நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி உர மானியம்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் … Read more

புரியிலிருந்து – ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று மதியம் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் சென்றடையும். 20ம் தேதி முதல் வந்தேபாரத் ரயில்சேவை தொடங்கப்படும் எனவும், வியாழன் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஹவுரா – நியூ ஜல்பைகுரி … Read more

7.97 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து

புதுடெல்லி: லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய கோடீஸ்வரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 30 மில்லியன் டாலருக்கு (ரூ.25 கோடி) மேல் சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உள்ளது. 2027-ல் இது … Read more

Karnataka CM: முதல்வராய் முந்தும் சித்தராமையா! துணை முதல்வராகும் டிகே சிவக்குமார்

Siddaramaiah To Be Karnataka CM: ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி! கர்நாடகாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா வழிநடத்துவார், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக மாநிலத்தை வழிநடத்துவார்

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

கேரள மாநிலம் கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாயின. உளிய கோவில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து சேமிப்பு கிடங்கில் மருந்துகள்  மட்டும் இன்றி மருந்து தயார் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல் வகைகளும் பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கமாகும். இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய துவங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே கடும் போட்டி

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. ஒக்கலிகா, லிங்காயத், குருபா, பட்டியலின‌ சாதி சங்கங்களும், மடாதிபதிகளும் தங்களது சாதியை சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். முஸ்லிம் அமைப்பினர் தங்களது … Read more

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் குழந்தை சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை: அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் மம்தா உத்தரவு

கொல்கத்தா: ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் தங்கிபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ் சர்மா. இவரது 2 மகன்களுக்கும் கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரு குழந்தைகளும் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குணமடைந்த ஒரு குழந்தையுடன் தேவ் சர்மாவின் மனைவி சொந்த ஊர் … Read more

சவுரவ் கங்குலிக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கும் மேற்கு வங்க அரசு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை ‘Z’ பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கங்குலிக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு காலாவதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவிஐபி-யான கங்குலிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு சார்ந்த மறு ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய முடிவின் படி கங்குலிக்கு 8 … Read more

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க 2 நிறுவனங்கள் ஆர்வம்…!

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் மருத்துவமனை பரிசோதனைக்காக இரு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பனாஸியா பயோடெக் ஆகிய நிறுவனங்கள் 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளன. இதனையடுத்து வயது வந்தோருக்கான தடுப்பூசி சோதனை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாகத் மருத்துவக் … Read more

கர்நாடகா முதல்வர் பதவி இழுபறி | இன்று ராகுலை சந்திக்கும் சித்தராமையா, சிவகுமார்

புதுடெல்லி: கர்நாடகவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி மூன்று நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தியை சந்திக்கின்றனர். கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி நடந்த தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தலைதூக்கத் தொடங்கியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, … Read more