மரணத்திலும் இணைப்பிரியா நட்பு.. இறந்த நண்பனுடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்.. கதறி துடித்து உயிரிழந்த பரிதாபம்!

லக்னோ: நண்பன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவரை எரியூட்டும் மேடையிலேயே விழுந்து தனது உயிரை நீத்திருக்கிறார் இளைஞர் ஒருவர். என்ன நடந்தது? உத்தபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார் லோதி (44). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கெளரவ் ராஜ்புட் (42) என்பவரும் பால்ய கால நண்பர்கள். இருவருமே சிறு வயது முதலே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் இவர்கள் பயின்றுள்ளனர். எப்போதுமே இருவரும் ஒன்றாகதான் இருப்பார்களாம். அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக … Read more

செங்கோல் செய்து கொடுத்தவரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மரியாதை..!

புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.  

“சட்டம் – ஒழுங்கு உங்கள் பொறுப்பு ஆளுநரே” – டெல்லி சிறுமி படுகொலை குறித்து கேஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் வருத்தமானது, துரதிர்ஷ்டவசமானது. கிரிமினல்கள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். காவல் துறை மீதான பயம் போய்விட்டது. துணைநிலை ஆளுநர் அவர்களே, சட்டம் – ஒழுங்கு தங்கள் … Read more

அட கடவுளே… 157 பள்ளிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல… அதிர வைக்கும் 10ஆம் வகுப்பு ரிசல்ட்!

குஜராத் மாநில 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. குஜராத்குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் வெறும் 64.62 சதவீத மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.​ … Read more

ரத்தத்தை உறைய வைக்கும் தில்லி கொலை… பொது இடத்தில் 16 வயது காதலியை கொடூரமாக குத்தி கொன்ற நபர்…!

வடக்கு டெல்லியின் ரோகினியில் உள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவான மிகவும் அதிர்ச்சி தரும் காட்சிகள், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் ஒரு பிஸியான பாதையில் சிறுமியை அவளது காதலன் சாஹால் கொடூரமாக தாக்கி கொல்வதை காட்டுகிறது, ஆனால் அவளைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

பாஜக முதலமைச்சர்கள்- துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜகவின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்டக்கூட்டம் நேற்றிரவு டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,  வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து குடிமக்களின் நலன்கள் குறித்து பாஜகவினருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல முக்கியமான கருத்துகளை  தெரிவித்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். Source link

டெல்லி சிறுமி படுகொலை: விசாரணைக் குழு அமைத்தது தேசிய மகளிர் ஆணையம்

புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம் குறித்து துரிதமாக, நியாயமாக விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் டெலினா கொன்குப்த் தலைமையிலான மூவர் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் விசாரணை நடத்துவர். கூடவே, அவர்கள் டெல்லி காவல் துறையினரையும் சந்தித்து … Read more

சுய மரியாதையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர் வீர சாவர்க்கர்.. பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: சுய மரியாதையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர் வீர சாவர்க்கர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரது செயல்கள் மூலம் இன்று வரை மக்கள் மனதில் நாயகனாக அவர் வாழ்ந்து வருகிறார் எனவும் மோடி கூறினார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் ஒருவரான சாவர்க்கரின் பிறந்த நாளன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை வைத்ததாலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு … Read more

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 9 ஆண்டுகள் நிறைவு..!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆண்டு சாதனைகளையும் பணிகளையும் விளக்கி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேச உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையிலும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் மாநில பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள் என்று … Read more

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுமதி இல்லை: டெல்லி போலீஸ்

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் போரட்டத்துக்கு அவர்கள் அனுமதி கேட்டால், ஜந்தர் மந்தர் தவிர வேறு இடத்தில் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23-ம் … Read more