ஒடிஷா ரயில் விபத்து: எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் தவறிழைத்ததால் 288 உயிர்கள் பலி!

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்  என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, ​​அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது. 

ஒடிசா ரயில் விபத்து | பலி எண்ணிக்கை 288 அல்ல 275: தலைமைச் செயலாளர் விளக்கம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு பலி எண்ணிக்கை 288 என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 275 என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கூறுகையில், “நேற்று ரயில்வே துறை பலி எண்ணிக்கை 288 என்று கூறியது. நாங்களும் அதையே பகிர்ந்தோம். இப்போது கணக்கு செய்யப்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 275 என்பது உறுதியாகியுள்ளது. முன்பு ஒரே … Read more

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்த, காயமடைந்த நபர்களின் புகைப்பட விவரங்கள்…. எங்கு, எப்படி பார்ப்பது?

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி மாலையில் நடந்த பயங்கர ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதில் 275 பேர் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்களது உறவினர்களுக்கு ஒடிசா ரயில் விபத்தில் என்ன ஆனது? ஒடிசா ரயில் விபத்து காயமடைந்து எங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்? போன்ற கேள்விகளுடன் இருந்து வருகின்றனர். இவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ரயில்வே மற்றும் ஒடிசா … Read more

விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை

ஒடிசாவில் விபத்திற்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுநருக்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசாவில் நேற்று முன் தினம் நிகழ்ந்த ரயில் விபத்தில் கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் மோஹன்டிக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உதவி ஓட்டுநர் ஹஜாரி பெஹராவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விபத்து நடந்தபோது, சரக்கு … Read more

முக்கிய பாதைக்கு சிக்னல் வழங்கப்பட்டது. ஆனால்..! – திரிணமூல் வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உறுதி செய்யப்படாத ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா ரயில் விபத்து குறித்து இரு ரயில்வே அதிகாரிகள் பேசிக் கொள்ளும் ஆடியோ ஒன்றை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷ் வெளியிட்டிருக்கிறார். அதில் பேசும் அதிகாரிகளில் ஒருவர் தென்கிழக்கு ரயில்வேயின் துணை சிஎஸ்ஓ (போக்குவரத்து) அசோக் அகர்வால் என்று தன்னை குறிப்பிடுக்கிறார். மற்றொவர் யார் என்ற தகவல் அந்த ஆடியோவில் இல்லை. ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் … Read more

ஒடிஷா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிளைம் விதியை தளர்த்திய LIC!

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளைமிற்கான பல விதிகளை தளர்த்தி தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணையும் (022-68276827) வெளியிட்டுள்ளது

‘கவச்’ வந்தாலும் காப்பாற்ற இயலாதாம் இந்த தவறு நிகழ்ந்தால்…. அதிகாரிகள் சொல்லும் ரகசியம்..!

ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, பரவலாக அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் கவச்… இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான RDSO தயாரித்துள்ள, ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் தான், “கவச்”…. ஒரே தண்டவாளத்தில் வரும் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவும், பனிக்காலத்தில் எதிரில் வரும் ரயில்கள் குறித்து எச்சரிக்கவும், ஆபத்துகாலத்தில், அபய குரல் எழுப்பி உதவி கோரும் வகையிலான SoS அமைப்பையும் உள்ளடக்கியது, இந்த கவச் தொழில் நுட்பம் ..! சிக்னல்கள், தண்டவாளங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த … Read more

ஒடிசா ரயில் விபத்திற்கான மூலக் காரணம் தெரிந்தது: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஜூன் 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஞாயிறு) காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “மிக மோசமான இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை முடிவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்வார். விபத்திற்கான காரணம் என்ன? … Read more

சிதறி கிடக்கும் காதல் கடிதங்கள்… இதயத்தை நொறுக்கும் வரிகள்.. ரயில் விபத்தின் மறுபக்க சோகம்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடைமைகள் தண்டவாளத்தில் ரத்த கரையுடன் சிதறி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த காதல் கடிதங்கள் இணையத்தில் வைரலாகி இதயங்களை கனமாக்கியுள்ளது. சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாசூர் அருகே வந்தபோது லூப் பாதையில் இருந்த கூட்ஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் தடம் … Read more

'ரயில் விபத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது' – ரயில்வே அமைச்சர் சொன்னது என்ன?

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.