இன்று முதல் 3 நாட்களுக்கு ஜி 20அமைச்சர்கள் மாநாடு..! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாட்டு அமைச்சர்கள் வாரணாசி வருகை

ஜி 20 அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் வாரணாசிக்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். உலகில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை, கடன் நெருக்கடிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத சூழல் போன்ற பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.  … Read more

ஏஐ கேமரா பொருத்தப்பட்ட பிறகு கேரளாவில் விபத்து குறைந்துள்ளது: போக்குவரத்து அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ‘பாதுகாப்பான கேரளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரூ.232 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஏஐ கேமராக்கள் கடந்த 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில், ஏஐ கேமரா செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

பிபோர்ஜாய்: அதிதீவிர புயலாக வலுபெற்றது… ஸ்பீடு எகிறிடுச்சு… டார்கெட் இதுதான்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான புயலுக்கு பிபோர்ஜாய் எனப் பெயரிடப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வந்தது. இன்று காலை தீவிர புயலாக இருந்த பிபோர்ஜாய் சற்றுமுன் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் வேகம் சற்றே அதிகரித்திருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், இன்று அதிகாலை … Read more

பிபார்ஜாய் 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாறும்! IMD எச்சரிக்கை!

பிபர்ஜாய் புயல் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமான என்ஜினில் பழுது.. டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கம்..!

டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம் என்ஜின் பழுதானதால் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ321 நியோ என்ற விமானம் 230 பயணிகளுடன் நேற்று இரவு 9.46க்குப் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரவு 10.39 மணிக்கு மீண்டும் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.   Source link

காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு – மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை 62 நாள்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை யாத்திரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. பனிலிங்கத்தைத் … Read more

ஃப்ரீ ஃபையர் கேம் விளையாடி தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.36 லட்சத்தை காலிசெய்த சிறுவன்..!

ஆன்லைன் விளையாட்டு மீதான மோகத்தால் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளான்… அம்பேர்பேட் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது தாத்தாவின் செல்போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடியுள்ளான். கேமில் அடுத்தடுத்த லெவல் செல்வதற்கு ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக சிறிதுசிறிதாக முதலில் ஆயிரத்து 500 ரூபாய் என தொடங்கி பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலவழிக்க தொடங்கியுள்ளான்.இப்படி வீட்டுக்கே தெரியாமல் … Read more

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு | மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு – அமைதி குழு அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சற்று ஓய்ந்திருந்த நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி இன மக்கள் 53 சதவீதமும், நாகா, குகி இனத்தவர்கள் 40 சதவீதமும் உள்ளனர். இதில், மேதேயி மக்கள், பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இன மக்கள் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் … Read more

விபத்து நிகழ்ந்த ரயில் நிலையத்தை மூடி சீல் வைத்த சிபிஐ அதிகாரிகள்.. எந்த ரயிலும் நிற்கக்கூடாது என உத்தரவு..!

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள், விபத்து நடைபெற்ற பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்தனர். அங்கு எந்த ரயிலும் நிற்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தின் குறிப்பேடு உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் சிஸ்டம் சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாலசோர் மாவட்டத்தில் அனைத்து ரயில் தடங்களும் சீரமைக்கப்பட்டதாகவும் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் … Read more

இந்திய கடற்படையின் பிரம்மாண்ட போர் பயிற்சி: 2 போர்க் கப்பல்கள், 35 போர் விமானங்கள் பங்கேற்பு

மும்பை: இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 35-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்றன. அண்மை காலமாக இந்திய பெருங்கடலில் கால்பதிக்க சீனா தீவிர முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், மியான்மர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் மறைமுகமாக சீனாவின் கடற்படைத் தளங்களை அமைக்க அந்த நாடு தீவிரம் காட்டி வருகிறது. சீனாவின் சதித் திட்டங்களை … Read more