இது தேவையா ? போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்த மணமகளுக்கு நேர்ந்த விபரீதம்..!!

இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்களுக்கு விரிவான ஸ்டண்ட் செய்யும் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டண்ட் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்பதை சமீபத்திய வீடியோ நிரூபிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மணமகள், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது கையில் இருக்கும் துப்பாக்கி அவரது முகத்திற்கு நேராக வெடித்துவிட்டது. மொத்தம் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரே மேடையில் போஸ் கொடுக்கிறார்கள். தம்பதியர் கையில் இருந்த துப்பாக்கிகளில் ஒன்று எதிர்பாராத விதமாக … Read more

கர்நாடகாவில் ஜெய் பாரத் பேரணி: எம்.பி. பதவி இழப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் ‘ஜெய் பாரத்’ பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி ‘ஜெய் பாரத்’ பேரணி மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார். அவர் … Read more

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்” – பிரதமர் மோடி

போபால்: உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இன்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்த வந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1 என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் … Read more

‘வந்தே பாரத் ரயில் – வளரும் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு’ பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேசத்தின் போபால் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 11வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் திறமை, திறன் மற்றும் நம்பிக்கையை வந்தே பாரத் … Read more

காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத்சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை

பஞ்சாப்: காங். பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒருவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

ராம நவமியில் சர்ச்சைப் பேச்சு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்கு

புதுடெல்லி: ராம நவமி விழாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் எம்எல்ஏ ராஜா சிங் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153-A (இரு பிரிவினருக்கு இடையே மதம், இனம், பிறப்பிடம், வாழ்விடம், மொழி சார்ந்து வெறுப்பைத் தூண்டுதல்), சட்டப்பிரிவு 506 (குற்ற மிரட்டல்) ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய … Read more

"சக்கர வியூகம்".. ஜாதி காய்களை நகர்த்தும் பாஜக.. காங்., எடுக்கும் "பிரம்மாஸ்திரம்".. தகிக்கும் கர்நாடகா

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் அடித்து வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் இது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒருவிதத்தில் வாழ்வா சாவா தேர்தல்தான். எனவே, கர்நாடகாவை எந்தவிதத்திலும் விட்டுவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாஜக ஜாதி காய்களை வைத்து ஆட தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸோ பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பாஜகவும் காங்கிரஸும் தங்கள் கையில் இருக்கும் ஆயுதங்களை கொண்டு வெறித்தனமாக … Read more

வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவனந்தபுரம்: வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.

ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்

புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ”பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் … Read more