அழகு கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு! காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்

Film Tourism In Kashmir Valley: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக 300க்கும் மேற்பட்ட புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அசோக் கெலாட் அரசுக்கு 15 நாள் கெடு விதித்தார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கும் அசோக் கெலாட் அரசுக்கும் சச்சின் பைலட் இம்மாத இறுதிவரை கெடு விதித்துள்ளார். ஊழலுக்கு எதிராகவும் வேலைவாய்ப்புக்கான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகவும் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் சச்சின் நடைபயணம் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிலோ மீட்டர் நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமது கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் ஏற்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என சச்சின் … Read more

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டதா ? இனி கவலை வேண்டாம்..!!

டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விரைவில் அறிமுகம் ஆகும் இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டியது என்னவென்றால், CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை … Read more

மருத்துவமனைக்கு 7 கி.மீ. தூரம் நடந்து சென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்துசென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் மயக்கமடைந்து உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் கிராமங்களில் சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லை. இதன் காரணமாக பால்கர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்திருக்கிறார். பால்கர் மாவட்டம், ஓசார் வீரா கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் 9 மாத … Read more

கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா ?

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாரான நிலையில், முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா இடெல்லி சென்றுள்ளார். கர்நாடக காங்கிரஸ் … Read more

'இந்திய விண்வெளி துறைக்கு ரூ.1 செலவிட்டால் நாட்டுக்கு ரூ.50 மதிப்பில் பயன்' – விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை: இந்திய விண்வெளி துறைக்கு ரூ.1 செலவிட்டால் நாட்டு மக்களுக்கு ரூ.50 மதிப்பில் பயன் கிடைக்கும் என்று விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற நூலை எழுதியுள்ளனர். தருமபுரி ‘தகடூர் புத்தகப் பேரவை’ சார்பில், இந்நூலின் இணையவழி அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் அறிவுமணி நூலை … Read more

டெல்லிக்கு செல்லாதது குறித்து காரணம் கூறிய டி.கே. சிவக்குமார்..!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது . ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது. அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் … Read more

முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை..!! எங்கு தெரியுமா ?

பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதர் மோடி மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அதிக விலைக் கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே … Read more

காங்கிரஸ், பாஜக, மஜத, சுயேச்சைகள்‌ 185 பேர் போட்டி – கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழையும் 10 பெண் எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 185 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 10 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, சுயேச்சை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக‌ 185 பெண்கள் களத்தில் இருந்தனர். ரூபா கலா 2-வது முறையாக…: இதில் காங்கிரஸ் சார்பில் பெலகாவி ஊரகத் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமி ஹெம்பல்கர், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட ரூபா கலா, … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு உதவி செய்த 3 பேர் கைது – ஒடிசா காவல் துறை நடவடிக்கை

ஜாஜ்பூர்: வெவ்வேறு பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி அவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமுறை கடவுச்சொற்களை (ஓடிபி) பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிர்ந்ததாக குற்றம்சாட்டி, 3 பேரை ஓடிசா காவல் துறையின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 19 மொபைல் போன்கள், 47 சிம்கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள்,லேப்டாப்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. இவர்கள் மூவரும், ஒடிசாவில் உள்ள கடைகளில் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டையைக் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். அதன் மூலம், மின்னஞ்சல், சமூக வலைதளம், … Read more