சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….!

ஆந்திராவில் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் அதிவேகமாக வந்து மோதிய கார் சுக்குநூறாக நொறுங்கியதில், ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயவாடாவைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் 8 பேர், ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது. காரை ஓட்டி வந்தவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், நல்லஜார்லா என்ற இடத்தின் அருகே நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் … Read more

Cyclone Biparjoy | அத்தியாவசிய சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: “பிப்பர்ஜாய் புயலால் பாதிப்பக்கபடும் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை மீட்பு படையினர் உறுதி செய்துள்ளார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரபிக் கடலில் அதி தீவிரம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல் வரும் வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை அதிகம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் புயலினால் இந்தியப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த … Read more

Ola, Uber மற்றும் Rapido பைக்-டாக்சிகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் முக்கியமாக பெரு நகரங்களில் கார், ஆட்டோ ஆகியவற்றின் டாக்ஸி சேவைகளை கடந்து பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பைக் டாக்ஸி வேலைகள்  வரப்பிரசாதமாக உள்ளது.

ம.பி.யில் நர்மதை ஆற்றில் பூஜைகள் செய்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தொடங்கினார். மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜபல்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நர்மதைக் கரையில் பிரியங்கா வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக கூறினார். மக்களை … Read more

பிரச்சினை வரும்போது நாட்டை நம்பலாம் – ஜெய்சங்கர் பெருமிதம்

வாரணாசி: இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த கருத்தரங்கம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காந்தி அத்யாயன் பீடம் சபாவில் நேற்று நடந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, ‘‘பிரதமர் மோடி அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் நான் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். பிரச்சினைகளை சந்திக்கும் போதெல்லாம் நாம் நமது நாட்டை நம்பலாம். உக்ரைனில் பிரச்சினை ஏற்பட்ட போது, அங்கிருந்த இந்தியர்கள் தாய் நாடு அழைத்து வரப்பட்டனர். சூடானில் பிரச்சினை … Read more

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்துக் கணிப்பு முடிவு! அடேங்கப்பா இவ்வளவு வித்தியாசமா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முன்னெப்போதையும் விட பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 2014, 2019 என தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடித்த பாஜக மீண்டும் ஆட்சியில் அமர காய் நகர்த்தி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. தொடர்ந்து இருமுறை தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் இந்த முறை விட்டுவிடக்கூடாது என களப் பணியாற்றுகிறது. ராகுல் காந்தியின் ‘இந்திய … Read more

கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்தது – முழு விவரம்

India’s Retail Inflation: இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் மே மாதத்தில் 4.25 சதவீதமாகக் குறைந்து. 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 6 சதவீதத்தின் கீழ் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.

பிபர்ஜோய் புயல் : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு

அதி தீவிர பிபோர்ஜோய் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். குஜராத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தயார் நிலை குறித்தும் பிரதமர் அவர்களிடம் கேட்டறிந்தார். புயலால் மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கும் … Read more

டெல்லியில் பைக் டாக்ஸிகளுக்கு அரசு விதித்த தடை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிகளுக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. டெல்லி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ரேபிடோ, உபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளைத் தடை செய்வதாக அறிவித்தது. தடையை மீறினால் ரூ.10,000 அபராதமும், ஓராண்டு சிறையும் விதிக்கப்படும் என்று கெடுபிடி விதித்தது. பைக் டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் … Read more

பிபோர்ஜாய் புயல் எதிரொலி: இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு மத்திய அரபிக் கடலில் அதிதீவிர புயலான பிபோர்ஜாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளை பாதிக்கலாம். குறிப்பாக ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு சௌராஷ்டிரா பகுதி முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் பாவ் நகர், மஹுவா, வெராவல் முதல் போர்பந்தர் பகுதி, ஓகா முதல் ஹாபா வரை மற்றும் … Read more