ஐயோ பாவம் ..! போக்குவரத்து விதிகளை மீறிய நபருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அந்த நபர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 25-ம் தேதி அந்த நபர் திருவனந்தபுரம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அந்த நபருடன் வேறொரு பெண்ணும் பயணித்துள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க ஏதுவாக அச்சாலையில் போக்குவரத்து துறை சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், … Read more

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்க உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு … Read more

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே தங்கும் விடுதியில் வெடிச்சத்தம்

அமிர்தசரஸ் பொற்கோவிலை ஒட்டிய பகுதிகளில் நள்ளிரவில் வெடிச்சத்தம் பெரும் ஓசையுடன் கேட்டதால் அங்கிருந்த பழமை வாய்ந்த ஸ்ரீ குருராம்தாஸ் நிவாஸ் விடுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி சந்தேகத்திற்குரிய சிலரை சுற்றி வளைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இரவில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களையடுத்து போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.சில தினங்களுக்கு முன்பும் இதே போல் ஒரு வெடிச்சத்தம் கேட்டது. விசாரணைக்குப் பிறகே உண்மைகள் தெரியும் என்று காவல்துறை ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் Source link

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டமன்றத்திற்கு மே மாதம் 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதியுடன் … Read more

கேபினில் தீப்பிடித்து கருகும் வாசனை: திருச்சி – சிங்கப்பூர் விமானம் அவசர தரையிறக்கம்

மும்பை: திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிச் சென்ற இண்டிகோ விமானத்தின் கேபின் பகுதியில் தீப்பிடித்து கருகிய வாசனை வந்ததையடுத்து விமானிகள் இந்தோனேசியாவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தின் கேபின் பகுதியில் தீப்பற்றி எரியும் வாசனை வந்ததையடுத்து, விமானிகள் உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி அருகில் உள்ள இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். … Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜகவை விட காங்கிரஸ் கூடுதலான இடங்களைக் கைப்பற்றலாம் என கணிப்பு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் குறுகிய வித்தியாசம் இருக்கக் கூடும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 122 முதல் 140 இடங்கள்வரை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது. இதே போல் 117 இடங்களை பாஜக கைப்பற்றும் என மற்றொரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், குறுகிய வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலைபெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் … Read more

போலீசார் அசந்த நேரத்தில் பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற போதை ஆசாமி..!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் மருத்துவர் வந்தனா தாஸ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப் (45) என்பவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோல் பயன்படுத்தி பல முறை குத்தி உள்ளார். இதனை கண்ட போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து … Read more

கர்நாடகாவில் 72 சதவீத வாக்குப்பதிவு – போலீஸார், துணை ராணுவ பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது தேர்தல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. சுமார் 72.22 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற‌து. இதில் 2.67 கோடி ஆண்கள், 2.64 கோடி பெண்கள் என 5.31 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மாநிலம் முழுவதும் 58,282வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன‌. தேர்தல் பணியில் 3.51 லட்சம் … Read more

லிங்காயத்து vs ஒக்கலிகா: கர்நாடக தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் தொகுதிகள்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். தேர்தல் என்றாலே சாதி ரீதியிலான வாக்கு வங்கி அரசியலை தவிர்க்க முடியாது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து, ஒக்கலிகா ஆகிய இரண்டும் செல்வாக்கு மிகுந்த சமூகங்களாக காணப்படுகின்றன. கர்நாடக தேர்தல் இதில் லிங்காயத்து சமூகத்தினர் கர்நாடக மக்கள்தொகையில் 17 சதவீதம் … Read more

கர்நாடக தேர்தல் | பகல் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் … Read more