“எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே நல்லுறவு” – சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

டெல்லி: ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா – சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு … Read more

மோடி ஒரு "விஷப்பாம்பு".. பகிரங்கமாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே.. கொதித்து போன பாஜகவினர்!

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக, காங்கிரஸை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தற்போது அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “பாஜகவும், … Read more

Karnataka Election 2023: தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை?

Karnataka Election 2023:  கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தபோது ஏன்  அண்ணாமலை அமைதி காத்தார்?

“அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதே பாஜகவின் செயல்திட்டம்” – பிரதமர் மோடி

இந்தியாவை வறுமையில் இருந்து விடுவித்து, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதை செயல்திட்டமாக கொண்டு பாஜக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில பாஜக தொண்டர்களிடையே காணொலிக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர், இதர கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதை செயல் திட்டமாக கொண்டுள்ளதாகவும், பாஜக இளைஞர்களின் திறனை முறைப்படுத்தி பயன்படுத்த செயல்திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஊழலை ஒழிப்பதற்கு விருப்பம் காட்டாமல் இருந்ததாகவும், அக்கட்சியே ஊழலின் ஆதாரமாக திகழ்ந்ததாகவும் அவர் … Read more

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”..!!

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு எரித்தால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பல் ஆகிவிடும்.இதை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அடுப்புகளை தயாரிக்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். சூலா அடுப்புகளை தயாரிக்கும் பணி சுடுமண் சிற்பக் … Read more

கர்நாடகாவில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மைசூருவில் உள்ள உணவகத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். கர்நாடகாவில் வருகிற மே 10‍-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் மைசூருவில் பிரபலமான … Read more

இந்தியாவிலேயே முதல்முறை..!! 2 மணி நேரம் வேலை குறைப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.அதாவது 8 மணி நேரத்திற்கு பதில் 6 மணி நேரம் வேலை பார்த்தல் போதும். அதன்படி காலை 9 மணிக்கு வேலை என்பதை 11 மணி என்று மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி வரிப் பணத்தை செலவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால், அரசியலுக்கு வந்தபோது நேர்மை மற்றும் எளிமையை ஊக்குவிப்பேன் என்றார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். தன்னை மகாராஜா என நினைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வமாக இருக்கிறார். கேஜ்ரிவால் தனது … Read more

பெங்களூரு – சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்

Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த காவலரின் உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்நீத்த மாவட்ட ரிசர்வ் காவலரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேர் உள்பட 11 உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவலரின் உடலை பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். உயிர்நீத்தவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் … Read more