அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு கெடு : வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும்..!!

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி … Read more

மாடுகளுக்கு ஒரு நாள் வார விடுமுறை – ஜார்க்கண்டில் கிராம மக்கள் பாசம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு ஒரு நாள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துரிசோத் கிராமத்தைச் … Read more

திருப்பதியில் ஏப்ரல் 1 முதல்… மீண்டும் வருகிறது அலிபிரி இலவச தரிசன டோக்கன்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விரைவில் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அலிபிரி இலவச டோக்கன்அதில், அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச டோக்கன்கள் (Divya … Read more

ரூ.8 கோடி சிக்கிய வழக்கில் கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன அலுவலகத்தில்  தனியார் நிறுவன பங்குதாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரியும் பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் மகனுமான பிரசாந்த் மாடாலை லோக்ஆயுக்தா போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பணம், தங்கம், … Read more

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை – கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது  மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இந்த நிலையில், … Read more

சாவர்க்கர் பற்றி விமர்சனம் – ராகுலுக்கு உத்தவ் எச்சரிக்கை

நாசிக்: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள … Read more

அதிகரிக்கும் கொரோனா: அடுத்த மாதம் 2 நாள்கள் மட்டும்.. முடிவை அறிவித்த ஒன்றிய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. கொரோனா மூன்று அலைகள் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். உறவுகளை இழந்து தவித்தனர். கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். பல ஆண்டுகள் சேமிப்பு கரைந்து கடனாளிகளாக மாறினர். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரே பாதிப்பு கட்டுக்குள் வந்தது. உயிரை காப்பாற்றிய தடுப்பூசிகள்! இரண்டு டோஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் … Read more

குட்கா மேல்முறையீட்டு வழக்கு ஏப்.14க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி:  தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை ஐேகார்ட் ரத்து செய்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஒத்திவைக்க கோரி புகையிலை நிறுவனங்கள் தரப்பில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது இதையடுத்து வழக்கு ஏப்ரல் 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வரி கட்டாமல் இழுத்தடித்த பால் வியாபாரி.. எருமையை ஓட்டிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்: எங்கு?

அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல … Read more

பச்சிளம் குழந்தையைக் கொன்ற சிறுமிகள்.. பொம்மை போல நினைத்து விளையாடிய போது நேர்ந்த விபரீதம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளும் குழந்தையைக் குளிப்பாட்ட முயற்சித்தபோது, குழந்தை அவர்களிடமிருந்து நழுவி வாளிக்குள் விழுந்துவிட்டது. நீர் நிறைந்த வாளிக்குள் இருந்து குழந்தையை வெளியே எடுக்க முடியாததால் சிறுமிகள் பீதியடைந்துள்ளனர். பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து வாளியின் மீது ஒரு மூடியை போட்டு மூடி வைத்துவிட்டனர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 22-ம் தேதி இரண்டு மாத கைக்குழந்தையை காணவில்லை என பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காணாமல்போன … Read more