மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், மாநில முதல்வர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், … Read more

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா… பெட்ரோலிய துறை அமைச்சர் கூறுவது என்ன..!!

பெட்ரோல் டீசல் விலை: எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். சூரத்தை சேர்ந்த சுமீரா என்ற பெண் உள்ளிட்ட அந்த 4 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலமாக ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த போலீசார், அவர்கள் தங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். … Read more

9 ஆண்டு கால மோடி ஆட்சியில் ரூ.100 லட்சம் கோடி கடன்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மோடி பதவியேற்பதற்கு முன் நாட்டின் கடன் … Read more

மும்பையில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. முக்கிய கும்பலை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது

மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ மெஃபெட்ரான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. முக்கிய போதைபொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாயும், 187 கிராம் எடையிலான தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேர் மீதும், போதை மருந்துகள் தடை சட்டம் 1985-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு போதை … Read more

“எங்கள் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்” – சாக்‌ஷி மாலிக் திட்டவட்டம்

புதுடெல்லி: “தற்போது நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்” என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் ஹரியானா மாநிலத்தின் சோனிபட்டில் சனிக்கிழமை காப் (Khap) தலைவர்களுடன் மகாபஞ்சாயத்து நடத்தினர். மல்யுத்த வீராங்கனை, வீரர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் … Read more

அவளுடன் நெருக்கமாக இருந்ததே இல்லை… எனக்கு ஹெச்ஐவி – மும்பை காதலி கொலையில் திடுக் தகவல்

Mumbai Mira Road Murder: தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கவில்லை என உயிரிழந்த சரஸ்வதி, தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என விசாரணையில் மனோஜ் தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு தொடர்ந்து பாடுபடுகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பின் மூலம் அவர்கள் உணர்த்தி வருகின்றனர். நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு … Read more

பிபர்ஜாய் புயலுக்கு கண்ணு வந்துருச்சு… தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மேற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக அம்மாநிலத்தின் ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெற்கு குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை … Read more

கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா? – மத்திய அமைச்சருக்கு கபில் சிபல் கண்டிப்பு

புதுடெல்லி: “மகாத்மா காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா?” என்று மத்திய அமைச்சருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், “கோட்சே இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்றும், முகலாயர்களைப் போல் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவரில்லை என்றும், இந்தியாவில் பிறந்தவர் என்றும் கூறி இருக்கிறீர்கள். உங்களின் (மத்திய அமைச்சர் … Read more