ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்: பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை (மார்ச் 29) தெரிவித்தார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதன்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “அது பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்” … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: பாஜக மாஸ்டர் பிளான்… காங்கிரஸ் அவ்வளவு தான்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் வியூகம் என்னவென்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1983 முதல் 2018 வரை ஒருமுறை கூட பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை. அதை மாற்றி காட்டும் அளவிற்கு சிறப்பான செயல்திட்டங்களை உருவாக்கி அக்கட்சி செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. டபுள் எஞ்சின் அரசு இதுபற்றி அக்கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரிக்கையில், தனிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றால் ஓர் அரசு எந்த அளவிற்கு நலத்திட்டங்களை … Read more

கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்

டெல்லி: கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்க மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

பயங்கரவாதத்துக்கான காரணங்களை நியாயப்படுத்தக் கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனை நியாயப்படுத்தக் கூடாது என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. 2001-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இந்தியா கடந்த 2017, … Read more

விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டம்

டெல்லி: பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர கூடாது என கூறி பாஜக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச பெற்ற வழக்கில் நேற்று முன்தினம் பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா கைது செய்யப்பட்டார். நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் ஆணையிட்டது. 

வரும் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை..!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் தூக்கு பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்கள், தெர்மாகோல் தட்டுகள், உணவுப் பொருட்களை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கிரீம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தெர்மாகோல் அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் முள் … Read more

“நீங்களா ஊழலுக்கு எதிரானவர்?” – பிரதமர் மோடி மீது பட்டியலிட்டு கார்கே ஆவேசம்

புதுடெல்லி: “ஊழல் புரிந்த தனிநபர்களின் குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்களின் மீது அமலாக்கத் துறையை ஏவி விடுகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் தொடர்ச்சியாக இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதானியின் ஷெல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தமானது? லலித் மோடி, நீரவ் மோடி, … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: காங்கிரஸ் அதிரடி வியூகம்… சிக்கலில் பாஜக!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வழக்கம் போல் காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாகவே களம் அமைந்துள்ளது. ஓல்டு மைசூரு மண்டலம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு வட்டம் இருக்கிறது. இருமுனைப் போட்டி இதனால் மற்ற பகுதிகளில் காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவுகிறது. கர்நாடக … Read more

சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர ரூ.15,000 மானியம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சீமைக்கருவை மரங்களை அகற்றி நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர ஹெக்டேருக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது: மக்களவை செயலர் அறிவிப்பு

புதுடெல்லி: லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலாளர் இன்று (மார்ச் 29) நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள மக்களவை செயலரின் அறிக்கையில், “முகமது ஃபைசல் பி.பி,யின் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு தடைவிதித்து ஜன.25, 2023-ல் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, 2023ம் … Read more