மணிப்பூரில் தொடர்ந்து கலவரம்… நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு..!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது. கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.. கலவரத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். … Read more

நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தம்..!!

மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’யில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே பல இடங்களில் ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. தர்பங் பகுதியில் … Read more

தேசியவாத காங். தலைவர் பதவி – ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக சரத் பவார் அறிவிப்பு

மும்பை: கட்சித் தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். முன்னதாக, காலையில் நடந்த கட்சிக் குழு கூட்டத்தில் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “எனது ராஜினாமா அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்களுக்குள்ளும் மக்களிடத்திலும் ஓர் அமைதியின்மை ஏற்பட்டது. எனது நலன் விரும்பிகள் … Read more

டெல்லி: ‘மசாலா பொருட்களில் மாட்டுச் சாணம்’.. கோமியத்தால் வந்த சோதனை.. வைரலான வீடியோ.!

மசாலா பொருட்களில் மாட்டுச் சாணம் இருப்பதாக பரவும் வீடியோவை கூகுள் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்து மதத்தில் பசுமாடு தெய்வமாக கருதப்படுகிறது. பசுவில் இருந்து பெறப்படும் பால், கோமியம், சானம் உள்ளிட்ட அனைத்தும் இந்து மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் பசுவின் கோமியத்தை குடிப்பது, சாணத்தை உடலெல்லாம் பூசிக் கொள்வது, மாட்டின் சாணத்தில் கேன்சருக்கான மருந்துகள் தயாரிக்கலாம் இந்துத்துவ வாதிகள் கூறியும், செயல்படுத்தியும் வருகின்றனர். சாணிப்பூசிக் கொண்டும், கோமியம் … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவலை பகிர்ந்த விஞ்ஞானி? – நடவடிக்கை எடுத்த டிஆர்டிஓ

Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.   

சிறையினுள் தாதா தில்லு தாஜ்புரியா கொலை தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!

திகார் சிறையினுள், தாதா தில்லு தாஜ்புரியா கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. டெல்லியின் முக்கிய தாதாவான தில்லு தாஜ்புரியா, கடந்த மே 2-ம் தேதி சிறையினுள் மற்றொரு ரவுடி கும்பலால் இரும்பு கம்பியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்று அதுதொடர்பான இரண்டாவது சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. அதில், தாக்குதலால் நிலைகுலைந்த தாஜ்புரியாவை சிறையின் மற்றொரு பகுதிக்கு … Read more

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் :திருமாவளவன்..!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரியும், ஏழை நோயாளிகள் இறக்க நேரிட்டால் அவர்கள் உடலை கொண்டு செல்ல வழக்கத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்கக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் எதிரே … Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மகன் சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், … Read more

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை – வழக்கை விரைந்து விசாரிக்க மாநில அரசு மனு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு … Read more

70 அடி ஆழக் கிணறு… குடிநீருக்கு வேற வழியில்ல… 10 வருஷமா கதறும் நாசிக் மக்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அடுத்த கங்கோத்பாரி கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் தினசரி குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள 70 அடி ஆழ கிணறு மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கிறது. அதிலும் ஆழமான பகுதியில் தான் தண்ணீர் உள்ளது. இதை எடுப்பதற்கு அந்த கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து விஷயங்களை அதிர்ச்சியூட்டுகின்றன. அதாவது, கிணற்றின் பக்கவாட்டு சுவர்களின் மேல் அச்சமின்றி ஏறி நின்று … Read more