தமிழகத்தைச் சேர்ந்த டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

கொல்கத்தா: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த டிஎஸ் சுப்பையா – நளினி தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பிஎல் சட்டப் படிப்பும் முடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய சிவஞானம், கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2011-ம் ஆண்டு நிரந்தர … Read more

பொண்டாட்டிக்கு தெரியாமல் இளம்பெண்ணுடன் அவுட்டிங்… போட்டோவோடு மாட்டிவிட்ட போலீஸ்!

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரித்துள்ளதை கேள்வி பட்டு வருகிறோம். கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் பலபேர் செல்போனில் மறைமுக உறவில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த கணவன் போக்குவரத்து போலீசாரால் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த 32 வயதான அந்த நபர் கடந்த மாதம் 25 ஆம் தேதி இளம்பெண்ணுடன் இரு சக்கர … Read more

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தொடரும் முயற்சி.. சரத் பவாரை மும்பையில் சந்தித்தார் நிதிஷ்குமார்..

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். மும்பையில் சரத்பவாரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். முன்னதாக, மகராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவையும் நிதிஷ் குமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் நாட்டை சரியான … Read more

வெடித்து சிதறிய செல்போன்… உயிர் தப்பித்த இளைஞர்..!

கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஹரிஸ் ரகுமான் (23). இவர், வழக்கம் போல் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, திடீரென தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது. இதனால், ஜீன்ஸ் பேண்டில் தீ பிடித்தது. உடனடியாக தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென வெடித்து சிதறிய செல்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்று … Read more

யாருக்கு எப்போ வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மேடையில் ஓரத்தில் உட்காருகிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார். இதனை தொடர்ந்து … Read more

வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு உணவகம் அதிரடி: மை இட்ட விரலை காட்டினால் தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசம்

பெங்களூரு: பெங்களூருவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகம் வாக்கை செலுத்தியவர்களுக்கு தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசமாக வழங்கியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஒட்டுமொத்த கர்நாடகத்தோடு ஒப்பிடுகையில், பெங்களூருவில் குறைந்த அளவே வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது. இந்நிலையில் பெங்களூரு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு ஹட்சன் சதுக்கத்தில் உள்ள … Read more

“2047-க்குள் வளர்ந்த, சுயசார்புடைய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோடி

மக்களுக்கு அதிகாரமளிக்கவும் சமூகநீதியை உறுதி செய்யும் ஆதாரமாகவும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் தேசிய தொழில்நுட்ப தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த மற்றும் சுயசார்புடைய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றார். தொழில்நுட்பத்துறையில் உலகத்துக்கே தலைமை வகிக்க தேவையான அனைத்து திசைகளிலும் இந்தியா தற்போது முன்னேறி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்பம் முக்கியம் … Read more

சிவசேனா வழக்கு | உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக்க முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது என்று 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை பெரிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. சிவசேனா பிளவு தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், நீதிபதிகள் எம்ஆர் ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி, … Read more

மாநில அரசுக்கே நிர்வாக அதிகாரம்… மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது… குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் என இருவரில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுந்தது. உச்ச நீதிமன்ற அமர்வு இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் … Read more

ஹரியானாவில் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலான சொகுசு கார்..!

ஹரியானா மாநிலம் குருகிராமில், கோல்ஃப் மைதான சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், கார், மரத்தில் மோதுவதற்கு முன்னர் டிவைடரிலும் மோதியது. காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  Source link