40 சதவீத ஊழலில் திளைத்த‌ பாஜகவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் 40 சதவீத ஊழலில் திளைத்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகாவில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று குல்பர்கா, பெல்லாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் உரையாற்றினார். குல்பர்காவில் கொட்டும் மழையில் நனைந்தவாறே ராகுல் … Read more

மழையினால் ஸ்தம்பித்து போயுள்ள ஹைதராபாத்… தயார் நிலையில் அவசர கால குழு..!!

ஹைதராபாத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என  கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவர் கைது…!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணியின்போது அமெரிக்க டாலரை ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், ஆபரணங்களை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் நடைபெற்றது. இதில், தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், காணிக்கையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் சந்தேகத்திற்கிடமாக எழுந்து வெளியே சென்றதை, சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த … Read more

கல்லூரி ஆண்டு விழாவில் மோதல்… மாணவன் கொலை!!

கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 22 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் காணப்பட்டனர். இந்த சூழலில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கம்பு, கத்தி, உருட்டு கட்டை என இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். சக … Read more

ஸ்மார்ட் வகுப்பில் திடீரென ஓடிய ஆபாசப்படம்!!

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பில் திடீரென ஆபாசப்படம் ஓடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் கோபிந்த்புரா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ராஜீவ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு மூலம் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அவர் தனது மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவரது மொபைல் போனில் இருந்த ஆபாச படம் தெரியாமல் திரையில் ஒளிபரப்பானது. இதனை … Read more

'போலியான வாக்குறுதிகளை அளித்து கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்' – தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பீதர்: கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீதர் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு இங்கு ஆட்சி செய்த, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் மக்களை ஏமாற்றின. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அந்தக் கட்சிகள் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை பாஜக நிறைவேற்றி வருகிறது. காங்கிரஸ் முற்றிலும் … Read more

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடிகள் முக்தாருக்கு 10 ஆண்டு, அப்சல் எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை!

லக்னோ: உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல ரவுடி முக்தார் அன்சாரி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கிருஷ்ணானந்த் ராய் வெற்றி பெற்றார். அதன்பின் கடந்த 2005 நவம்பர் 29-ம் தேதி கிருஷ்ணானந்த் ராய் உட்பட 7 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக முக்தார், அப்சல் உள்ளிட்டோர் மீது … Read more

“மக்களின் உணர்வின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி” 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!

மன் கி பாத்-ன் 100-வது அத்தியாய ஒலிபரப்பில் பேசிய பிரதமர் மோடி, 100 கோடி மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார். மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, இன்று 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. மனதின் குரல் தனக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல எனக்கூறிய பிரதமர், அது ஒரு நம்பிக்கை எனவும், மக்களுக்கு … Read more

“இது மனதின் ஆன்மிகப் பயணம் ஆகிவிட்டது” – மனதின் குரல் 100-வது நிகழ்வில் பிரதமர் மோடி | முழு உரை

புதுடெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சி எனது ஆன்மிகப் பயணமாக ஆகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது முழு உரை: இன்று மனதின் குரலின் 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன. முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன். உணர்வுகளில் அமிழ்ந்து போனேன். … Read more

மன் கி பாத் 100: பிரதமர் மோடி சொன்ன வேலூர் நாக நதி… தமிழக பெண்கள் செஞ்ச அசாத்தியம்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து, மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி ஆல் இந்தியா ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதன் 100வது எபிசோடு இன்று ஒலிபரப்பானது. அதில் உரையாற்றிய பிரதமர் மோடி, 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறது. அக்டோபர் 3, 2014ல் விஜய தசமி நாளில் மனதின் குரல் நிகழ்ச்சியை … Read more