா… உலகில் நம்பர் ஒன் இனி நாம் தான்!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தொடர்ந்து நீடித்து வந்தது. இரண்டாம் இடத்தில் இந்தியா இருந்தது. இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள்தொகையின் வேகத்தை கணக்கிட்டால் எப்போது வேண்டுமானாலும் சீனாவை முந்திவிடும் எனக் கருதப்பட்டது. அந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. சீனாவில் அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக 1980களில் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. மக்கள்தொகை அதிகரிப்பு இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மக்கள்தொகை குறைய ஆரம்பித்தது. … Read more

உஷார்! தீவிரமடைய உள்ள வெப்பக்காற்று!!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்று தீவிரமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல மாநிலங்களில் கடந்த வாரம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பக்காற்று தீவிரமாக வீசி வெப்பநிலை உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வானிலை மையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் … Read more

ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுக்கு வருவதை ஏற்க மாட்டோம்: சிவ சேனா

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைய முயன்றால், கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேறிவிடும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்ட்டிர முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியில் இருந்து பிரிந்து வந்து பாஜகவோ கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், மும்பையில் … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: ‘ஒரு சீட்டு கூட ஜெயிக்க வக்கில்ல’.. அண்ணாமலைக்கு கீழ நாங்க வேலை செய்யணுமா.!

காங்கிரஸ் ரிட்டர்ன் பாஜக தலைவர் கர்நாடகா தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் இணைப் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்ததற்காக, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கர்நாடகா முன்னாள் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவை கடுமையாக சாடினார். “என்னைப் போல் 6-7 முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் ஏராளம். ஆனால், ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத ஒருவர், எங்கள் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று ஷெட்டர் கூறினார். கர்நாடகாவின் முக்கிய பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜகதீஷ் ஷெட்டரை, 1994 … Read more

கர்நாடக தேர்தல் சுவாரஸ்யம்: தொகுதி மக்களிடம் சில்லறை பெற்று வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை

யத்கிரி: கர்நாடகாவின் யத்கிரி தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தொகுதி மக்களிடம் சில்லறைகளைப் பெற்று அதைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகாவின் வடமேற்கே உள்ள சட்டமன்றத் தொகுதி யத்கிரி. இந்தத் தொகுதியைச் சேர்ந்த இளைஞரான யங்கப்பா, தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து, தொகுதி மக்களிடம் சில்லறையாக பணம் சேகரித்துள்ளார். அவர்கள் கொடுத்த சில்லறைகளைக் கொண்டு, வேட்புமனு தாக்கலின்போது செலுத்த வேண்டிய வைப்புத் தொகையான ரூ. 10 ஆயிரத்தை யங்கப்பா செலுத்தி உள்ளார். தேர்தல் அதிகாரியிடம், … Read more

‘அவரு வந்தா நாங்க போய்டுவோம்’.. பாஜகவுடன் மோதும் முதல்வர்.. மகாராஷ்டிரா மங்காத்தா ஸ்டார்ட்.!

அஜித் பவாரை பாஜக சேர்த்துக் கொண்டால், கூட்டணியில் இருக்க மாட்டோம் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. முக்கோண அரசியல் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. முன்னதாக ஒன்றுபட்ட சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், பாஜக கூட்டணியிலும் இருந்தது. இத்தகைய சூழலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த … Read more