தீவிரமடையும் ‘பிப்பர்ஜாய்’ – உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு; கட்ச் கடற்கரைப் பகுதிகளில் 144 தடை

புதுடெல்லி: பிப்பர்ஜாய் புயல் மிகவும் அதிதீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், இன்று (ஜூன் 12) பிற்பகலில் அது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் கட்ச் கடற்கரைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்பர்ஜாய் அதிதீவிரப் புயல், குஜராத்தின் கட்ச் பகுதிக்கும் பாகிஸ்தானின் கராச்சி பகுதிக்கும் இடையில் வியாழக்கிழமை (ஜூன் 15) கரையைக் கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா … Read more

கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை

புதுடெல்லி: கர்ப்பிணி தாய்மார்கள் பிறக்கப்போகும் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் என்ற அமைப்பின் ’கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை காணொலி மூலம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: கிராமங்களில், தாய்மார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் நல்ல கதைகளையும் படிப்பதை … Read more

3 ஆண்டுகளில் இல்லாதது.. திருப்பதியில் நடந்த அதிசயம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்றும் நாள் கணக்கில் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். அச்சச்சோ… பாபா வங்கா சொன்னது உண்மையாக போகுதா? குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலை … Read more

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: புனேவைச் சேர்ந்தவர் கைது 

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக புனேவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கொலை மிரட்டல் குற்றம் சாட்டப்படுள்ள சாகர் பார்வே தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா ஃபீடிங் மற்றும் அனாலிட்டிக் பிரிவில் வேலை செய்துவருகிறார். இந்தக் கொலை மிரட்டல் வழக்கினை விசாரித்து வந்த மும்பை போலீஸார் பார்வேவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை … Read more

திருப்பதி அருகே பயணிகள் வேனும், பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயணிகள் வேனும், பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு பக்தர்கள் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து அஞ்சேரம்மா கோயில் நோக்கி பக்தர்கள் குழுவினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது புத்தூரில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பால் வேன், வடமலைப் பேட்டை என்ற இடத்தில் பக்தர்கள் வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்..  Source link

பனாரஸ் இந்து பல்கலை.யில் மொழிகள் ஆய்வுக்கூடம் திறப்பு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழக அரசின் அதிகாரிகள் ஜுன் 9, 10-ல் கள ஆய்வு செய்தனர். அப்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யு) தமிழ் மொழி ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து, அந்நகரில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் தமிழக அரசு அமைத்த நினைவகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். நாட்டின் பழம்பெரும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பது பிஎச்யு. இதன் இந்திய மொழிகள் துறையின் தமிழ் பிரிவிற்கு கடந்த கால அதிமுக அரசின் சார்பில் 2019-20 பட்ஜெட்டில் மூன்று திட்டங்கள் … Read more

திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரிலும் போகலாம்… இந்த சேவை தெரியுமா?

திருப்பதி கோவிலுக்குகான ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியியுள்ளது பிளேட் இந்தியா நிறுவனம். திருப்பதிதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. இதேபோல் திருப்பதிக்கு ரயில் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து கீழ் திருப்பதி வரை போக்குவரத்து சேவை வழங்கப்பட்டாலும், அங்கிருந்து திருமலைக்கு ஆந்திர அரசின் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன.​ அது இல்லை என்றால்.. அப்படி ஒரு உறவே வேண்டாம்… திருமணம் குறித்து தடாலடியாக பேசிய அஞ்சலி!​லட்சக்கணக்கான பக்தர்கள்மேலும் … Read more

காவல் அதிகாரியே கொள்ளையராக மாறிய சம்பவம்… பணி நீக்கம் செய்த மாநில அரசு!

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், “பேய் உலவுவது”  தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்களை உத்தரபிரதேச அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

ராஜஸ்தானில் 2,413 ஜோடிக்கு திருமணம் செய்து சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஏழை மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த 2,413 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் மாலை மாற்றி பின்னர் அவரவர் மரபுப்படி புரோகிதர்கள் அல்லது தங்கள் மதகுரு மார்கள் மூலம் திருமணம் செய்து கொண்டனர். திருமண சடங்குகள் 6 மணி நேரத்தில் … Read more

மத்திய அரசு அவசர சட்டம் – கேஜ்ரிவால் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ராம் லீலா மைதா னத்தில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது டெல்லி மக்களை அவமதிப்பது ஆகும். டெல்லியில் இனி சர்வாதிகார ஆட்சிதான். ஆளுநர்தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர். தேர்தலில் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் மத்திய அரசுதான் … Read more