ஹைதராபாத்தில் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்துமாவுக்கு மீன் பிரசாதம் விநியோகம்

ஹைதராபாத்: ஹைதராபாத் நாம்பல்லி மைதானத்தில், நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் மருந்து பிரசாத விநியோகத்தை தெலங்கானா மாநில கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் தொடங்கி வைத்தார். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவதை, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதினி குடும்பத்தார் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இது ‘மீன் பிரசாதம்’ என அழைக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக 3 ஆண்டு இடைவெளிக்குப்பின் இந்த மீன் பிரசாத நிகழ்ச்சி ஹைதராபாத் நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் … Read more

ஹைதரபாத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ‘மீன் மருந்து திருவிழா’.. மீன்களை உயிரோடு விழுங்கிய மக்கள்

ஆஸ்துமா நோயாளிகளை உயிருள்ள மீன்களை விழுங்கச்செய்யும் மீன் மருந்து திருவிழா ஹைதரபாத்தில் நடைபெற்றது. பாரம்பரியமிக்க பத்தினி குடும்பத்தினர், 177 ஆண்டுகளாக இந்த மீன் மருந்து திருவிழாவை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் 3 ஆண்டு இடைவெளிக்கு பின் நடைபெற்ற விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். மூலிகை மருந்து தடவப்பட்ட மீனை அவர்கள் விழுங்கவைக்கப்பட்டனர். உணவுக்குழாய் வழியாக துடித்தவாறே செல்லும் மீன் நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை. Source … Read more

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மோடி அரசு மாற்றியமைத்துள்ளது – உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில், நாட்டின் சுகாதார கட்டமைப்பை மோடி அரசு மாற்றியமைத்துள்ளது. ஏழைகளுக்கு ஆரம்ப நிலை முதல் மூன்றாம் நிலை வரை ரூ.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை என்ற திட்டம் கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் சுகாதார கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. ஏழைகளுக்கு ஆரம்ப நிலை முதல் மூன்றாம் நிலைவரை ரூ.5 … Read more

மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் தவறாக நடந்தது உண்மை – சர்வதேச நடுவர் ஜக்பீர் சிங்!

மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தவறாக நடந்துகொண்டது உண்மை என சர்வதேச மல்யுத்த போட்டிகளின் நடுவர்களில் ஒருவரான ஜக்பீர் சிங் கூறினார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், மல்யுத்த வீராங்கனைகளிடம் மதுபோதையில் பலமுறை பிரிஜ் பூஷன் அத்துமீறலில் ஈடுபட்டதை தானே கண்ணால் பார்த்திருப்பதாக தெரிவித்தார். அனைத்து குற்றச் சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் மறுத்திருப்பதைப் பற்றி கேட்டதற்கு, திருடன் எப்போதாவது தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வானா என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார். பாலியல் புகார் தொடர்பாக வரும் … Read more

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர் மதமாற்றம் – உ.பி.யில் மவுலானா கைது; முக்கிய குற்றவாளி தலைமறைவு

புதுடெல்லி: வளரிளம் பருவத்தினர் வீடியோ கேம்ஸ் பதிவிறக்கம் செய்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. இச்சூழலை சாதகமாக்கி, சமூகவிரோதிகள் சிலர் ஃபோர்ட் நைட், டிஸ்கார்டு போன்ற பல பெயர்களில் பக்குவமாகப் பேசி அவர்களை மூளைச் சலவை செய்வதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் ஒன்று கடந்த வாரம் முதன்முதலாக உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தின் கவி நகர் காவல் நிலையத்தில் கடந்த மே 30-ம் தேதி ஒருவர் அளித்த புகாரில், தனது மகன் … Read more

மத்தியப் பிரதேசம் | ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

செஹோர்: மத்தியப் பிரதேசம் செஹோர் மாவட்டத்தின் முங்கவலி கிராமத்தில் வயலில் தோண்டப்பட்ட 300 அடி ஆழ ஆள்துளை கிணற்றில், சிரிஸ்தி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த செவ்வாய்கிழமை மாலை 1 மணி அளவில் தவறி விழுந்தது. முதலில் அந்த குழந்தை 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது. அக்குழந்தையை மீட்பதற்காக பல வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அதிர்வு காரணமாக குழந்தை ஆழுதுளை கிணற்றில் 100 அடி தூரம் சென்றது. இதனால் அந்த குழந்தையை உடனடியாக … Read more

மகளின் திருமணத்தை வீட்டிலேயே எளிமையாக நடத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெங்களூரு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார். நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமயிக்கும், பிரதீக் என்ற இளைஞருக்கும் பெங்களூருவில் நேற்று (ஜூன் 8) திருமணம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனின் வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் பங்கேற்பு இல்லாமல் எளிய முறையில் தனது மகளின் திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி உள்ளார். பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி … Read more

டிவி சீரியலால் வந்த வினை… மனைவியை துபாக்கியினால் சுட்ட கணவன்!

டிவி சீரியல் பார்க்கும் தன் மனைவியை, டிவி பார்க்கக் கூடாது என்று கணவர் தடை விதித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

மெய்தேய் மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக மணிப்பூரில் இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்றதன் பேரில் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறத் துவங்கி உள்ளன. மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினர் போல வேடமணிந்து சென்ற … Read more

முதல்வர் அலுவலகம் டு பிரதமர் அலுவலகம் … நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருமகனின் பின்னணி?

பெங்களூரு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் பரகலா வங்கமயிக்கும், பிரதீக் தோஷி என்ற இளைஞருக்கும் பெங்களூருவில் நேற்று (ஜூன் 8) திருமணம் நடைபெற்றது. பெங்களூருவின் ஜெயநகரில் உள்ள நிர்மலா சீதாராமனின் வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விஐபிகள் என யாருமே இதில் பங்கேற்கவில்லை. எளிய முறையில் தனது மகளின் திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி உள்ளார். பிராமண … Read more